Archive For ஜனவரி 26, 2015

அச்சுதம் கேசவம் – அத்தியாயம் பனிரெண்டு

By |

அச்சுதம் கேசவம் – அத்தியாயம் பனிரெண்டு இரா.முருகன் 1964 ஏப்ரல் 3 வெள்ளிக்கிழமை சின்னச் சங்கரன் அவன் அப்பா சாமிநாதனுக்கு திவசம் கொடுத்துக் கொண்டு உட்கார்ந்திருக்கிறான். அப்பா சாமிநாதன் தி செகண்ட். பிள்ளையான இவன் சங்கரன் தி செகண்ட். செகண்டா, இல்லை, ஆறா, ஏழா? தெரியாது. பிரிட்டீஷ் ராஜ வம்சம் மாதிரி, போன தலைமுறையில் வைத்து வழங்கி வந்த பெயர் தான் வம்சம் மேலும் தழைக்க வைக்க உதவும் என்கிறார்கள், பெயர் வைக்கப் பணிக்கப் பட்டவர்கள். சின்னச்…




Read more »

அச்சுதம் கேசவம் – அத்தியாயம் பதினொன்று

By |

அச்சுதம் கேசவம் – அத்தியாயம் பதினொன்று இரா.முருகன் ஏப்ரல் 2 1964 வியாழக்கிழமை அரசூர் ஜீவித்திருந்தது. காலம் கடந்து ஜீவித்திருந்தது. எல்லோருக்கும் ஏதாவது ஒரு கணத்தில் பிரியமாகும் கிழவனைப் போல. நித்தியப்படிக்குக் கரித்துக் கொட்டி, எப்போ ஒழிவானோ, எழவு ஓயுமோ என்று அங்கலாய்க்கிற சகலமானவருக்கும் பிருஷ்டத்தைக் காட்டிக் கொண்டு, நிதானமாக வேட்டி திருத்திக் கட்டிக் கொள்கிற சோனியான கிழவன் போல. எல்லோரிடமும் நேசத்தை யாசித்து, ஒரு வெகுளிச் சிரிப்போடு தளர்ந்து நிற்கிற வயசனாக. வயோதிகச் சிரிப்பின் வசீகரத்தோடு…




Read more »

அச்சுதம் கேசவம் – அத்தியாயம் பத்து

By |

அச்சுதம் கேசவம் – அத்தியாயம் பத்து எத்தனைவது முறையாகவோ லண்டன். வைத்தாஸ் உலகத்தில் எங்கே இருந்தாலும் தேடிக் கண்டுபிடிக்கப் பட்டு உடன் லண்டன் அனுப்பி வைக்கப் படுகிறான். போன வருடம் ஆகஸ்டில் இந்தியா போயிருந்தபோது அப்படித்தான் நடந்தது. அவன் அம்பலப்புழையில் இருந்தது பற்றி வைத்தாஸின் அரசாங்கத்துக்கு மூக்கு வியர்த்து விட்டது. உடனே கிளம்பி லண்டன் போ என்று விரட்டினார்கள். மேல்சாந்தியோடு பேச ஆரம்பித்ததை அரைகுறையாக முடித்துக் கொண்டு திரும்ப வேண்டிப் போனது அப்போது. அம்பலப்புழை மேல்சாந்தி மகன்,…




Read more »

அச்சுதம் கேசவம் – அத்தியாயம் ஒன்பது

By |

அச்சுதம் கேசவம் – அத்தியாயம் ஒன்பது இரா.முருகன் மார்ச் 26 1964 வியாழக்கிழமை அது பிசாசு பிடிச்ச வண்டி ஒண்ணும் இல்லை என்றார் அமேயர் பாதிரியார். ரொம்பத் தெளிவான வார்த்தைகள். அவர் இருக்கப்பட்ட பிரதேசத்தில் இப்படியான சில்லுண்டி வினோதம், வேடிக்கை எதுவும் நடக்காது. நடக்கிற எல்லாவற்றுக்கும் காரண காரியம் இருக்கும். அற்புதங்கள் ரோம் நகரில் இருந்து மடாலய அறிவிப்போடு ஞாயிற்றுக்கிழமை தவிர்த்த பிற தினங்களில் எப்போதாவது நிகழக் கூடும். அவற்றில் யந்திரங்கள் சம்பந்தப்பட்டிருக்காது. அவர் முன்னால் நின்றபடி…




Read more »

அச்சுதம் கேசவம் – பம்பாய் : அத்தியாயம் 8

By |

அச்சுதம் கேசவம் – பம்பாய் : அத்தியாயம் 8 மார்ச் 11 1964 புதன்கிழமை திலீப். டைப்ரைட்டரோடு உட்கார்ந்திருந்த பெண் கையை நீட்டி டெலிபோன் ரிசீவரை பத்திரமாக அதனிடத்தில் வைத்துவிட்டுக் கண்ணாடிக் காரர் பக்கம் திரும்பிச் சொன்னாள். திலீப். மூடிய கதவு ஓரமாக மர மேஜை போட்டு இருந்த கண்ணாடிக்காரர் குரல் நடுங்கக் கூப்பிட்டார். திலீப் எழுந்து நின்றான். அங்கே நீள பெஞ்சுகளில் காத்திருந்தவர்களுக்கு இடையில் இருந்து இன்னும் ஐந்து பேர் எழுந்து நின்றார்கள். பம்பாயில் இருக்கப்பட்ட…




Read more »

அச்சுதம் கேசவம் – சென்னை – அத்தியாயம் 7

By |

அச்சுதம் கேசவம் – சென்னை : அத்தியாயம் 7 திரும்பவும் போயாச்சா? பேஷ் கற்பகம் காட்டுக் கூச்சலாகச் சத்தம் போட்டாள். அடிக்காதேடி. அடிக்காதேடி. தெரியாமப் பண்ணிட்டேன். ஹாலில் பிரம்பு நாற்காலியைப் பிடித்துக் கொண்டு குனிந்து நின்றார் நீலகண்டன். பயத்தோடு அவளைப் பார்த்தார். அவசரமாக உள்ளே போனாள். அது உள் பக்கமா, வெளியே போகிற பாதையா? எதோ ஒன்று. அங்கே சுவரில் ஆணி அடித்து நீலகண்டனின் சட்டை தொங்கும். பக்கத்தில் நீளமாகக் கயிறு கட்டி பெயர் மறந்து போன…




Read more »