Archive For டிசம்பர் 17, 2014

நீல.பத்மநாபனுடன் ஒரு நாள் – பகுதி 3

By |

நீல.பத்மநாபனுடன் ஒரு நாள் – பகுதி 3

(காவ்யா இலக்கியக் காலாண்டிதழ் அக்டோபர் – டிசம்பர் 2014) இரா.முருகன் : ‘தலைமுறைகள்’ நாவலில் வரும் உண்ணாமலை ஆச்சி, திரவி இந்த பாத்திரங்கள்.. நீல.பத்மநாபன்: கூனாங்கண்ணி பாட்டா.. திரவியம் .. இந்த மாதிரி கதாபாத்திரங்கள் எல்லாம் அசல் தமிழ் தான்.. தமிழ்லே தான் பேச்சு.. பேச்சுன்னா stream of consciousness .. நனைவோடை. சிலர் கேட்டாங்க.. சார் நீங்க வேணும்னா கதாபாத்திரங்கள் பேச்சுக்கு அந்த வட்டார வழக்கைக் கொடுக்கலாம்.. ஆனா நாவலாசிரியராக நீங்க சொல்வதாக இருக்கும் இடஙக்ளிலும்…




Read more »

நீல.பத்மநாபனுடன் ஒரு நாள் – பகுதி 2

By |

நீல.பத்மநாபனுடன் ஒரு நாள் – பகுதி 2

நீல.பத்மநாபனுடன் ஒரு நாள் – பகுதி 2 (காவ்யா இலக்கியக் காலாண்டிதழ் அக்டோபர் – டிசம்பர் 2014) கமல்:நாடகம்னு சொல்லும்போது சுயநலமாக ஒரு கேள்வி.. ஷண்முகம் அண்ணாச்சி நாடகங்கள்லே என்னெல்லாம் பார்த்திருக்கீங்க? நான் அந்தக் குழுவிலே இருந்திருக்கேன் நீல:அப்படியா? ஔவையார், மனிதன்.. எல்லாம் பார்த்திருக்கேன்..நீங்க அதிலே எல்லாம் நடிச்சிருக்கீங்களா? கமல்: ஆமா, பஸ் டெர்மினஸுக்கு வர்றதுக்கு முன்னாடி, கடைசியாக ஒரு ஸ்டேஜ். பத்து பைசா டிக்கெட் வாங்கி எப்படியோ ஏறிட்டேன் .. நீல:களத்தூர் கண்ணம்மா பார்த்திருக்கேன் கமல்:அதுக்கு…




Read more »

அற்ப விஷயம்-30

By |

அற்ப விஷயம்-30 இரா.முருகன் நரகல் பணியாளர்கள் மும்முரமாக வேலையில் முழுகி முத்தெடுத்துக் கொண்டிருக்கும்போது செல்ஃபோன் சிணுங்கும். அல்லது முக்கியமான ஆபீஸ் மீட்டிங்கில் அனல் பறக்க விவாதித்துக் கொண்டிருக்கும்போது சத்தமில்லாமல் அலைபேசி அலைபாய்ந்து துடிக்கும். யாரோ அவசரமாகத் தொலை பேச அழைக்கிறார்கள். டென்ஷனோடு ஃபோனை எடுத்து ஹலோ சொன்னால் ஒரு பெண்குரல் வணக்கம் சொல்லும். ‘சார், ஏபிசிடி பேங்கிலிருந்து பேசறோம். பிளாட்டினம் கிரடிட் கார்ட் எந்த வித சார்ஜும் இல்லாமல் கொடுக்கறோம். நீங்களும் வாங்கிக்குங்களேன்’. எனக்குத் தெரிந்து பலபேர்…




Read more »

அச்சுதம் கேசவம் – அத்தியாயம் 3

By |

அச்சுதம் கேசவம் – அத்தியாயம் 3

டைப்ரைட்டர் சத்தம் நின்றது. இரண்டு அத்தியாயம் முடிந்த சந்தோஷத்தோடு வைத்தாஸ் எழுந்தான். அவனுடைய எட்டாவது ஆங்கில நாவல் கர்கடக மழையில் சொட்டச் சொட்ட நனைந்து கொண்டு ஆரம்பித்திருக்கிறது. கர்கடகம். மெல்ல சொல்லிப் பார்த்தான். சரியாக வருகிறது. நந்தினி, எழுந்திருக்கலியா? கட்டில் பக்கம் போய்க் குனிந்தான். உஷ்ணமேறிய கரங்கள் போர்வைக்குள்ளிருந்து நீண்டு கழுத்தைச் சுற்றி அணைத்து, வலுவாக இழுத்தன. கர்கடகம் மட்டும் போதாது. மற்றதும் வேணும். மறுபடியும். நந்தினி சிணுங்கினாள். ஞாயிற்றுக்கிழமைக் காலை போகத்தோடு விடிகிறது. நான் எம்..எம்பிரா…..




Read more »

நீல.பத்மநாபனுடன் ஒரு நாள் – பகுதி 1

By |

நீல.பத்மநாபனுடன் ஒரு நாள் – பகுதி 1

நீல.பத்மநாபனுடன் ஒரு நாள் – பகுதி 1 (காவ்யா இலக்கியக் காலாண்டிதழ் அக்டோபர் – டிசம்பர் 2014) இரா.முருகன் குறிப்பு ——————- பிரபலமானவர்களோடு பிரயாணம் போவதில் கொஞ்சம் கஷ்டம் உண்டு. நிச்சயம் அவர்களால் நமக்குக் கஷ்டம் கிடையாது. நாமும் அவர்களைத் துன்பப் படுத்துவதை மனதில் கூட நினைக்க மாட்டோம். ஆனாலும் ஆயிரம் ஜோடிக் கண்கள் அந்தப் பிரபலத்தின் மேல் நிலைத்திருக்க, கூட நடக்கிற, உட்கார்கிற, ரவா தோசை சாப்பிடுகிற, பேசுகிற, கேட்கிற நமக்கு சடாரென்று ஒரு பயம்….




Read more »

அச்சுதம் கேசவம் – அத்தியாயம் 2

By |

அச்சுதம் கேசவம்  – 2 படகுத் துறை. மழைக்கு முதுகு காட்டிக் கொண்டு நாலு பேர் நிற்கிறார்கள். துணிக்குடை பிடித்தவர்கள். கால் மாற்றி நின்று மழைக்கு நடுவே காயலில் படகுச் சத்தம் கேட்கக் காது கொடுத்து நின்று கொண்டிருக்கிறவர்களை லட்சியம் செய்யாமல் இடி முழக்கத்தோடு மழை நகர்ந்து கொண்டிருக்கிறது. மழை மறைத்த கோடியில் இருந்து நீர்ப் பரப்பில் சலனம். பூம் பூம் என்ற முழக்கம். கோட்டயத்திலிருந்து வரும் படகின் முழக்கம் அது.  திருவனந்தபுரம் போய்க் கொண்டிருப்பது. நீரில்…




Read more »