Archive For ஏப்ரல் 30, 2020

ராமோஜியம் – எழுதி நிறைவு செய்யப்படும் நாவலில் இருந்து ஒரு சிறு பகுதி – திருக்கருகாவூர் 1945

By |

திங்கள்கிழமை ஆபீசில் வேலை மும்முரத்தில் இருந்தபோது ட்ரங்க் கால் என்று பந்துலு சார் அழைத்தார். அவர் இடத்தில் தான் ஆபீஸ் டெலிபோன் வைத்திருக்கிறோம். ”நான் கும்பகோணத்திலே இருந்து விட்டோபா பேசறேன்.. அனா மாவன்னா மளிகைக்கடையிலே இருந்து பேசறேன்..ட்ரங்க் கால் புக் பண்ணி பேசறேன்.. ராமோஜி ராவ்ஜியை தயவா கூப்பிடணும். நான் அவருக்கு ஆப்த சிநேகிதன். அவர் திருக்கருகாவூர் போக, அடுத்த சனிக்கிழமை..”. என்னைப் பேசவே விடவில்லை விட்டோபா. ராமோஜி பேசறேன் என்று நடுவில் பத்து தடவையாவது சொல்லியிருப்பேன்….




Read more »

ராமோஜியம் – வெளியாக இருக்கும் என் அடுத்த நாவலில் இருந்து – திருக்கருகாவூர் 1945

By |

வாசலில் மறுபடியும் சத்தம். ஓசை எழுப்புகிறவர்கள் வாழ்த்தப்படட்டும். தெலக்ஸ் புவனாவின் ஆஸ்தான அறிஞர் ராமண்ணா ஜோசியரும், கூடவே இன்னொரு குடுமிக்காரரும் வாசல் கதவைத் தட்டாமல் தட்டி உள்ளே நுழைந்து கொண்டிருப்பதைக் கவனித்தேன். யாராக இருந்தாலும் வாழ்க. இன்னொரு மணி நேரம் இங்கே என்னோடு பேசிக் கொண்டிருந்தால் போதும். தெலக்ஸ் புவனா அவ்வப்போது வந்து போய் எனக்கும் ரத்னாவுக்கும் நல்ல சிநேகிதமாகி விட்டதால் என் மனதின் அறையைக் காலி செய்து கொண்டு போய் விட்டாள். தேவைப்பட்டால் நேரில் போய்ப்…




Read more »

ராமோஜியம் – 1945 சென்னை – ஒரு பயணம் – சில பகுதிகள்

By |

நான் தொண்டையைக் கனைத்துக்கொண்டு நாயக்கரிடம் கேட்டேன் – ”உங்கள் அவசரத்திலிருந்து நான் தெரிந்து கொண்டது உங்களுக்கு ஸ்த்ரிகளின் சுஸ்வரமான கச்சேரிக்கு வாசிப்பதில் இஷ்டம் தான். அப்புறம் என்னாத்துக்கு காப்பியம், வெண்பா, வெண்டைக்கா எல்லாம்?” ”அதென்ன அப்படிச் சொல்லிட்டீங்க? தெருவிலே ஒரு பொண்ணு எதிர்லே வந்தாலே ஒதுங்கி வழி விட்டுத் திரும்பி சுவரைப் பார்த்துட்டு நிற்பேன்.. நமக்கு ஒத்து வர்றதில்லேங்க” என்றார் நாயக்கர். ”ஏன் சார், நேரே பார்த்துட்டு நடந்தா மரியாதையா, திரும்பி பிருஷ்டத்தை காட்டறது நாகரீகமா?” என்று…




Read more »

ராமோஜியம் – ஒரு புது அத்தியாயத் தொடக்கம் – சென்னை 1945

By |

ராமோஜியம் – ஒரு புதிய அத்தியாயம் 1945 – தொடக்கப் பகுதி அது ஏன் கல்யாணமான அடுத்த வருஷமே பெண்டாட்டியை வயிற்றைத் தள்ள வைத்து அடுத்த தலைமுறை பிறந்து வர ஆவன செய்ய வேண்டும் என்று புருஷனையும் பெண்ஜாதியையும் மற்றவர்கள் எல்லோரும் மறைமுகமாகவோ நேரடியாகவோ நிர்பந்திக்கிறார்கள் என்று தெரியவில்லை. சில பேர் இன்னும் மோசம், கல்யாணப் பத்திரிகையைக் கையில் வாங்கிக் கொண்டதுமே பத்து மாதக் கணக்கைப் போட ஆரம்பித்து, ஞாபகமாக விசாரிக்கப் புறப்பட்டு வந்துவிடுகிறார்கள். கல்யாணம் முடிந்து…




Read more »

ராமோஜியம் நாவல் – இன்னொரு 1942 அத்தியாயம் – மழைக்காலச் சென்னை

By |

“நல்ல வேளை அடிபடலே.. ஊமைக் காயம் தான்.. மயக்கமும் தெளிஞ்சாச்சு.. எதுக்கும் இருக்கட்டும்னு ஒரு தூக்க மாத்திரை கொடுத்திருக்கேன் .. தூங்கினா விட்டுடுங்க.. காலையிலே ஜம்முனு எழுந்திருச்சிடுவார்“ டாக்டர் நாயர் பெரிய மீசையை நீவிக்கொண்டு ரத்னாவையும் தெலக்ஸையும் பார்த்துச் சொன்னார். நான் அவர் மீசை மறைத்ததை எக்கிக் கடந்து ரம்பையையும் மேனகையையும் பார்வையால் அள்ளிப் பருகினேன். ”சாரி சார், ஆறரை மணிக்கு உங்க வீட்டுக்கும் ஜோசியர் வீட்டுக்கும் போய்ட்டு வரலாம்னு கிளம்பினா, பெரிய கை ப்ரட்யூசர் ஒருத்தர்…




Read more »

தாமதமாக வந்தவள் – ராமோஜியம் நாவலில் இருந்து – மதறாஸ் 1942

By |

கடமை தவறாத ஏ ஆர் பி வார்டனாக விசில் ஊதிக்கொண்டு இரண்டு ரவுண்ட் அடிப்பதற்குள் நாலு தடவை ஜோசியர் தட்டுப்பட்டு, ஏதாவது தெரிஞ்சுதா என்று கேட்டார். ஜப்பான் விமானம் குண்டு போட வந்தால் கூட அவருக்கு நியூஸ் ஆகாது. அற்ப சங்கைக்குக்கூட ஒதுங்கமாட்டாமல் அவரை புலனடக்கி நிறுத்தி, எதிர்பார்க்க வைத்துக் கட்டிப் போட்டிருக்கிறாள் புவி. யார் வீட்டு ரேடியோவிலோ அரியக்குடி நேர்த்தியாக ’எல்லே இளங்கிளியே’ என்று பியாகடை ராகத்தில் திருப்பாவை விஸ்தாரமாகப் பாடும் சத்தம், அமைதியான ராத்திரியில்…




Read more »