Archive For ஏப்ரல் 30, 2013

An evening in West Mambalamகச்சேரி

By |

காய்த்ரி வெங்கட்ராகவனின் குரலும் எப்போதும் சிரித்த முகமும் மனதுக்கு இதமானவை. தம்பி ஈரோடு நாகராஜ் பக்க வாத்தியம் வேறே. நேற்று மேற்கு மாம்பலம் அயோத்யா மண்டபத்தில் ஸ்ரீராம நவமி கொண்டாட்டம் இவர்கள் கச்சேரியால் களை கட்டியது. வாசலில் ஆர்ய கௌடா வீதியில் ஒரு செகண்டுக்கு ஒரு மாநகராட்சி பஸ்ஸும், பதினேழரை ஆட்டோ, பத்து மோட்டார் பைக், ஏழு கார் என்று இரண்டு திசையிலும் ஊர்ந்து கொண்டிருக்க, இரண்டரை மணி நேரக் கச்சேரியின் போது யாருமே ஹாரன் அடிக்கவில்லை…




Read more »

Chavadi, Chillu and Sugar Streetசாவடியும் சில்லும் சர்க்கரைத் தெருவும்

By |

சாவடி என்றொரு மேடை நாடகம். கொத்தவால் சாவடி தான் களம். காலம்? 1914 செப்டம்பர் 22 செவ்வாய்க்கிழமைக்கு இரண்டு நாள் சென்று. அந்தத் தேதியின் விசேஷம்? முதல் உலகப் போர் நேரம் அது. ஜெர்மனியக் கப்பல் எம்டன் சென்னைத் துறைமுகத்துக்கு அருகே வந்து குண்டு வீசித் தாக்கிய இரவு. முதல் பிரதியில் சில மாற்றங்கள் செய்ய உட்கார்ந்தால் நாடகம் இன்னும் வளர்ந்து நிற்கிறது! சரி அப்படியே இருக்கக் கடவது. அதற்கு ஒரு தாற்காலிக முற்றும் போட்டு ‘சில்லு’…




Read more »

Eighteen times sixteenபதினாறாம் வாய்ப்பாடு

By |

செந்தில் என்ற செந்தில்நாதன் எங்க ஆபீஸ் பையர். நால்பத்தஞ்சு வயசு கடந்தும் இன்னும் office boy தான். அதிலும் சகல் விதமான காகிதத்தையும் விழுங்கி, சீவல் பேப்பர் தயாரிக்கிற டாக்குமெண்ட் ஷ்ரெட்டர், போட்டோ காப்பியர்-பிரிண்டர் போன்ற மின்னணு சாதனங்களை இயக்க இன்னும் அவரை யாரும் ஏவுவதில்லை. ‘பாவம் அதெல்லாம் தெரியாது’ மனுஷன். எல்லா டேபிளிலும் தண்ணீர் பாட்டில் வைக்கிற காரியத்தை மனமுவந்து செய்வார் தினம் தினம். ஆபீஸ் கஃபேட்ரியாவில் நான் தேநீர் அருந்திக் கொண்டிருந்தபோது செந்திலும் மற்ற…




Read more »

Lalgudiலால்குடி

By |

<!--:en-->Lalgudi<!--:--><!--:ta-->லால்குடி<!--:-->

நாரதர் தும்புரு மீட்டிட நேரெதிர் சேருமோர் நாதம் வயலினில் – யாரவர் ஆலமர் ஆண்டவன் அம்மைக்குச் சொல்லுவான் லால்குடி வந்தாச்சு பார். இரா.முருகன் “பயணம் புரிந்தது பாரத ரத்னம் அயனரன் மாலுக்(கு ) அருகே -வயலினை வாசிக்க லால்குடி விண்ணுக்கு போனதோ! பூசிக்கும் தெய்வமானார் பார்”…. கிரேசி மோகன்…. How can one forget his Brova Barama and the ‘pori parakkum’ thillaanaas? As one living in the adjacent RAmanathan Street,…




Read more »

Foot loose on red soil – 2 : Rajam Iyengar, DS and othersசெம்மண் சுவடு -2 : ராஜம் அய்யங்காரும் ’டி.எஸ், பரமக்குடி’யும்

By |

அரசூர் சுவாரசியமான கிராமம். எங்கள் குலதெய்வம் ஐயனார். பூசாரியார் வேளார். கோவில் மேற்பார்வையாளராக இருந்தவர் (காலம் சென்ற) கிராம கர்ணம் ராஜம் அய்யங்கார். அய்யங்காரை நான் சிறு வயதில் அரசூர் சென்றபோது பார்த்திருக்கிறேன். கெச்சலான, கொஞ்சம் கீச்சுக் கீச்சுக் குரலோடு எகிறி எகிறி நடக்கிற சிவப்புத் தலைமுடிக்காரர். (என் மனதில் என்னமோ அப்படித்தான் பதிவாகி இருக்கிறது). அய்யங்கார் வீடு சிதிலமாகி இருக்கிறது. அவருடைய மகன் ஏசுதாஸ் தரங்கிணி குழுவில் இருந்ததாக அய்யங்கார் சொல்லிய நினைவு. சென்னையோடு போயிருக்கலாம்….




Read more »

Foot loose on red soil – 1 : Charlie and Kandiya Pillaiசெம்மண் சுவடு – 1 : சார்லியும், கண்டியா பிள்ளையும்

By |

(ஏப்ரல் 16 2013 செவ்வாய் – இரவு 9:20) சென்னை ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் ஏசி முதல் வகுப்பு. வெளிச்சம் ஆகக் குறைந்த அந்த குறுகிய கூப்பேயில் சக பயணி எனக்கு முன்பே வந்திருந்தார். முகம் தெரியாத அரையிருட்டில் அவர் மொபைலில் பேசியபடி உட்கார்ந்திருந்தார். சரி, இன்று இரவு முழுக்க இவருடைய பேச்சுக் கச்சேரியைக் கேட்டபடி தான் உறங்க வேண்டி வரும். இருக்கையில் வைத்த என் மொபைல் சத்தமின்றி மெல்ல அதிர்ந்ததை நான் கவனிக்கவில்லை. ஷார்ட்ஸுக்கு மாற பெட்டியில்…




Read more »