Archive For மார்ச் 20, 2011

இன்னொரு குதிரை

By |

  இன்னொரு குதிரை இரா.முருகன் குப்பன் நகரசபைத் தேர்தலில் நாலாம் வார்ட் வேட்பாளராக நிற்பதாக அறிவிப்பான். அஸ்து தேவதைகள் ஆமோதிப்பதாக ராமாமிர்த பாட்டி சொல்வாள். வாஸ்து தேவதைகளைத் தெரிந்தவர்களுக்குக்கூட அஸ்து தேவதைகளை அவ்வளவாகத் தெரியாது. இதுகள் சதா வானத்தில் சஞ்சரித்தபடி, யாராவது ‘எழவு விழ’, ‘நாசமாகப் போக’, ‘சனியன் பிடிக்க’ போன்ற அசுபமான பிரயோகங்களை உதிர்த்தால் உடனடியாக ஆமோதிப்பு தீர்மானம் நிறைவேற்றி அந்தப்படிக்கு காரியங்கள் நடக்க வைப்பதையே முழுநேரம் வேலையாகக் கொண்டவை.




Read more »

தியூப்ளே வீதி – 4

By |

     தியூப்ளே வீதி – 4 இரா.முருகன் வேகுவேகுவென்று சைக்கிள் மிதித்துக் கொண்டு போனோம். மண்டையைப் பிளக்கும் வெய்யில் நெற்றியில் வியர்வையைப் படர்த்தியது. அது கண்ணை மறைத்து வழிய காலேஜுக்குப் பறக்கும்போதுதான் தங்கு ரிக்ஷாவைப் பார்த்தோம். தங்கு என்ற தங்கசாமியை எல்லோருக்கும் தெரியும். வேலிக்காத்தான் செடிகளுக்கு ஊடாக தனித்துத் தெரியும் தரிசு பீடபூமியான ஆவாரங்காடு பகுதியில் பிறந்து வளர்ந்தவன். ஆனால் அவன் சைக்கிள் ரிக்ஷா ஊருக்கே புதுசு.




Read more »