Archive For மார்ச் 24, 2021

அவன் தூக்கி எறிந்த பலா இலையை மேய்ந்த மாடு துரைத்தன பாஷையில் இரைய ஆரம்பித்தது

By |

அவன் தூக்கி எறிந்த பலா இலையை மேய்ந்த மாடு துரைத்தன பாஷையில் இரைய ஆரம்பித்தது

என் நாவல் ‘அரசூர் வம்சம்’ நூலில் இருந்து ஓர் அத்தியாயம் ————————————————————– சாவக்காட்டு வேதக்கார பிராமணனுக்குப் புதையல் கிடைத்திருக்கிறது. ஊர் முழுக்க இதுதான் பேச்சாக இருக்கிறது. சேரமான் காலத்துக் காசு பணம், தங்க ஆபரணங்கள், பளிங்குக் குப்பி. நூதன வஸ்துக்கள். ஒரு பெரிய பானை. அது முழுக்க இந்த சமாச்சாரம் எல்லாம். சாவக்காட்டானைக் குடியிருக்கும் வீட்டுக்குக் குடக்கூலி கொடுக்காத காரணத்தால் வீட்டுக்காரன் சவட்டிப் புறத்தாக்கிய பிற்பாடு இதெல்லாம் கூடி நடந்தேறியிருக்கிறது. புறத்தாக்கிய வீட்டுக்காரனும் வேதத்தில் ஏறிய இன்னொரு…




Read more »

மூதாதையர் உண்டுபோக ஓர் உணவு – அச்சுதம் கேசவம் நாவலில் இருந்து

By |

உங்கம்மா சுமங்கலியாப் போயிட்டா. அப்பாவும் தீர்க்காயுசா இருந்து கல்யாணச் சாவு தான். பித்ரு காரியத்தை மட்டும் குறை வைக்காம பண்ணு. மாசாந்திரம் அமாவாசைக்குப் பண்ணாட்டாலும் பரவாயில்லே. இது வருஷ முடிவிலே வர்றது. அனிவர்சரி. மேரேஜுக்கு கொண்டாடறது மாதிரி ஜாம்ஜாம்னு செய்ய வேண்டிய காரியம். உங்கப்பாவும் சந்தோஷப்படுவார் கேட்டுக்கோ. ஷேமமா இரு. சீனு வாத்தியார் காலையில் வந்ததும் தெற்கிலிருந்து திவசத்துக்கு மூதாதையர் சகிதம் புறப்பட்டு வந்து கொண்டிருந்த சாமாவுக்கும் கேட்கிற சத்ததில் இரைந்து ஆசிர்வாதம் சொல்லி, ஆத்துக்காரியை வரச்…




Read more »

என் ‘இந்திய இலக்கியச் சிற்பிகள் – சுஜாதா’ நூல் மதிப்புரை

By |

என் ‘இந்திய இலக்கியச் சிற்பிகள் – சுஜாதா’ நூல் மதிப்புரை

சாகித்ய அகாதமி கேட்டுக் கொண்டபடி நான் எழுதிய ‘இந்திய இலக்கியச் சிற்பிகள்’ வரிசையில் வரும் எழுத்தாளர் சுஜாதா பற்றிய நூலுக்கு நண்பர் மந்திரமூர்த்தி அழகு அவர்கள் எழுதிய அறிமுகம் – மதிப்பீடு. இந்நூல் விரைவில் வேறு இந்திய மொழிகளில் மொழிபெயர்த்து சாகித்ய அகாதமியால் வெளியிடப்படும். இந்திய இலக்கியச் சிற்பிகள்(சுஜாதா) – இரா முருகன் வெளியீடு: சாகித்ய அகாதமி முதல் பதிப்பு- 2020 பக்கங்கள்: 130 விலை: ரூ 50 இந்திய இலக்கியச் சிற்பிகள்- சுஜாதா என்ற இந்த…




Read more »

லூயி புனுவலும் பெட்ரோ அல்மடோவரும் கூட வர தேம்ஸ் நதிக்கரையில் ஒரு மதுக்கடை தனில்

By |

லூயி புனுவலும் பெட்ரோ அல்மடோவரும் கூட வர தேம்ஸ் நதிக்கரையில் ஒரு மதுக்கடை தனில்

என் ‘லண்டன் டயரி’ நூலில் இருந்து (கிழக்கு பதிப்பகம் வெளியீடு) சாயந்திரமும் ராத்திரியும் சந்தித்துக் கைகுலுக்கிக் கொள்ளும் நேரம். மெல்லப் படர்ந்து கொண்டிருக்கும் இருட்டில் லண்டன் நகருக்குக் குறுக்கே கோடு கிழித்தபடி நீண்டு விரிந்து கிடக்கும் தேம்ஸ் நதி. கரை நெடுக்க நியான் விளக்குகளும், மெர்க்குரி வேப்பர் குழல் விளக்குகளும் பிரகாசிக்கும் கட்டிடங்களிலிருந்து கசியும் ஒளி. அது நதியலைகளில் பிரதிபலித்தும் மறைந்தும் போக்குக் காட்டிக்கொண்டிருக்கிறது. நதிக்கரையில் ஒரு மதுக்கடை. பின்வரிசை நாற்காலியில் நான். மற்றும் இத்தாலிய, பிரஞ்சு…




Read more »

வாழ்ந்து போதீரே நாவலில் ஒரு மதுரைக் காட்சி – 1960களில்

By |

வாழ்ந்து போதீரே நாவலில் ஒரு மதுரைக் காட்சி – 1960களில்

இது டவுண்ஹால் வீதி.நேரே நடந்து போனா ஆவணி மூல வீதி. அது மேலக் கோபுரத்துக்கு கொண்டு போய் விடும். மிஞ்சிப் போனா பத்து நிமிஷம். தெரு வேடிக்கை பூரா பார்த்துக்கிட்டு போங்க. கேமரா உண்டுதானே? நல்ல யோசனை தான். நடக்கத் தலைப்பட்டாள் கொச்சு தெரிசா. காமிராவை எடுத்து வந்து போகிற இடம் எல்லாம் படம் பிடிக்கும் சுற்றுப் பயணிகளுக்கான ஆவலும் ஆர்வமும் போன இடம் தெரியவில்லை. சொந்த ஊரில், சொந்த வீட்டில் மூலை முடுக்கெல்லாம் படம் எடுத்து…




Read more »

புளிக்குழம்பும், வாழக்கா கறியும், சுவியனும், வடையும், தோசையும், லட்டு உருண்டையும், காரசேவும், தேங்குழலும், அதிரசமும்.

By |

என் ‘வாழ்ந்து போதீரே’ நாவலில் இருந்து – நவராத்திரியோ, பொங்கலோ, தீபாவளியோ ராணியும் ராஜாவும் இருந்த வரை அதுவும் செயலில்லாமல் முடங்கி, அப்புறம் எதுவும் கொண்டாட யாருமில்லாமல் அரண்மனை அட்டுப் பிடித்துக் கிடந்ததெல்லாம் அடி முதல் நுனி வரை மாறியதில் ராணிக்கும் மகிழ்ச்சிதான். வேதையன் பள்ளிக்கூடத்துக்கு அரண்மனைக்குள் இடமும், வாசகசாலையும் ஏற்படுத்தி வைத்த அப்புறம், கோவிலைச் சீராக்கினதன் பின்னால், இந்த இடத்தில் கூட்டத்துக்கும் குறைவில்லை. கொண்டாட்டமும் மிதமாக இருந்ததில்லை. ராஜாவும் ராணியும் உறங்கியும் ஊர்ந்தும் இருந்த அறைகளும்,…




Read more »