Archive For செப்டம்பர் 25, 2008

புத்தகம் – நெம்பர் 40, ரெட்டைத் தெரு

By |

  கிழக்கு பதிப்பக வெளியீடு கிழக்கு பதிப்பக வெளியீடாக நேற்று (செப்டம்பர் 25, 2008) ‘நெம்பர் 40, ரெட்டைத் தெரு’ வெளியாகி உள்ளது. இது என் பதினேழாவது நூலாகும். கிழக்கு பதிப்பக வெளியீட்டாக (ஒலிப் புத்தகத்தையும் சேர்த்து) இது என் ஏழாவது புத்தகம். நண்பர் தளவாய் சுந்தரம் இதன் பதிப்பாசிரியராகச் செயல்பட்டு அழகான முறையில் புத்தகத்தை உருவாக்கியிருக்கிறார் (நன்றி தளவாய்!). நூல் பற்றிய சில தகவல்கள் – பக்கங்கள் 232 விலை ரூ 125 ISBN 978-81-8368-933-5…




Read more »

மும்பை விருந்து

By |

  வார்த்தை’ பத்தி செப்டம்பர் 2008 தமிழ்ப் படைப்பிலக்கிய ரசனைக்கும் ஆங்கிலப் படைப்பிலக்கிய ரசனைக்கும் உள்ள வேறுபாடு சென்னைக்கும் மும்பைக்கும் நடுவே ஆறு அல்லது அறுநூறு வித்தியாசம் கண்டுபிடிக்கிறது போல் சுவாரசியமானது. தமிழில் ஒரு நாவல் வெளிவந்தால் கிணற்றில் ஊறப்போட்ட கல்லாக அது அநேகமாக லைபிரரி ஆர்டரில் சகாய விலைக்கு மொத்தமாகக் கொள்முதல் செய்யப்பட்டு கிளை நூலக மேல் ஷெல்பில் செருகி வைக்கப்படும். கிட்டத்தட்ட நாற்பது வருடம் கழித்து ‘நினைத்துப் பார்க்கிறேன்’ ரேஞ்சில் யாராவது அதைப் பற்றி…




Read more »

உலகைக் குலுக்கும் வாரம் இது

By |

  லீமன் பிரதர்ஸ், ஏ.ஐ.ஜி, எச்பாஸ் .. இனி? இந்த 2008-ம் ஆண்டு எனக்கு முக்கியமானது என்று பத்து நாள் முன்னால் தான் எழுதினேன். இப்போது, அதிமுக்கியமானது என்று மாற்றி எழுத நேர்ந்து விட்டது. இந்த வாரம் தொடங்கியபோதே ஏதோ சுவரம் பிறழ்ந்த இசையாக, மனதில் ஒரு சஞ்சலம். கண்ணன் திருவடிகளைப் போற்றி வழக்கமான கடமைகளோடு வளைய வந்தபோது, முதல் அதிர்ச்சி. செப்டம்பர் 15, திங்களன்று லீமன் பிரதர்ஸ் வங்கி திவால் ஆனது. One of the…




Read more »

உத்திராடம் – திருவோணம் – அவிட்டம்

By |

  ஓணக்காலக் குறிப்புகள் நேற்றைக்கு (செப்டம்பர் 12) திருவோணத் திருநாள். காலையிலேயே குளித்து மகாலிங்கபுரம் ஸ்ரீகுருவாயூரப்பன் – ஐயப்பன் அம்பலங்களில் வழிபாடு. ஓணக் கோடி உடுத்து நூற்றுக்கணக்கானவர்கள் கோவில் பிரகாரத்தில் வலம் வந்து கொண்டிருந்தாலும் ஆகக் குறைவான இரைச்சல், சத்தம். ஸ்ரீபலி தொடங்கும் முன் கண்ணன் சந்நிதி படியருகே நின்று மாரார் சோபான சங்கீதம் பாடுவது கோவில் முழுக்க ஒலிக்கிறது. தாளமும் நாதமுமாக அவருடைய குரலோடு கூட இழைகிறது தோளில் மாட்டியபடி அவர் வாசிக்கும் இடக்க. எட்டு…




Read more »

யூனிட்

By |

  மாலை நேரக் குறிப்புகள் இந்த யூனிட்டில் காலாகாலமாகக் கடைப்பிடிக்கப்படும் ஒரு பழக்கம் உண்டு. உருவாக்கப்பட்டுக் கொண்டிருக்கும் திரைப்படத்தின் கதையைப் பற்றியோ, யார் யார் பங்கு பெறுகிறார்கள் என்பதைப் பற்றியோ வெளிவட்டத்தில் விவாதிப்பதோ தகவல் பரிமாறுவதோ இல்லை என்பதை ஒரு எழுதாத கோட்பாடாக எல்லோரும் கடைப்பிடிக்கிறார்கள். இந்தப் பூடகத் தன்மை படைப்பு குறித்த ஆர்வத்தைத் தூண்டி சுவாரசியமான எதிர்பார்ப்புகளோடு காத்திருக்க வைக்கிற நேசமான ஒரு விளையாட்டு. இதை எல்லோரும் ரசித்து ஈடுபடுகிறது தன்னிச்சையாக நடைபெறும் ஒன்று. பத்திரிகைகளிலும்…




Read more »

மின்சாரக் கண்ணா

By |

  கல்கி ‘டிஜிட்டல் கேண்டீன்’ பத்தி (29) புதுமைப் பெண்ணுக்கு வெகு முன்னாடியே தோன்றியது ஈல் மீன். தொட்டால் எக்கச்சக்கமாக ஷாக் அடிக்கும். கொஞ்ச நஞ்சமில்லை. அறுநூறு வோல்ட். நெருங்கி வந்தவர்களை உடனடியாக வைகுந்த பதவி அடைய வைக்கும் ஹை வோல்டேஜ் மின்சாரத்தை ஈலுக்குத் தருவது இயற்கை அன்னை. ஈல் மீனுடைய உடலின் மூல ஆதாரமான நுண்ணிய செல்களில் உற்பத்தியாவது இந்த மீன்சாரம். எலக்ட்ரோசைட் என்ற இப்படியான சிறப்பு செல்கள் ஆயிரக் கணக்கில் ஈல் மீன் உடலில்…




Read more »