Archive For ஜனவரி 31, 2024

மயிலாடும் போது அன்னபூரணி என விளித்து சோறு கேட்டு வந்த பைராகி

By |

மயிலாடும் போது அன்னபூரணி என விளித்து சோறு கேட்டு வந்த பைராகி

அரசூர் வம்சம், விஸ்வரூபம், அச்சுதம் கேசவம், வாழ்ந்து போதீரே இவை நான்கும் சேர்ந்து அரசூர் நாவல் தொகுதியாக கிட்டத்தட்ட 2000 பக்கங்களில் விரியும் கதை. அபூர்வமான தமிழ்ப் புத்திலக்கியத் தொகுதி இது. ஸீரோ டிகிரி பப்ளிஷிங் வெளியீடு. வாழ்ந்து போதீரே நாவலில் இருந்து அடுத்த சிறுபகுதி. சத்சங்கும் அகண்ட நாம பஜனையும் தில்லி முழுக்கக் கொடி கட்டிப் பறக்கிறது. தெற்கத்தி மனுஷர்கள், வடக்கர்கள், மீன் வாசனையோடு கிழக்கில் இருந்து வந்த முக்கோபாத்தியாயா, சட்டோபாத்தியாயா வகையறாக்கள், இன்னும் மேற்கில்…




Read more »

சோழ பிரஹ்மஹத்தி, மதறாஸி சாம்பார் குடிக்கறதுக்கே வந்து சேர்ந்தியே

By |

சோழ பிரஹ்மஹத்தி, மதறாஸி சாம்பார் குடிக்கறதுக்கே வந்து சேர்ந்தியே

அரசூர் வம்சம் நான்கு நாவல் வரிசையில் நான்காவது வாழ்ந்து போதீரே நூலில் இருந்து ஸீரோ டிகிரி பப்ளிஷிங் வெளியீடு வேறே என்ன விசேஷம் உங்க ஊர்லே என்று இலைக்கு முன்னால் கொஞ்சம் சிரமத்தோடு இருந்து தயிர் சாதத்தை ரசித்துக் கொண்டிருந்த ஜெயம்மாவும் கேட்டாள். அங்கே இப்போ மனுஷர்கள் எல்லாம் விதி முடிஞ்சு சாகறது திரும்ப நடக்கறது ஆனா, மிருகங்கள் ஆயுசு நீண்டு போயிருக்காம். சீரியஸா ஒரு தோஸ்த், தியாகராஜன்னு பேரு, எனக்கு போஸ்ட் கார்ட் போட்டிருக்கான். அங்கே…




Read more »

அந்த ஊரில் யாரும் நடப்பதே இல்லை

By |

அந்த ஊரில் யாரும் நடப்பதே இல்லை

அரசூர் நான்கு நாவல் வரிசையில் நான்காவது நாவல் = வாழ்ந்து போதீரே. அதில் அத்தியாயம் 6இல் இருந்து வசந்தியின் அப்பா சுந்தர வாத்தியார் பேசிய வினோத இந்தி புரியாமல் காப்பரசி மகத்துவமறியாது அதையும் தொட்டிலில் விட உத்தேசித்த அண்டை அயல் குழந்தைகளுக்காக ஜெயம்மா ஒரு பாக்கெட்டை பிரித்து ரெண்டு பிடியாக உள்ளே இருந்து எடுத்துச் சாப்பிட்டு, அதன் சேர்மானம் சொல்லி அதுகளையும் சாப்பிடவும், இலை போட்டபின் பந்திக்கு உட்காரவும் வைத்தாள். பந்தியில் பாயசம் பரிமாறிக் கொண்டிருந்தபோது கார்…




Read more »

ஆறடியை மூன்றடியாக வாமனக் குறுக்கம் செய்து நின்ற நட்பும் காப்பரிசியும்

By |

ஆறடியை மூன்றடியாக வாமனக் குறுக்கம் செய்து நின்ற நட்பும் காப்பரிசியும்

அரசூர் நாவல் வரிசையில் நான்காவது வாழ்ந்து போதீரே. அதிலிருந்து குழந்தை அழுகை நின்று போன வீட்டில் மந்திரங்களின் ஒலி மட்டும் இருந்தது அண்டர் செக்ரட்டரி சார் மந்திரம் சொல்லலாமோன்னோ. சங்கரன் ஹோம அக்னியில் பார்த்த மூன்று பெண்டுகளையும் காலையில் உறக்கமா விழிப்பா என்று விளங்காமல் கிடந்த நேரத்தில் பார்த்த நினைவு வந்தது. ஒன்று பகவதிப் பாட்டி, மற்ற இருவர்? அவாள்ளாம் யாரு? சங்கரன் சாஸ்திரிகளிடம் கேட்க, யாரெல்லாம் என்று எதிர்க் கேள்வி கேட்டார் அவர். அதற்கெல்லாம் நேரமே…




Read more »

நேற்றைய மனிதர்கள் – இன்றைய நிகழ்வுகள் -நாளைய எதிர்பார்ப்புகள்

By |

நேற்றைய மனிதர்கள் – இன்றைய நிகழ்வுகள் -நாளைய எதிர்பார்ப்புகள்

அரசூர் நாவல் வரிசையில் நான்காவது நாவல் வாழ்ந்து போதீரே (ஸீரோ டிகிரி பப்ளிஷிங் வெளியீடு). நாவலில் இருந்து இந்த வாசனைக்கும் இதமான பொழுதுக்கும் வசந்தி பக்கத்தில் இல்லையா உட்கார்ந்திருக்க வேண்டும்! ஆரம்பிக்கலாமா? ஆத்துக்காரியை கூப்புடுங்கோ. நீங்க பஞ்ச கச்சம், அவா மடிசார். அதான் நியதி சங்கரன் சற்றே சலிப்போடு வேஷ்டி மாற்ற உள்ளே போக, ஹோகித்தாரே, ஒன் மினிட் சாஸ்திரிகளே என்று ஜூனியர் சாஸ்திரியை அவனுக்கு பஞ்ச கஞ்சம் உடுத்தி விடக் கண் காட்டி உள்ளே அனுப்பியது…




Read more »

பிதார் ஜெயம்மாவும் நூருண்ணி மேட் ஹோம குண்டமும் ஃபில்டர் காபியும்

By |

பிதார் ஜெயம்மாவும் நூருண்ணி மேட் ஹோம குண்டமும் ஃபில்டர் காபியும்

வாழ்ந்து போதீரே – அரசூர் நாவல் வரிசையில் நான்காவது- அத்தியாயம் 6 சில பகுதிகள். ஸீரோ டிகிரி பப்ளிஷிங் அச்சுப் பதிப்பு வெளியீடு ஹோம குண்டம் இப்படி கைக்கடக்கமா செஞ்சு விக்கறதா? நம்மாத்திலே எல்லாம் தரையிலே செங்கல் வச்சுன்னா அக்னி வளர்த்தது? இது எனக்கு ஒண்ணு வேணுமே. ஜெயம்மா புரோகிதர் கையில் இருந்து அஸ்பெஸ்டாசும் மரமும் இன்னும் ஏதோ உலோகமும் கலந்த ஹோம குண்டத்தை வாங்கிப் பார்த்து விட்டுக் கேட்டாள். ஆமா மாமி, புதுசுதான். இது நூர்ணி…




Read more »