Archive For ஜனவரி 31, 2016

New Novel : வாழ்ந்து போதீரே அத்தியாயம் 19 இரா.முருகன்

By |

New Novel : வாழ்ந்து போதீரே       அத்தியாயம் 19   இரா.முருகன்

கொச்சு தெரிசா என்று தன்னை அறிமுகம் செய்து கொண்ட, தூர தேசத்திலிருந்து வந்த பெண்ணோடு ரேடியோ லைசன்ஸ் உத்தியோகஸ்தர் பேசுவதற்கு முன் பெருஞ் சத்தம் எழுப்பி கப்பி ரோடில் ஒரு சைக்கிள் தாறுமாறாக விழுந்தது. உடுப்பில் படிந்த செம்மண்ணைத் தட்டி உதிர்த்தபடி தரையில் இருந்து எழுந்த சைக்கிளோட்டி, உலகைக் கனிவாகப் பார்த்துப் புன்னகை செய்தபடி வண்டியை நிலை நிறுத்தினார். சக்கர வண்டிகள் நம்புதற்கு உரியவை அல்ல என்று அவரைப் பரிவோடு நோக்கியபடி ரேடியோ உத்தியோகஸ்தர் கூறினார். தன்னிடமும்…




Read more »

New Novel: வாழ்ந்து போதீரே அத்தியாயம் 18 இரா.முருகன்

By |

New Novel: வாழ்ந்து போதீரே                 அத்தியாயம் 18    இரா.முருகன்

சாமுவேல் என்று பெயர் சொன்னார். போன வாரம் வந்த போது சாமிவேல் என்று சொல்லியிருந்தார். அவருடைய பெயர் இந்த இரண்டில் எது என்று அரசூரில் ஒரு வாரமாகப் பலமான சர்ச்சை நடந்து கொண்டிருக்கிறது. எந்தப் பெயரோ, கருத்து மெலிந்த ஒட்டடைக் குச்சி போல ஓங்குதாங்காக வளர்ந்த ஒரு நடு வயசு மனுஷர் அரசூரில் வீடு வீடாக அத்து மீறிப் புகுந்து ரேடியோப் பெட்டிகளை உடைத்துப் போட்டுக் கொண்டிருக்கிறார். ரேடியோ பெட்டி வைத்து கானங்களையும், நேரம் கெட்ட நேரங்களில்…




Read more »

New Novel : வாழ்ந்து போதீரே அத்தியாயம் 17 இரா.முருகன்

By |

New Novel : வாழ்ந்து போதீரே       அத்தியாயம் 17   இரா.முருகன்

கொட்டும் மழையில் டாக்சியை விட்டு இறங்கி பாண்டுப் சர்வமங்கள் சால் இருக்கும் குறுகலான தெருவில் அகல்யா நுழைந்தாள். தேங்கி இருந்த மழைத் தண்ணீரையும் பின்னால் ஒடுங்கிக் கிடந்த தெருவையும் பார்த்து, உள்ளே வந்தால் திருப்பிப் போக சிரமம் என்று தெரு முனையிலேயே நிறுத்தி விட்டார் டாக்சி டிரைவர். ஆனாலும் ரெக்சின் பை, லெதர் பேக், பூ மாலை, செண்டு இதையெல்லாம் இறக்கவும், குடையை விரித்துப் பிடித்து திலீப்பிடம் தரவும் அவர் தவறவில்லை. வண்டியைக் கிளம்பும் முன் அவருடைய…




Read more »

New Novel : வாழ்ந்து போதீரே அத்தியாயம் 16 இரா.முருகன்

By |

New Novel : வாழ்ந்து போதீரே          அத்தியாயம் 16   இரா.முருகன்

அரசூர் தெரியுமா? அகல்யா கேட்டாள். சிறிய சமோசாவைக் கடித்துக் கொண்டு தலையை இல்லை என்று ஆட்டினான் திலீப். இரானி ஹோட்டலில் மழைக்காக ஒதுங்க வருகிறவர்களின் கூட்டம் மெல்ல அதிகரித்துக் கொண்டிருந்தது. மழை தொடங்கப் போகிறது என்று பூஜை செய்த பிள்ளையாரைச் சதுர்த்தி முடிந்து விசர்ஜன் நேரத்தில் கடலில் இடும்போதே எல்லோருக்கும் தெரியும். கணபதியைக் கரைத்ததும் மேகம் திரண்டு தென்மேற்குப் பருவ மழை ஆரம்பித்து விடும் என்ற நம்பிக்கையில் கையில் குடையோடு கணபதி பப்பா மோரியா பாடிக் கொண்டு…




Read more »

New: Era Murukan on The Hindu Literature for Life Festival 2016

By |

New: Era Murukan on The Hindu Literature for Life Festival 2016

Sadanand Manon as the interviewer is always a pleasure to watch. With his in depth knowledge of fine arts, he usually enhances the quality of the interview, enriching it with more info in addition to what the artist interviewed conveys. Menon’s Raghu Rai interaction yesterday was one such memorable event. Rai came up with some…




Read more »

New novel : வாழ்ந்து போதீரே – அத்தியாயம் 15 இரா.முருகன்

By |

New novel : வாழ்ந்து போதீரே    – அத்தியாயம் 15        இரா.முருகன்

மூன்று மாதத்தில் பம்பாய் மாறியதோ என்னமோ, கட்சியின் தலைமைக் காரியாலயம் ஏகத்துக்கு மாறி இருந்தது. வரப் போகும் மாநகராட்சித் தேர்தலில் கட்சி பெரும் வெற்றி அடையும் என்று பரவலாக, எதிர்ப்பாளர்கள் மத்தியிலும் கூட எதிர்பார்க்கப் படுவதாலோ என்னமோ அங்கே தாதர் ரயில்வே ஸ்டேஷன் பிளாட்பாரம் போலப் பரப்ரப்பான சூழ்நிலை. திலீப் உள்ளே நுழைந்த போது காக்கிச் சட்டைக் காவலன் குறுக்கே விழுந்து தடுத்து நிறுத்தினான். ஜா நை சக்தா. பாஸ் திகாவ் நை தோ. ஹடாவ் போடா…




Read more »