Archive For டிசம்பர் 30, 2017

New Novel ‘1975’ -“சார் ஜாதி இல்லேன்னாலும் அடையாளத்துக்காகச் சொல்றேன். நான் போத்தி. அவர் நாயர். எப்படி எனக்கு அவர் மாமா ஆக முடியும்?”

By |

Excerpt from the novel 1975 மதியம் சாப்பிடப் போகும்போது மேனேஜர் சொன்னார், “நாட்டுச் செக்கு, தறிமேடை, தேனி வளர்ப்பு, எது வேணும் உங்களுக்குன்னு ரீஜனல் ஆபீசிலே கேட்கறாங்க. நாம ஜில்லாவுக்கு லீட் பேங்க். மத்த பேங்க்களையும் முடுக்கி விட்டு லோன் கொடுக்க வைக்கற கடமை நமக்குண்டு. முதல் ஈட்டுலே எதை எடுத்துக்கலாம்னு நினைச்சுப் பார்த்தேன். ஒண்ணும் புரிபடலே”. “தேனி வளர்ப்பு என்னன்னு பார்க்கலாமே முதல்லே”, நான் மேலே பேசுவதற்குள் அக்கவுண்டெண்ட் சொன்னார், “கேளு நாயர் அப்ளிகேஷன்…




Read more »

New Novel ‘1975’ : எமர்ஜென்சி பற்றி நெகட்டிவ் ஆகச் சொல்கிறார். பக்கத்தில் நின்றாலே ஆபத்து. விலகி நின்றேன்

By |

மூன்று மணிக்கு நாங்கள் போய்ச் சேர்ந்தபோது, “உள்ளம் உருகுதையா” என்று கோவிலில் மார்கழி மாதத்துக் காலையில் பாடுவது போல் லவுட்ஸ்பீக்கர் பாடிக் கொண்டிருந்தது. “இருபது அம்சத் திட்டம்”, என்று எழுதி இருந்த துணி பேனர்களை கதர் உடுத்த சிலர் மேடைக்குப் பின்னால் ஏற்றிக் கொண்டிருந்தனர். உள்ளூர் ரெவின்யூ தாசில்தாரும், அவர் ஆபீஸ் கூட்டமும் என்று மேனேஜர் சொன்னார். தாசில்தாரும், கலெக்டரும் பொதுக்கூட்டத்துக்கு பேனர் கட்டி, சவுண்ட் டெஸ்டிங் ஒன் டு த்ரீ என்று ஒலிபெருக்கி, மைக் டெஸ்ட்…




Read more »

New Novel ‘1975’ – தேவகோட்டையில் புரட்சி வணக்கம் கெட்ட வார்த்தை, கெட்ட செயலுக்குத் தொடக்கமோ என்னமோ

By |

Excerpt from my novel ‘1975’, being written : “ஸ்வீப்பரம்மா போய் சூடா ரெண்டு டீ மாயளகு கடையிலே வாங்கிட்டு வந்துடுங்க. அப்படியே ஒரு பாக்கெட் பிஸ்கட்டும். சார்ஜஸ் போட்டுத் தரேன்னு சொல்லுங்க”. ஸ்வீப்பரம்மா விளக்குமாறைத் தூக்கியபடி ஒரு வினாடி நின்றார். “இன்னொரு டீ சாருக்கு. நேத்து புதுசா வந்திருக்கார்” என்று அவருடைய புரிந்து கொள்வதற்காகச் சொன்னார் பழநி. “அவரையும் தெரியும்,, அவங்க அப்பனையும் தெரியும், எனக்கு தம்பி முறைதான் இவங்கப்பன். இவனுக்குப் பொறந்து ரெண்டு…




Read more »

New Novel ‘1975’ Excerpt : கொல்லங்கோடு சுதேசி

By |

Excerpt from the novel ‘1975’ being written “நீங்க வறுமைக்கோட்டுக்கு கீழே இருக்கப்பட்டவர் இல்லையா?” மதுரை நிருபர் கண்ணாடியைத் துடைத்துப் போட்டபடி கேளு நாயரைக் கேட்டார். நாயர் பலமாகத் தலையசைத்து மறுத்து, ‘ஞான் கொல்லங்கோடு சுதேசி’ என்றார். “அரசின் மக்கள் நலத்துக்கான நடவடிக்கைகள் உங்கள் வாழ்க்கையில் ஒளியேற்றி வைத்திருக்கின்றன என்கிறீர்களா?” கேளு நாயர் முழிக்க, ‘இவங்க வீட்டு கூடத்துலே மோதிலால் நேரு, இந்திராம்மா, அப்புறம் அவங்க அத்தை அவஙக் மாதிரியே ஆம்பளை கிராப் பண்ணியிருப்பாங்களே”, என்று…




Read more »

New Novel : 1975 :Excerpts இப்போதெல்லாம் ஒரு கைக்குட்டை வாங்கணும் என்றால் கூட பஸ் பிடித்து மதுரை போகிற கூட்டம் ஊரில் கூடிப் போயிருக்கிறது

By |

New Novel : 1975 :Excerpts இப்போதெல்லாம் ஒரு கைக்குட்டை வாங்கணும் என்றால் கூட பஸ் பிடித்து மதுரை போகிற கூட்டம் ஊரில் கூடிப் போயிருக்கிறது

“ஒரே நாள்லே ரெண்டு செண்டிமீட்டர் வளர்றது தலைமுடி” என்றார். அவர் கண்கள் பயத்தில் வெறித்து ஒரு வினாடி இருந்து சகஜ நிலைக்குத் திரும்பின. “நல்லது தானே” என்றேன் சமாதானமாக. “நிச்சயமா இல்லே. ஒரு நாளுக்கு ரெண்டு செண்டிமீட்டர். ஒரு வாரத்திலே பந்த்ரெண்டு”. பதினாலு இல்லையோ. ஞாயிற்றுக்கிழமை முடி வளராதோ. ஒரு மாசத்துலே ஐம்பது செண்டிமீட்டர் என்றார் அவர். திரும்ப கணக்கு பிசகு. இருந்தாலும் உண்மை. நிலைமையின் பயங்கரம் எனக்கு அப்போது உறைத்தது. இன்னும் ஒரு மாதம் போனால்…




Read more »

New Novel ‘1975’ – கேட்டுக்கொண்டபடி அவர் முகத்தில் சாதா சோகம் காட்டினார்

By |

1975 – எழுதிக் கொண்டிருக்கும் நாவலில் இருந்து ஒரு சிறு பகுதி. “யூனிட் வண்டி வந்தாச்சு” என்றபடி, குமரேசன் கல்லாவை சாவி போட்டு திறந்து இருந்த பணத்தை பையில் எடுத்துக் கொண்டு புறப்பட்டார். ”வாங்க, நாம போகலாம், உங்க ஸ்கூட்டர்லே ஒரு அழுத்தல். போயிடாலாம்” என்றார் நிருபர். எனக்குக் கொஞ்சம் கொஞ்சமாக எல்லாம் விளங்கியது. சினிமா படம் எடுக்க ஒரு கோஷ்டி வந்திருக்கிறது. உலகிலேயே முதல் முறையாக ராக்கிப்பட்டியில் வற்றிப்போன ஊருணிக் கரையில் ஐயனார் கோவிலை ஒட்டி…




Read more »