Archive For மார்ச் 30, 2018

New : எட்வினா தெரேசா ஐரின் மரியாகொரத்தி அன்னா மார்கரீத்தா ஜெசிக்கா

By |

பரமண்டலத்தில் இருக்கும் பரமபிதாவே என்று தொடங்கும் பிரார்த்தனையையும் ஓதிய பிறகு, மண்டியிட்டிருந்த என் தலைதொட்டப்பனாகும் எட்வின்சேட்டனையும், தலைதொட்டம்மாவாகும் விக்டோரியா பெரியம்மாவையும் பிலாத்தோஸ் பாதிரியார் கேட்டார் : “குழந்தைக்கு என்ன பெயர் வைக்கணும்னு தீர்மானம் செஞ்சிருக்கீங்களா?” “ஜெசிக்கா”, என்றாள் விக்கி பெரியம்மா. “அந்தப் பெயர்லே ஒரு புனிதர் உண்டா?”, கோவில்பிள்ளை ஆண்டனி கேட்டார். எட்வின்சேட்டனும் விக்கி பெரியம்மாவும் என் அப்பனைப் பார்த்தார்கள். ஜெசிக்கா என்ற பெயருக்கு ஒரு நீண்ட சரித்திரம் இருக்கிறது. என் அம்மாவின் குழந்தைப் பருவத்தின்போது, அவளுடைய…




Read more »

புது நாவல் : 1975 அவர் லுங்கியும் செருப்பும், மேலே யாரோ யாருக்கோ எப்போதோ போர்த்திக் களைந்த பொன்னாடையுமாக படி இறங்கிப் போனதைப் பார்த்தேன்

By |

எழுதிக் கொண்டிருக்கும் நாவலில் இருந்து ஒரு சிறிய பகுதி நான் யோசித்துவிட்டுச் சொன்னேன் – இங்கே ரயில்வே கேட் பக்கம் பொறம்போக்குலே குடிசை போட்டு சில தமிழ்க்காரங்க இருக்காங்க. முந்தியெல்லாம் சேலம் பக்கம் இருந்துதான் இப்படி புறப்பட்டு வருவாங்க. இப்போ தெற்கிலே எங்கெல்லாமோ இருந்து வர்றவங்க.. முக்கியமா பொம்பளை ஆளுங்க வீட்டு வேலை செய்வாங்க, ஆம்பிளைங்க ரயில்வே கேங்க் கூலி, இல்லே சின்னச் சின்னதா உதிரி வேலை. இந்தி சரளமா பேசுவாங்க. வந்து ஒரு வருஷத்திலே பேசக்…




Read more »

புது நாவல் : 1975 :எமெர்ஜென்சி டைம். அதுவும் இது டில்லி. ஆபாசமா பேசினா செண்ட்ரல் மார்க்கெட்டை சுத்தி ஓட வச்சுடுவாங்க

By |

எழுதியதில் இருந்து ஒரு சிறிய பகுதி செண்ட்ரல் மார்கெட்டில் நுழைந்ததுமே இடது வசத்தில் பஞ்சாபி தாபா மற்ற எந்த நேரத்தையும் விட அதிகக் கூட்டத்தோடு காணப்பட்டது. ராத்திரி பத்தரை மணிக்கு விழுங்கிய விஸ்கி உடம்புக்குள் ஏதேதோ ரசாயனங்களைக் கட்டவிழ்த்து விட்டு என்னை முழுக்க ஆக்கிரமித்திருந்தது. மிகச்சிறந்த அழகியாக நான் கருதும் பாயல் அஹுஜாவைப் பற்றிய சீரிய சிந்தனை ஒன்றை எல்லோரும் அறிந்து கொள்ள ஏதுவாக சத்தமாகச் சொல்ல, ஜகதீஷ் அவசரமாக என் வாயைப் பொத்தினான். சீஃப் மேனேஜர்…




Read more »

புது நாவல் : சங்கரன் போத்தியின் எமர்ஜென்சி உலகம்

By |

புது நாவல் : சங்கரன் போத்தியின் எமர்ஜென்சி உலகம்

1975 என்ற தற்காலிகத் தலைப்போடு நான் எழுதிவரும் புதினம் தற்போது ‘சங்கரன் போத்தியின் எமர்ஜென்சி உலகம்’ என்று புதுத் தலைப்பு கொண்டிருக்கிறது. இன்னும் தகுந்த தலைப்பு கிடைத்தால் இதுவும் மாறலாம். கதை சென்னை, தெற்குச் சீமையில் சொந்த ஊர் என்று இதுவரை பயணித்து, தில்லியை அடைந்திருக்கிறது. தில்லி அத்தியாயங்களின் தொடக்கத்தில் இருந்து, ஒரு சிறு பகுதி : பிளாஸ்டிக் பூங்கிண்ணத்தில் எனக்கு விஸ்கி வார்த்தார்கள். கிண்ணத்தில் வைத்திருந்த ஒற்றை ரோஜாப்பூவை ஜகதீஷ் எடுத்ததையும், கொசு விழுந்து மிதந்த…




Read more »

புது நாவல் : 1975 -மங்கிய விளக்கு வெளிச்சத்தில் ரெம்ப்ராண்ட் ஓவியம் போல இருவரும் தெரிந்தார்கள்

By |

எழுதிக் கொண்டிருக்கும் நாவல் ‘1975’ – ஒரு சிறு பகுதி இது கோடவுண் தான். நியூஸ் ப்ரிண்ட் வாடையும், அச்சு மை வாடையும் தூக்கலாக வந்த கிடங்கு அது. சுவரில் வைத்த போர்ட் ஊர்ப் பேச்சு பத்திரிகையுடையது. உள்ளே நடக்க, கோடவுண் முடிந்து, ஒரு கதவு. திறந்தால், ஒரு அறை. இரண்டு கயிற்றுக் கட்டில். பின்னால், சிறு உள்ளறையாக டாய்லெட். வயதான, ஈர்க்கு போல மெலிந்த ஒரு சாமியார் கட்டிலில் கண்மூடிப் படுத்திருந்தார். மண் பாத்திரத்தில் இருந்த…




Read more »

புது நாவல் : 1975 : ”25.6.1975 புதன்கிழமை திரு.ஜனார்த்தனம் அவர்களின் மகன் நாயகம் மறைந்தார். ஜன.நாயகம் இறப்புக்கு அஞ்சலி செலுத்தும் நண்பர்கள், உறவினர்கள்”

By |

மெழுகுவர்த்தி சுடர் காற்றில் அலைந்து சீக்கிரம் பேசி முடிங்க. நான் உறங்கப் போகணும் என்றது. “என்ன விஷயம்?” என்று குருநாதனைக் கேட்டேன். “நானும் எமர்ஜென்சி எதிர்ப்பு ஆள்தான் சார். ஆனா பத்திரிகை நடத்தறவங்க நம்மளைக் கூப்பிட்டு வேலை கொடுத்திருக்காங்க. அதுவும் நந்தனம் பத்திரிகை நின்னு திண்டாடிட்டு இருந்த ஒரு கூட்டத்துக்கே காலோ அரையோ குறைவாகவாவது சம்பளம் கொடுத்து ஒரு கஷ்டமான காலத்துலே கடந்து போக வழி செஞ்சிருக்காங்க. அவங்க எமெர்ஜென்ஸி சப்போர்ட்னா பத்திரிகையும் அப்படித்தான். பிடிக்குதோ பிடிக்கலியோ…




Read more »