Archive For ஜனவரி 31, 2009

செருப்பு விடு தூது

By |

  Kungumam column அற்ப விஷயம் -26 இரா.முருகன் பாதுகைகள் நடக்க ஆரம்பித்துப் பல காலம் ஆகிறது. இராம பிரான் காலடியில் இருந்து பரதனின் தலையேறிய காலணிகள் அடுத்து அரியணையும் ஏறின. அந்த ஒரு ஜோடி பாதுகைகளைத் தைத்துக் கொடுத்த புராணகாலத்து அயோத்தி நகரத் தொழிலாளி கூட்டத்தில் ஒருவனாக நின்று பார்த்துப் பெருமிதப்பட்டிருப்பான். அவன் உழைப்புக்குக் கிடைத்த மறைமுகமான அங்கீகாரம் அது. கொடுமையின் மொத்த உருவமாக வேடம் புனைந்து மேடையில் வலம் வந்த நாடகக் கலைஞன் மேல்,…




Read more »

மைக் டெஸ்டிங் ஒன், டூ, த்ரீ

By |

  Kungumam column – அற்ப விஷயம் 23 இரா.முருகன் கூட்டம் நடத்துவது என்ன மாதிரியான சங்கதி என்று இன்னும் சரியாகப் புலப்படவில்லை. அரசியல் கூட்டங்களைப் பற்றிய அங்கலாய்ப்பு இல்லை இது. அரசியல் போக, வேறே இலக்கியம், கலை, நற்பணி மன்றம் தொடங்கி, வைதேகி ப்ளாட்ஸ் கட்டிடக் குடித்தனக்காரர்கள் சங்கக் கூட்டம் வரையான பல தரப்பட்ட இனங்கள் இந்தப் பட்டியலில் இடம் பெறும். கூட்டங்கள் நடக்க என்ன காரணம்? இம்மாதிரியான யோசனைகள் பெரும்பாலும் ஞாயிற்றுக்கிழமை அல்லது பொது…




Read more »

சத்திய சோதனை ஆந்திரா ஸ்டைல்

By |

  Kungumam column – அற்ப விஷயம் -24 எட்டுக்கால் பூச்சிக்குப் பட்ட காலிலே பட்டால் பரவாயில்லை. சொச்சம் இருக்கப்பட்ட ஏழு காலை வைத்து ஒப்பேற்றி வலை கட்டித் தொங்கிவிடலம். கம்ப்யூட்டர் துறை எட்டுக்கால் பூச்சி இல்லை என்பதால் அடி மேல் அடி விழுந்ததும் தாங்கச் சக்தி இல்லாமல் தள்ளாடிக் கொண்டிருக்கிறது. தெலுங்கு தேசம் தந்த புத்தாண்டுப் பரிசு இந்த சட்டக் கல்லூரி ஹாஸ்டல் ஸ்டைல் அடி. சாதாரணமாகவே பெரும்பாலான கம்ப்யூட்டர் கம்பெனிகளில் எழுதாத விதி ஒன்று…




Read more »

மர்மயோகி ரசித்த படம்

By |

  வார்த்தை பத்தி – குட்டப்பன் கார்னர் ஷோப் 1ப் அவசியம் இதைப் பாருங்க. அப்புறம் படியுங்க. மர்மயோகி ஒரு குறுவட்டையும், கூடவே புத்தகத்தையும் நீட்டினார். இயக்குனர் பிரதியாக ஓர் ஆங்கிலத் திரைப்படம். பெயர் மேக்னோலியா. அதோடு இணைப்பாகப் படத்தின் திரைக்கதை புத்தக வடிவத்தில். பால் தாம்சன் ஆண்டர்சன் எழுதியது. படத்தை இயக்கியதும் ஆண்டர்சன் தான். இளைஞர். வழக்கம் போல் புத்தகத்தின் கடைசிப் பக்கத்திலிருந்து புரட்ட ஆரம்பித்தேன். மொதல்லே சி.டியைப் பார்க்கச் சொன்னேன். அப்புறம் படிக்கலாம். அன்பான…




Read more »

ஆளும் வளரணும் அறிவும் வளரணும்

By |

  Kungumam column – அற்ப விஷயம் -20 அஷ்டாவதானம் என்று ஒன்று உண்டு. நல்ல தமிழில் எண் கவனகம். அதாவது கவனத்தை ஈர்க்கும் எட்டு விதமான செயல்களை ஒரே நேரத்தில் செய்வது. உதாரணமாக, அஷ்டாவதானி முன்னால் ஒருத்தர் உட்கார்ந்து இறுதி அடியைக் கொடுத்து உடனே வெண்பா பாடச் சொல்லிக் கொண்டிருப்பார். இன்னொருத்தர் பதினெட்டு இலக்க எண்ணை ஐந்து நிமிடத்துக்கு ஒன்றாகத் தவணை முறையில் சொல்லி முழு எண்ணையும் திரும்பக் கூறும்படி கேட்பார். மற்றொருவர் கூட்டி வகுத்துப்…




Read more »

அன்புள்ள அப்பா, அறிவுள்ள அம்மா

By |

  Kungumam column – அற்ப விஷயம் -22 இரா.முருகன் எல்லாம் பாதி ராத்திரி கழிந்து பிரசவ ஆஸ்பத்திரி வாசலில் தொடங்குகிறது. வரி விளம்பரத்தைக் கூட விடாமல் படித்து முடித்து நாலாக, எட்டாக மடித்த தினசரிப் பத்திரிகை. அதை வைத்து விசிறியபடி குறுக்கும் நெடுக்கும் நடைபோடும்போது, கதவு திறக்கிறது. உள்ளே இருந்து குரல் – ‘அப்பா ஆகியிருக்கீங்க’. இந்த மகிழ்ச்சிக்காகவே இருபத்துநாலு மணிநேரம் இடைவிடாமல் ஆஸ்பத்திரி வாசலில் நடக்கலாம். கையில் காப்பி பிளாஸ்க் திணிக்கப்படுகிறது. காப்பியும், எல்லோருக்கும்…




Read more »