Archive For பிப்ரவரி 26, 2015

புதிய நாவல் : அச்சுதம் கேசவம் : அத்தியாயம் 18 இரா.முருகன்

By |

புதிய நாவல் : அச்சுதம் கேசவம் : அத்தியாயம் 18   இரா.முருகன்

கண்பத், சர்வலோக் கேலே? ஹோகா. எல்லோரும் போயாச்சு அணி, ஜண்டா வண்டா சக்ளா? லேவுண் கேலே. கொடியெல்லாம் எடுத்துப் போயிட்டாங்க. திலீப் சாங்க்லி பகுதி விவசாயிகளின் பேச்சு மொழியில் கண்பத் மோதகிடம் விசாரித்துக் கொண்டிருந்தான். அவன் இந்தக் கூட்டத்தைப் பொறுத்த வரை, பம்பாய் மாநகரத்துக்கு வேலை தேடி வந்தவன். கிராமத்தில் கரும்பு பயிரிட்டுப் பயிரும் ஜீவிதமும் கரிந்து போன விவசாயியின் பிள்ளை. எந்த வேலை, எவ்வளவு கூலி என்றாலும் அவனுக்கு சம்மதமே. சாப்பாட்டுக் கடையில் போய்ச் சத்தம்…




Read more »

நீல.பத்மநாபனோடு ஒரு நேர்காணல் – பகுதி 4

By |

நீல.பத்மநாபனோடு ஒரு நேர்காணல் – பகுதி 4

கமல் ஹாசன்: திருவனந்தபுரம் நகரத்தைப் பற்றிய பள்ளிகொண்டபுரம் முக்கியமான பதிவு. நீங்க நடந்து போன பாதையைப் பற்றியது .. நீல.பத்மநாபன்: இப்படி அந்த மூலை முடுக்குகள் அங்கே இங்கேல்லாம் மனதில் நடந்து இந்த ஊரைப் பற்றிப் பதிவு செய்யணும்னு நினைச்சேன்.. இன்னொண்ணு காலப் பிரக்ஞை. …. திணை கோட்பாடு எல்லாம் அப்புறம் தான் படிக்கறேன்.. தொடங்கின காலத்திலே இருந்தே காலமும் வெளியும் ரொம்பவும் உறுத்தக்க் கூட்டிய விஷயம்… இப்பக்கூட நினைக்கிறேன்.. இப்ப பேசுறபோது காலம் ஆகிக்கிட்டு இருக்கு..ஒரு…




Read more »

புதிய சிறுகதை: மீனாக (இரா.முருகன்)

By |

புதிய சிறுகதை: மீனாக     (இரா.முருகன்)

மீனாக இரா. முருகன் மலர் காலை ஐந்து ஐமபத்தைந்துக்கு இரண்டு உறுதிமொழிகளை எடுத்திருந்தாள். அவற்றில் ஒன்றைப் பத்து நிமிஷம் முன்னால் மீறினாள். ‘காலையிலே எழுந்தா குளிப்போம், சாப்பிடுவோம், ஆபீஸ் போவோம்னு கிடையாதா. எப்பப் பாரு மீனைக் கொஞ்சிக்கிட்டு உக்கார வேண்டியது’. ‘இன்னிக்கு கேஷுவல் லீவ். எடுக்கலேன்னா வேஸ்டாப் போகுது’. பிஜோ சிரித்ததைப் பார்க்க அவளுக்குப் பற்றிக் கொண்டு வந்தது. ஹாய்யாக மீன் தொட்டியில் கையை நனைத்துக் கொண்டு நாற்காலியில் சாய்ந்து உட்கார்ந்திருக்கிறவன் சின்னச் சிணுங்கலாக அவ்வப்போது முனகுகிறான்….




Read more »

புது நாவல்: அச்சுதம் கேசவம் : அத்தியாயம் 17 : இரா.முருகன்

By |

புது நாவல்: அச்சுதம் கேசவம் : அத்தியாயம் 17   : இரா.முருகன்

இங்கேல்லாம் நிக்கக் கூடாது. மந்திரி சாப் வீடு. ஹட் ஜா. மலபார் ஹில்ஸ் மந்திரி பங்களா வாசலில் துப்பாக்கி ஊன்றி நின்ற போலீஸ் சேவகன் சொன்னான். சொன்னதோடு மட்டுமில்லை. திலீப் தோளில் கை வைத்து ஓரமாகத் தள்ளினான் அவன். மதராஸி மந்திரி. உள்ளூரில் மந்திரி இல்லை தான். ஆனால், டில்லியில் மத்திய சர்க்காரில் சகல சக்தியோடும் இருக்கப் பட்டவர். மதராஸில் இருந்து இங்கே எப்போதோ குடி பெயர்ந்து, யூனியனில் பிரபலமாகி, கணிசமாக ஓட்டு வாங்கி லோக்சபா, ராஜ்யசபா…




Read more »

புதிய நாவல்: அச்சுதம் கேசவம் : அத்தியாயம் 16 : இரா.முருகன்

By |

புதிய நாவல்: அச்சுதம் கேசவம் : அத்தியாயம் 16 : இரா.முருகன்

அச்சுதம் கேசவம் – அத்தியாயம் பதினாறு இரா.முருகன் கடுதாசி வந்தாச்சு. அமேயர் பாதிரியார் வந்தபடிக்கே, மூச்சு வாங்கிக் கொண்டு அறிவித்தார். போப்பரசர் உத்தரவு. குட்டி ஆடுகளைக் வழிப்படுத்தும் மேய்ப்பன் எழுத்து. கையில் பிடித்திருந்த கடிதாசை உயர்த்திப் பிடித்து அவர் அன்போடு சிரித்தார். உலகெங்கும் வெள்ளமாகக் கருணை பொழிந்து இன்னும் மிச்சம் உள்ளதை வீட்டில் இருக்கப்பட்ட பீப்பாய், தண்ணீர் வாளி, பால் பாத்திரம், மேசைக் கரண்டி, மர ஸ்பூன் என்று எல்லாவற்றிலும் வழிய வழியப் பிடித்து அதுவுமெல்லாம் நிறைய,…




Read more »

புதிய நாவல்: அச்சுதம் கேசவம் : அத்தியாயம் 15 : இரா.முருகன்

By |

புதிய நாவல்: அச்சுதம் கேசவம்  : அத்தியாயம் 15   : இரா.முருகன்

அச்சுதம் கேசவம் – அத்தியாயம் பதினைந்து இரா.முருகன் கொச்சு தெரிசாவுக்கு விழிப்பு வந்தபோது கட்டிலில் புரண்டு படுத்து மெட்காபே, ஒரு முத்தம் தா என்றாள். எடி தெரிசாளே அவன், அந்தக் கேடுகெட்ட மெட்காப் தடியன் கல்லறையில் இருந்து இனியும் திரும்பி வந்து உனக்கு முத்தமும் மற்றதும் அனுபவப்படுத்துவானென்று தோணவில்லை. வந்தாலும் அந்நிய புருஷன் யாரும் அதையொண்ணும் உனக்குத் தரவேணாம். நானே தருகிறேன். வாங்கிக்கொள். முசாபர் புகையிலை மணக்க, ஒழுங்கில்லாமல் கோரைப் புல்லாக வளர்ந்த மீசை தெரிசாவின் மேலுதட்டில்…




Read more »