Archive For நவம்பர் 27, 2015

New Bio-fiction தியூப்ளே வீதி – அத்தியாயம் 29 இரா.முருகன்

By |

New Bio-fiction  தியூப்ளே வீதி  – அத்தியாயம் 29     இரா.முருகன்

என்னைப் பழி வாங்கும் வேகத்தோடு ராத்திரி வேகமாக நகர்ந்து வந்தது. ஞாயிற்றுக்கிழமை இரவு இப்படி வராது. அது ரத்னா தியேட்டரில் ஷான் கானரி நடித்த ஜேம்ஸ் பாண்ட் படமாக இருக்கும். கயலோடு ஒற்றை பாக்கெட் பாப்கார்னையும் ஆர்வமான விரல்களையும் பகிர்ந்து கொள்ளும் இனிமையான சினிமா தியேட்டர் அரையிருட்டாக இருக்கும். கபே ஹவுஸில் லெச்சுவோடு ஓயாத அரட்டையாக, கட்டி தட்டிப் போன சர்க்கரையை வலிந்து கலக்கி ரசித்துக் குடிக்கும் ஆறிப் போன காப்பியாக இருக்கும். கடல்புரத்தில் ஜோசபினைப் பக்கத்தில்…




Read more »

அச்சுதம் கேசவம் நாவல் முன்னுரையில் இருந்து -இரா.முருகன்

By |

அச்சுதம் கேசவம் நாவல் முன்னுரையில் இருந்து -இரா.முருகன்

வெளிவர இருக்கும் என் அடுத்த நாவலான ‘அச்சுதம் கேசவம்’ (நூல் ஒன்று) புத்தகத்துக்கு நான் எழுதிய முன்னுரையில் இருந்து அச்சுதம் கேசவம் (நூல் ஒன்று) முன்னுரை பெருங்கதையாடலின் காலம் முடிந்து விட்டது. பெருங்கதையாடல் நீடு வாழ்க. கிராண்ட் நெரேடிவ், மெடா நெரேடிவ் என்றெல்லாம் பெயர் கொடுத்துச் சுட்டப்பட்டு எழுத்தில் புனைவை இழைத்து வடித்த, நூறு நூறு ஆண்டுகளாக இங்கேயும் எங்கேயும் நிலவி வந்த, வாசாலகமாகப் பெரிய கதை சொல்லும் முறை அரசியல், சமூக, கலாசார, தொழில்நுட்ப மாற்றங்களின்…




Read more »

New Bio-fiction தியூப்ளே வீதி – அத்தியாயம் 28 இரா.முருகன்

By |

New Bio-fiction  தியூப்ளே வீதி  – அத்தியாயம் 28     இரா.முருகன்

கண் விழித்தபோது வெளியே குளிரக் குளிர மழை பெய்து கொண்டிருந்தது. ஒருக்களித்துத் திறந்து கொண்ட மேல் ஜன்னல் வழியே சின்னச் சரங்களாகச் சாரல் உள்ளே மிதந்து வந்து நனைத்தது,. தலை தொடங்கிக் கால் விரல் நுனி வரை தகித்து வெப்ப அலையுயர்த்தும் உடல் சூட்டைப் பகிர்ந்து கொண்டு நெருங்கிப் படுத்திருந்தாள் அமேலி. அவளை மேலும் இறுக அணைத்து நான் திரும்ப உறங்க முற்பட, அவள் குரல் மெதுவாகக் காதில் படிந்தது. ’கண்ணு, நீ ஹால்லே போய் படுத்துக்க’….




Read more »

தியூப்ளே வீதியை நிறைவு செய்யும் நேரத்தில் …

By |

தியூப்ளே வீதியை நிறைவு செய்யும் நேரத்தில் …

எழுத்து பயில்வதில் எழும் மேலதிக மகிழ்ச்சி வாழ்வு சார்ந்த புதினம் – பயோ ஃபிக்‌ஷன் – எழுதும்போது தான். நெம்பர் 40, ரெட்டைத் தெரு எழுதும் போது அனுபவித்தது இது. தியூப்ளே வீதி எழுதிக் கொண்டிருக்கும் போது இன்னும் கூடுதலாக அனுபவித்துக் கொண்டிருப்பதும் இதுவே. பதின்ம வயதின் இறுதியில் மறுபடி போய் நின்று கடந்து வந்த பாதையைப் பார்க்கும் போது, மறுபடி வாழ வாய்ப்புக் கிடைத்த பரவசம். அன்று நீராடிய நதிகளில் எல்லாம் சென்று நீராட விரும்புகிறேன்…




Read more »

New Bio-fiction தியூப்ளே வீதி – அத்தியாயம் 27 இரா.முருகன்

By |

New Bio-fiction        தியூப்ளே வீதி  – அத்தியாயம்  27            இரா.முருகன்

நடராஜன், நீங்க கிளம்புங்க அப்பா என் பக்கம் திரும்பாமல் நேரே வின்செண்ட் நடராஜனைப் பார்த்தபடி சத்தமாகச் சொன்னார். சார், டியூட்டி முடிய நேரம். இருக்குதுங்களே.’ வின்செண்ட்.தயங்கித் தயங்கிச் சொன்னார். அவர் பார்வை என் பேரிலேயே முழுக்க இருந்தது. ‘இன்னிக்கு ஒரு நாள் சீக்கிரம் வீட்டுக்கு போய் ரெஸ்ட் எடுங்களேன்.. மத்தவங்களுக்கு உழைச்சு உழைச்சு என்னத்தைக் கண்டோம். நம்மை நாமே தான் பார்த்துக்கணும். இல்லையோ மரியாதை கெட்டு சாவோம்’. அப்பா அவச்சொல் சொல்லிக் கேட்டதே இல்லை. மனம் நொந்து…




Read more »

New bio-fiction தியூப்ளே வீதி – அத்தியாயம் 26

By |

New bio-fiction   தியூப்ளே வீதி   – அத்தியாயம் 26

இருட்டில் லலி தொலெந்தால் தெரு நோக்கி உருண்டு கொண்டிருந்தது ராலே சைக்கிள். முன்னால் சைக்கிள் பாரில் என் இறுக்கமான கை அணைப்பும், நெருக்கமும், ஏறும் உடல் தகிப்பும் பகிர்ந்த்படி அமேலி. அவள் தோளில் என் முகவாய் இதமாகப் பதிந்து, சிவந்த காது மடல்களை உதடுகள் வருடிக் கொண்டிருக்க, பெடல்களை இயந்திரமாக மிதித்தபடியே நான். ஐந்து நிமிடம் முந்திப் பார்த்த விபத்தை மனதில் திரும்பத் திரும்ப நிகழ்த்திப் பார்த்தபடி ஊர்ந்து கொண்டிருக்கிறேன். நிழற்பட்ங்களின் நீண்ட தொகுதி போல காட்சிகள்…




Read more »