Archive For மே 28, 2015

Bio-fiction புதிய தொடர்: தியூப்ளே வீதி அத்தியாயம் -3 இரா.முருகன்

By |

Bio-fiction புதிய தொடர்:  தியூப்ளே வீதி   அத்தியாயம் -3                இரா.முருகன்

தியூப்ளே வீதி – 3 இரா.முருகன் டவுண் ஹாலுக்கு நான் போனபோது ராத்திரி ஏழு மணி. ஒன்றும் இரண்டுமாக ஆண்கள் வர, தயங்கித் தயங்கி, தாட்டியான பெண்கள் ஏழெட்டுப் பேர் நீளப் பாவாடை அணிந்து ஒரு கூட்டமாக வந்து தனியாகவே உட்கார்ந்தார்கள். விக்தோ என்னிடம் முதல் காரியமாக அந்த டவுண்ஹாலின் பெயரை எப்படிச் சரியாகச் சொல்வது என்று சொல்லிக் கொடுத்தார். அவர் காட்டிய பெயர்ப் பலகையில் ‘Mairie Hotel De Ville’ என்று போட்டிருந்ததை பிரஞ்சில் பெப்பெப்பே…




Read more »

புது நாவல்: அச்சுதம் கேசவம் : அத்தியாயம் 36 இரா.முருகன்

By |

புது நாவல்: அச்சுதம் கேசவம் : அத்தியாயம் 36       இரா.முருகன்

அச்சுதம் கேசவம் – அத்தியாயம் முப்பத்தாறு இரா.முருகன் ஆலங்கட்டி மழையோடு மாலை கவிந்தது. புழுதி மண் மணக்க மணக்கத் தெருவே பண்டிகைக் கொண்டாட்டமாகக் குதியாட்டம் போட்டுக் கொண்டிருந்தது. அந்த இரைச்சல் ஜன்னல் வழியே கடந்து வந்து உள்ளே நிறைந்த போது, வைத்தாஸும் வாசலுக்கு வந்தான். இரண்டு கட்டிடம் தாண்டி மோட்டார் கார் ஒர்க்‌ஷாப் தரையில் சிதறிக் கிடந்த திருப்புளிகளும், சுத்தியலும், பழுது பார்க்கும் சர்தார் சாஹப்பின் நீலத் தலைப்பாகையும், தனக்குள் சிறிய வானவில் காட்டும் மசகெண்ணெய் தேங்கிய…




Read more »

புது நாவல் : அச்சுதம் கேசவம் : அத்தியாய 35 இரா.முருகன்

By |

புது நாவல் : அச்சுதம் கேசவம்  : அத்தியாய 35       இரா.முருகன்

அச்சுதம் கேசவம் – அத்தியாயம் முப்பத்தைந்து இரா.முருகன் உங்கள் நாட்டில் போய் வேலை பார்க்க நான் தயார். எனக்கு அனுமதி விசா கொடுக்க முடியுமா? எதிரே உட்கார்ந்து, செயற்கைக் காலின் இருப்பைக் கால் சராய்க்குள் கைவிட்டுச் சோதித்தபடி கேட்ட வயோதிகரைக் கூர்ந்து பார்த்தான் வைத்தாஸ். இவர் சாயலில் யாரையோ பார்த்திருக்கேன். யார்? வைத்தாஸ் மனதில் திரும்பத் திரும்பத் தோன்றிக் கொண்டிருந்ததற்கு விடை கிடைத்த வினாடியில் தான் வந்தவர் விசா கோரியது. அவர், கட்டைக்கால் வைத்த அந்த மதராஸி,…




Read more »

புது நாவல் : அச்சுதம் கேசவம் அத்தியாயம் 34 இரா.முருகன்

By |

புது நாவல் : அச்சுதம் கேசவம்     அத்தியாயம் 34      இரா.முருகன்

அச்சுதம் கேசவம் – அத்தியாயம் முப்பத்தி நாலு இரா.முருகன் தகரத்தை நீளத் தட்டி, முன்னால் அதுக்கி நிறுத்தி நாலு சக்கரமும் பொருத்தி அனுப்பிய மாதிரியான டெம்போக்கள் கட்டாந்தரையில் ஊர்ந்து புழுதி கிளப்பிப் போகிற தெரு. அதை மிகவும் ஒட்டியே அந்தப் பழைய காரைக் கட்டடம் நின்று கொண்டிருந்தது. வாசலில் சூழ்நிலைக்குப் பொருந்தாத அதிகார மிடுக்கோடு, தூதரகம் என்று சொல்லும் பலகை தொங்கிக் கொண்டிருந்தது. இரண்டே அறைகள். முன்னறையில் படுத்து உறங்க பழைய மரக்கட்டில். பின்னறையில் மேடை போட்டு…




Read more »

Bio-fiction புதுத் தொடர் : தியூப்ளே வீதி – அத்தியாயம் 2 இரா.முருகன்

By |

Bio-fiction புதுத் தொடர் : தியூப்ளே வீதி  – அத்தியாயம் 2      இரா.முருகன்

தியூப்ளே வீதி – 2 இரா.முருகன் (Dinamani.com தளத்தில் வியாழக்கிழமை தோறும்) நான் சைக்கிளோடு காம்பவுண்டுக்கு வெளியே வந்தபோது அவசரமாக ஒரு சைக்கிள் ரிக்‌ஷா என்னை இடித்துக் கொண்டு வந்து நின்றது. ‘பான்ழ்யூர் முஸ்யே’ கீச்சென்று ஒரு குரல் வீறிட்டது. சைக்கிளை இடுப்பில் சாய்த்துப் பிடித்துக் கொண்டு பார்த்தேன். குரலுக்குக் கொஞ்சம் கூடப் பொருத்தமில்லாத ஆறரை அடி ஆஜானுபாகு உருவத்தோடு விக்டர் ரிக்‌ஷாவில் இருந்து இறங்கிக் கொண்டிருந்தார். நேற்றுக் காலையில் ரயில்வே ஸ்டேஷனுக்கு அப்பாவை வரவேற்க அவர்…




Read more »

என் புதிய கட்டுரை – அம்புஜம்மாள் தெருவில் : ஜன்னல் மே 15 2015

By |

என் புதிய கட்டுரை – அம்புஜம்மாள் தெருவில் : ஜன்னல் மே 15 2015

தெய்வத்தை நினைத்து, அம்புஜம்மாள் தெருவில் ஸ்கூட்டர் நிறுத்தினேன். போன காரியம் முடிந்து திரும்ப வந்தால் வண்டி இருக்கும். ஆனால் தெரு காணாமல் போய்விடக் கூடும். மாநகராட்சி தொடங்கி, மத்திய சர்க்கார் தொலைபேசித் துறை வரை சளைக்காமல் ஆழமாகவும் அகலமாகவும் தோண்டிய வீதி அது. பதவி ஓய்வு பெற்று சென்னை வந்த வேண்டப்பட்ட ஒருவர் அங்கே இருந்தார். அவரைச் சந்திக்கப் போகும் நிமித்தம், அடிக்கடி நான் கடவுளை நினைக்க வேண்டிப் போன ஆயிரத்துத் தொளாயிரத்துத் தொண்ணூறுகள், அந்தக் காலகட்டம்….




Read more »