Archive For ஜூன் 20, 2016

New Novel : வாழ்ந்து போதீரே – அத்தியாயம் 31 இரா.முருகன்

By |

New Novel : வாழ்ந்து போதீரே – அத்தியாயம் 31                       இரா.முருகன்

ராத்திரி ஏழரை மணிக்கு நகரம் உறங்கப் போயிருந்தது. எண் எழுதிய கதவுப் பலகைகளைச் சரியாக எடுத்து வைத்துக் கடைகளை அடைக்கும் வேலை தெருவெங்கும் மும்முரமாக நடக்க, வீதிக் கோடி நூலகத்தின் அறைகள் ஒவ்வொன்றாக இருள் அணிந்தன. தொடர்ந்து நூலகத்தின், மணிகள் அலங்கரிக்கும் பெரிய வாசல் கதவுகளும் அடைபட்டுக் கொண்டிருக்க, ஓரத்துப் படிகள் வழியே இறங்கிய கடைசி இரண்டு பேர் நடாஷாவும் திலீபும் தான். ஆறரை மணிக்கு அடச்சுடுவோம். புரட்சியை நிகழ்த்திக் காட்டிய சித்தாந்தம் ஜெயிச்சு உலகை ஆளும்…




Read more »

New Novel: வாழ்ந்து போதீரே அத்தியாயம் 30 இரா.முருகன்

By |

New Novel:  வாழ்ந்து போதீரே     அத்தியாயம்  30     இரா.முருகன்

நாலு நாள் இனி ஆபீஸ் அடச்சுப் பூட்டி இருக்கும். நீ வழக்கம் போல் இங்கே தங்கிக்க தடை ஒண்ணும் இல்லே. கல்கத்தா குக்கல் குரைத்தான். குக்கல் என்றால் நாய் என்று அப்பா சொன்னது திலீப் நினைவில் உண்டு. அந்த நாய் பிஸ்கட் கம்பெனி ரிடையர்ட் முடி பிடுங்கி நாய் ஜெனரல் மேனேஜர் சாஸ்திரி இப்படிச் சொன்னது நேற்று சாயந்திரம். திலீப் மறு பேச்சு பேசும் முன்னால், அடுத்த கட்டளையையும் வந்து விழுந்தது. நடாஷா வாசிலிவிஸ்கி இங்கே பிரிண்டிங்…




Read more »

New Novel : வாழ்ந்து போதீரே – அத்தியாயம் 29 இரா.முருகன்

By |

New Novel :  வாழ்ந்து போதீரே      –  அத்தியாயம்  29                   இரா.முருகன்

எல்லாம், மழை வலுத்து வரும் காயலில் இருந்து படகு திரும்பத் துறைக்கு வந்ததோடு தொடங்கியது. இருண்டு ஆர்பரிக்கும் கடல். அது தொட்டு விடும் தூரத்தில் என்றாலும் படகை எல்லாத் திசையிலும் சுழல வைக்கும் நீர்ப் பெருக்கும், மழையோடு கலந்த காற்றுப் பெருக்கும் கடலோடு செல்லாமல் திரும்பச் சொல்லி வற்புறுத்த, படகுத் துறைக்குத் திரும்பியபோது சங்கரனுக்கும் தெரிசாவுக்கும் பகல் நேர வயிற்றுப் பசியாக இந்தப் பொழுது தலையெடுத்தது. புறப்பட்டுப் போன மற்றப் படகுகள் அருகே தீவில் ஒதுங்கியிருப்பதாகவும், அவை…




Read more »

New Novel : வாழ்ந்து போதீரே அத்தியாயம் 28 இரா.முருகன்

By |

New Novel : வாழ்ந்து போதீரே            அத்தியாயம்  28                இரா.முருகன்

நாட்டுப்புறக் கலை, கலாச்சார விழாவும் மாநாடும் எல்லோர் மீதும் பரிபூர்ணமாகக் கவிந்திருந்தது. ஆட்டக் கலைஞர்கள் மட்டுமில்லாமல் பிரதிநிதிகளும் கூட, நடக்கும் போதோ, இருந்து பேசும்போதோ அதே நினைவாக இருந்தார்கள். அவர்கள் கை கால் அசைவிலும், கண் அசைவிலும் அவ்வப்போது நளினம் தெறித்துக் காட்சி வைப்பது தன்னிச்சையாக நிகழ்ந்தது. நாலு நாள் கொண்டாட்டம் இன்றைக்கு முடிவடைகிறது. மூன்று நாளிலேயே முடியும் விஷயத்தை வலிந்து நாலு ஆக்கிய சர்க்கார் உத்யோகஸ்தர்கள், நடத்த நிகழ்ச்சி இல்லாமல், வெளிநாட்டுப் பிரதிநிதிகளுக்கு என்ன வேடிக்கை…




Read more »

ராஜாமகளின் ‘இப்படிக்கு …. கோதை’ என்ற புத்தகம்

By |

ராஜாமகளின் ‘இப்படிக்கு …. கோதை’ என்ற புத்தகம்

மாதவன் என் மணியினை வலையிற் பிழைத்த பன்றி போல் ஏதும் ஒன்றும் கொளத் தாரா ஈசன்தன்னைக் கண்டீரே? பீதக-ஆடை உடை தாழப் பெருங் கார்மேகக் கன்றே போல் வீதி ஆர வருவானை விருந்தாவனத்தே கண்டோமே. மடிக் கணினியில் சஞ்சய் சுப்ரமண்யன் குரலில் ஆண்டாளின் நாச்சியார் திருமொழி (சாமா ராகம்) ஒலிக்கிறது. ’வாழ்ந்து போதீரே’க்கு அடுத்து எழுத இருக்கும் நாவலுக்கான கள ஆய்வு செய்ய மங்களூர்-ரத்னகிரி வழிப் பயணத் திட்டத்தை வகுத்துக் கொண்டிருக்கிறேன். கூரியர் சர்வீஸ் அழைப்பு. கோதை…




Read more »

Peacock in Achutham Kesavam

By |

Peacock in Achutham Kesavam

அச்சுதம் கேசவம் நாவலில் மயில் அவ்வப்போது வருவது குறித்து இலக்கிய வாசகரான ஒரு நண்பரோடு நடத்திய உரையாடல் – நண்பர் : Sir a little input from you will help me understanding your writing better. I asked about the peacock and its significance. When you have time please tell what was your thought process while writing it. I am not sure…




Read more »