Archive For டிசம்பர் 12, 2019

திருச்செந்தூரார் சாப்பாட்டுக்கடையை முன்வைத்து – 2

By |

நுழையும்போதே சல்யூட் அடித்த காவல்காரர் சின்னச் சிரிப்போடு அப்புறம் கொடுங்க என்றார் நக்கலான சென்னைச் சிரிப்பில்லை நேசமான செட்டிநாட்டுப் புன்னகை. அந்தக்கால சோவியத் நாட்டு ஏரோஃப்ளோட் விமான சேவையில் கண்டிப்பான உபசரிணிபோல் ஓவர்கோட் பெண்கள் வாழை இலைவிரித்த மேசைமுன்னே இருந்துண்ண இடம் சுட்டினர். உளுந்து வடையா உழுந்து வடையா பட்டிமன்றம் நீண்டுபோக வேகம் உண்ணும் நான் பார்த்த நாலு பேரும் இன்னும் தொலைவில் ஒரு சிலரும் மென்றபடிக்கிருந்தது வடைகளே என்ன வேண்டும் சொல்லும்முன் எனக்கும் கொணர்ந்தார் வடைகள்…




Read more »

திருச்செந்தூரார் சாப்பாட்டுக்கடையை முன்வைத்து – 1

By |

மறதி குறித்த மனக் குமைச்சலோடு வார இறுதிக் காலை விடிந்தது. வெண்பாப் போட்டியில் வென்றாருக்கு வாக்குத் தத்தம் செய்தபடி ரெவ்வெண்டு போத்தல் கேரளப் படைப்பு புளியிஞ்சி வாங்கி அனுப்பினேனிலன் இஞ்சியோடு கண்ணாடிச் சில்லும் ஊறுகாயாவதாய் படித்ததாலஃது. சொல்ல மறந்தேன் சேதி எவர்க்கும். பாண்டி பஜார் பாலாஜி பவனத்தில் ஊரே ருசிக்கும் காப்பி அருந்த அழைப்பு விடுத்தேன் நண்பர் கவிஞர்க்கு அழைப்பை மறந்து அசோகநகர் குடிபெயர்ந்தேன். நிகனொர் பர்ரா அகவிதை என்றவர் போக. ஊர்தி என்று இலக்கிய சஞ்சிகை…




Read more »