Archive For நவம்பர் 28, 2014

காலம் சென்ற எஸ்.பொ வுக்கு அஞ்சலியாக – முன்னுரைகளின் முகவுரை – இரா.முருகன்

By |

எஸ்.பொ அளவுக்கு விமர்சனத்தை எதிர் கொள்ள வேண்டிய நிலைமை ஒரு படைப்பாளிக்கு வந்தால் கூறாமல் எழுத்து சந்நியாசம் போயிருப்பான். போயிருப்பாள். தமிழ் என்றில்லை, எந்த மொழி என்றாலும் இதே படிக்குத்தான். இவ்வளவு நீண்ட காலம், அதாவது கிட்டத்தட்ட அரை நூற்றாண்டு இப்படி யாரையும் துரத்தித் துரத்தி அடிக்க விமர்சகர்களும் சக எழுத்தாளர்களும் எங்கேயும் முனைந்ததாகத் தெரியவில்லை. சளைக்காமல், புறமுதுகு காட்டாமால் இந்த மாட்டடி, காட்டடியை எல்லாம் சமாளித்து நிற்கவே ஏகப்பட்ட பிரயத்தனம் தேவை. இதோடு கூடவே புதிதாகப்…




Read more »

ஆப்பிரிக்கத் தமிழ்க் கிராமக் கதைகள்

By |

ஆப்பிரிக்கத் தமிழ்க் கிராமக் கதைகள்

ஆப்பிரிக்கத் தமிழ்க் கிராமக் கதைகள் (‘ஏதோ ஒரு பக்கம்’ பத்தி) எழுத்தாளனாக இருப்பதில் ஒரு சௌகரியம். இலக்கியம் சம்பந்தமாக எந்த நிகழ்ச்சி எங்கே நடந்தாலும் அநேகமாக சம்மன் இல்லாமல் ஆஜராகி விடலாம். அதுவும் வேற்று நாட்டில், குறிப்பாக ஸ்காட்லாந்து என்றால் கேட்கவே வேண்டாம். ஸ்காட்லாந்தில் வெய்யில் காலம் ஆரம்பிக்கும்போது அந்தப் பிரதேசமே விழாக் கோலம் பூண்டுவிடும். ஒரே நாளில் பத்து இடத்தில் நாடக விழா, இன்னொரு நாலு தியேட்டரில் கலைப் படங்கள், நாலைந்து மேடைகளில் சாஸ்திரிய, பாப்…




Read more »

ஏதோ ஒரு பக்கம் (இரா.முருகன்) குறும்பட சந்தோஷம்

By |

(Excerpt from a forthcoming book ) ஏதோ ஒரு பக்கம் (இரா.முருகன்) குறும்பட சந்தோஷம் சமீபத்திய சந்தோஷங்களில் ஒன்று ‘ரெட்டைத் தெரு’ குறும்பட வெளியீடு. நேர்பட, எதுவும் தவறாமல் நடந்து முடிந்த் விழா அது. பொதுவாக, பொது நிகழ்ச்சிகள் நடத்துவதில் சென்னை வழக்கத்தை விட மற்ற ஊர் வளமுறை கொஞ்சம் இறுக்கம் தளர்ந்திருப்பது வாடிக்கை. அது சில சமயம் ஓர் ஆசுவாசம் தரும். பல நேரங்களில் எரிச்சலையும் உண்டாக்கும். இந்த ‘சரி, செஞ்சுடலாம்’ ரிலாக்சேஷன் அரசுத்…




Read more »

ஏதோ ஒரு பக்கம் இரா.முருகன்

By |

(Excerpt from a forthcoming book ) ஏதோ ஒரு பக்கம் இரா.முருகன் கும்பகோணம் என்று எங்கேயாவது கேட்டால் எனக்கு வென்னீர் பக்கெட் தான் உடனடியாக நினைவு வரும். அதென்னமோ, வேறே நாட்டுக்கு, ஊருக்குப் பயணம் போகும்போது எல்லாம் சாவதானமாக திட்டம் போடுவேன். ராமராஜ் உள்ளாடை தொடங்கி பல் துலக்கும் பிரஷ் ஈறாக எடுத்துப் போக வேண்டியவற்றின் பட்டியல் தயாரிக்கப்படும். சேர்த்து வைத்திருந்த அந்தப் பட்டியல்களை இப்போது பார்க்கும்போது ஒன்று சட்டென்று புரிகிறது. பத்து வருடம் முன்னால்…




Read more »

வீட்டுக் கடனைக் கட்டிப் பார்

By |

வீட்டுக் கடனைக் கட்டிப் பார்

இன்றைய (நவம்பர் 13, 2014) தி இந்து நாளிதழில் வெளியாகியுள்ள என் கட்டுரை வீட்டுக் கடனைக் கட்டிப் பார் வங்கிகள் பிறப்பதற்குக் கன காலம் முன்பே வசிப்பிடத்தின் பேரில் வழங்கப்படும் வீட்டு அடமானக் கடன் (Mortgage Loan) புழக்கத்துக்கு வந்துவிட்டது. வீட்டு உடமைக்கான ஆவணத்தைக் கடன் வழங்கும் வங்கியிடம் கொடுத்து வைத்திருந்து, வாங்கிய தொகையை வட்டியோடு கட்டி முடித்தவுடன் அந்தப் பத்திரத்தைத் திரும்ப வாங்குவது அடமானக் கடனுக்கான நடைமுறை. பெரும்பாலும் புது வீடு கட்டவோ, கட்டிக் குடியிருக்…




Read more »

நண்பர் திரு.கமல் ஹாசன் அவர்களுக்கு இதயம் நிறைந்த 60-ம் பிறந்த நாள் வாழ்த்துகள்

By |

நண்பர் திரு.கமல் ஹாசன் அவர்களுக்கு இதயம் நிறைந்த 60-ம் பிறந்த நாள் வாழ்த்துகள்

குமுதம் கமல் 60 சிறப்பு மலரில் என் கட்டுரை மூன்று அழைப்புகள் மொபைல் கூப்பிட்டது. ’பிரைவேட் நம்பர் அழைக்கிறது. நண்பர் கமல் தான். இன்னும் பத்து நிமிடத்தில் கார் சாவியைத் தேட வேண்டும்.. அல்லது கம்ப்யூட்டரைத் திறக்க வேண்டும். ‘என்ன சார், வரணுமா?’ ‘ஆமா’ கார் சாவி.. ‘காரில் வர வேணாம், திருவனந்தபுரம் போகறோம்’. முக்கியமான தமிழ் எழுத்தாளரான நீல.பத்மநாபனைச் சந்திக்க திருவனந்தபுரத்தில் அவர் வீட்டில் நாங்கள் மறுநாள் காலையில் இருந்தோம். எங்களை அன்போடு வரவேற்றார் அந்த…




Read more »