Author Archive

New : பீரங்கிப் பாடல்கள் நாவல் வெளியாகியுள்ளது : தம் பிரியாணி குறிப்புகள்

By |

New : பீரங்கிப் பாடல்கள் நாவல் வெளியாகியுள்ளது : தம் பிரியாணி குறிப்புகள்

An excerpt from ‘Beerangi PaadalkaL’ பீரங்கிப் பாடல்கள் நாவலிலிருந்து ஒரு சிறிய பகுதி எட்வின்சேட்டன் வேலை ஆரம்பித்தது அவருடைய குழுவிலுள்ள வேலையாட்கள் வெளிச் சருகை உரித்து சுத்தமாக்கி வைத்த பெரிய வெங்காயத்தோடுதான். இடது கையால் ஒவ்வொரு வெங்காயமாக எடுத்து உயர்த்திப் பிடித்து வலது கையில் வைத்திருந்த கத்தியால் நீள வாக்கில் அரிந்து தரையில் வைத்திருந்த முறத்தில் போட்டார் அவர். இடது கையில் வெங்காயம் இல்லாவிட்டாலும் வலது கையில் பிடித்திருந்த கத்தி உயர்ந்தது. ஒரு முறம் நிறையும்…




Read more »

Earworms

By |

Earworms

earworm எல்லோருக்கும் வரும். காலையில் கேட்ட ஏதாவது பாட்டு மனதில் போய் உட்கார்ந்து உட்காதில் நாள் முழுக்க ஒலித்துக் கொண்டே இருப்பது அது. 24 அல்லது 48 மணி நேரத்தில் வேறொரு பாட்டு உட்செவியில் நுழைய இது இறங்கி விடும். எங்கள் பிரச்சனை கொஞ்சம் வேறே மாதிரி. இது mutated ear worm சமாசாரம். கொஞ்சும் புறாவே பாட்டைக் கேட்ட என் பெருந்தலைவர் நண்பர் நரசிம்ம ராவே என்று நாள் முழுக்கப் பாடிக் கொண்டிருந்ததாகச் சொன்னார். எனக்கு…




Read more »

அச்சுதம் கேசவம் – அத்தியாயம் பனிரெண்டு

By |

அச்சுதம் கேசவம் – அத்தியாயம் பனிரெண்டு இரா.முருகன் 1964 ஏப்ரல் 3 வெள்ளிக்கிழமை சின்னச் சங்கரன் அவன் அப்பா சாமிநாதனுக்கு திவசம் கொடுத்துக் கொண்டு உட்கார்ந்திருக்கிறான். அப்பா சாமிநாதன் தி செகண்ட். பிள்ளையான இவன் சங்கரன் தி செகண்ட். செகண்டா, இல்லை, ஆறா, ஏழா? தெரியாது. பிரிட்டீஷ் ராஜ வம்சம் மாதிரி, போன தலைமுறையில் வைத்து வழங்கி வந்த பெயர் தான் வம்சம் மேலும் தழைக்க வைக்க உதவும் என்கிறார்கள், பெயர் வைக்கப் பணிக்கப் பட்டவர்கள். சின்னச்…




Read more »

அச்சுதம் கேசவம் – அத்தியாயம் பதினொன்று

By |

அச்சுதம் கேசவம் – அத்தியாயம் பதினொன்று இரா.முருகன் ஏப்ரல் 2 1964 வியாழக்கிழமை அரசூர் ஜீவித்திருந்தது. காலம் கடந்து ஜீவித்திருந்தது. எல்லோருக்கும் ஏதாவது ஒரு கணத்தில் பிரியமாகும் கிழவனைப் போல. நித்தியப்படிக்குக் கரித்துக் கொட்டி, எப்போ ஒழிவானோ, எழவு ஓயுமோ என்று அங்கலாய்க்கிற சகலமானவருக்கும் பிருஷ்டத்தைக் காட்டிக் கொண்டு, நிதானமாக வேட்டி திருத்திக் கட்டிக் கொள்கிற சோனியான கிழவன் போல. எல்லோரிடமும் நேசத்தை யாசித்து, ஒரு வெகுளிச் சிரிப்போடு தளர்ந்து நிற்கிற வயசனாக. வயோதிகச் சிரிப்பின் வசீகரத்தோடு…




Read more »

அச்சுதம் கேசவம் – அத்தியாயம் பத்து

By |

அச்சுதம் கேசவம் – அத்தியாயம் பத்து எத்தனைவது முறையாகவோ லண்டன். வைத்தாஸ் உலகத்தில் எங்கே இருந்தாலும் தேடிக் கண்டுபிடிக்கப் பட்டு உடன் லண்டன் அனுப்பி வைக்கப் படுகிறான். போன வருடம் ஆகஸ்டில் இந்தியா போயிருந்தபோது அப்படித்தான் நடந்தது. அவன் அம்பலப்புழையில் இருந்தது பற்றி வைத்தாஸின் அரசாங்கத்துக்கு மூக்கு வியர்த்து விட்டது. உடனே கிளம்பி லண்டன் போ என்று விரட்டினார்கள். மேல்சாந்தியோடு பேச ஆரம்பித்ததை அரைகுறையாக முடித்துக் கொண்டு திரும்ப வேண்டிப் போனது அப்போது. அம்பலப்புழை மேல்சாந்தி மகன்,…




Read more »

அச்சுதம் கேசவம் – அத்தியாயம் ஒன்பது

By |

அச்சுதம் கேசவம் – அத்தியாயம் ஒன்பது இரா.முருகன் மார்ச் 26 1964 வியாழக்கிழமை அது பிசாசு பிடிச்ச வண்டி ஒண்ணும் இல்லை என்றார் அமேயர் பாதிரியார். ரொம்பத் தெளிவான வார்த்தைகள். அவர் இருக்கப்பட்ட பிரதேசத்தில் இப்படியான சில்லுண்டி வினோதம், வேடிக்கை எதுவும் நடக்காது. நடக்கிற எல்லாவற்றுக்கும் காரண காரியம் இருக்கும். அற்புதங்கள் ரோம் நகரில் இருந்து மடாலய அறிவிப்போடு ஞாயிற்றுக்கிழமை தவிர்த்த பிற தினங்களில் எப்போதாவது நிகழக் கூடும். அவற்றில் யந்திரங்கள் சம்பந்தப்பட்டிருக்காது. அவர் முன்னால் நின்றபடி…




Read more »