Archive For ஜூலை 30, 2016

New nove: வாழ்ந்து போதீரே அத்தியாயம் 36 இரா.முருகன்

By |

New nove: வாழ்ந்து போதீரே       அத்தியாயம்  36            இரா.முருகன்

மலா பாக ருபயீ த்யா, மோதா பாவு. அப்பன் காஹீ தூபா கரீதீ கரூ. ஐந்து நிமிஷம் முன் டோம்பிவிலி ஃபாஸ்ட் லோக்கல் ரயிலில் வந்து சேர்ந்தவன், ரிடர்ன் டிக்கட்டை சிகரெட் பாக்கெட்டுக்குள் பத்திரப்படுத்தியபடி திலீப்பிடம் சொன்னான். ஐந்து ரூபாய் வேணுமாம். போய் நெய் வாங்கி வருவானாம். நாலு மூங்கில் கழிகளும் தென்னங் கிடுகுமாக சைக்கிளில் வந்த இன்னொருத்தன் வண்டி பிரேக் பிடிக்காமலோ, இல்லை விளையாட்டாகவோ கட்டிடச் சுவரில், சினிமா கதாநாயகி நடிகை நூதன் படம் ஒட்டிய…




Read more »

New : Talespin – Column for The Wagon Magazine – July 2016 Era.Murukan

By |

New : Talespin – Column for The Wagon Magazine – July 2016   Era.Murukan

What the stars foretell and the sub-text of it I just glanced through the astrological forecast for the week for my star sign, that was published in an internet magazine. The 300 word weekly prediction written in a tech-savvy lingo nudges me to stir out of my castle without losing further time and acquire a…




Read more »

New : காட்டுக் கோவில் கவிதைகள் இரா.முருகன்

By |

New : காட்டுக் கோவில் கவிதைகள்     இரா.முருகன்

மறையும் கதிர்கள் மஞ்சள் பூசிய நிலையும் கதவும் கடந்து இலைகள் உதிர்ந்த ஊர்வெளிக் கோவில் வாசலில் யட்சி கண்டோர் மரித்தோர் கலந்தோர் கணக்கெதற்கு? As twilight paints a golden tinge at the facade of the dilapidated temple the yakshi steps out One more to behold, lust and die Do I care? அந்தியில் உறங்கும் நகர் எங்கும் கனவுகளில் கொண்டாட்டம். நானும் உண்டோ? கதவு கதவாகத் தட்டிப்…




Read more »

New novel : வாழ்ந்து போதீரே அத்தியாயம் 35 இரா.முருகன்

By |

New novel : வாழ்ந்து போதீரே    அத்தியாயம் 35    இரா.முருகன்

ஆல்பர்ட் மிடிங்டன் ரிச்சர்ட்சன் பிரபு நடுராத்திரிக்கு வழக்கம்போல் எழுந்து கொண்டார். அவர் உலவப் புறப்பட வேண்டிய நேரம் அது. எழுந்ததும் தான் தெரிந்தது, அவர் கூடுதலாகவே உறங்கி விட்டிருந்தார் என்று. பொழுது புலர்ந்து கொண்டிருந்தது. சலவை செய்த உடைகள் மர பீரோவில் இருப்பதை அவர் உறுதி செய்து கொள்ள வேண்டும். அவை எப்போதும் அணியத் தயாராக நானூறு வருடமாகப் புதியதாக இருப்பவை. தினசரி அவற்றை உடுத்தே அவர் நடப்பார். மர பீரோவில் அவருடைய துணிகள் கசங்கிக் கிடக்க,…




Read more »

New : உரைகொள் வெண்பா – சாக்பீஸ் அடிகொள் படிப்பு இரா.முருகன்

By |

New : உரைகொள் வெண்பா – சாக்பீஸ் அடிகொள் படிப்பு     இரா.முருகன்

தொம்பங் கூத்தாடி அநாயாசமாக இரண்டு மூங்கில்களுக்கு நடுவே ஒரு பனை உயரத்தில் கட்டிய தாம்புக் கயிற்றில் நடந்தான். பிடி வழுக்காமல் கம்பம் ஏறி இறங்கினான். ஒரு கழியை விட்டு மற்றதற்கு நொடியில் தாவினான். பார்த்துக் கொண்டிருந்த திருடன் தொழில் கணக்கு போட்டான் – இவனைக் கூடச் சேர்த்துக் கொண்டு அரண்மனையில் திருடப் போனால் கை நிறைய, முதுகில் மூட்டை நிறையக் கொண்டு வரலாமே. ஆளுக்குப் பாதி. ஒப்பந்தம் ஆனது. நடு ராத்திரி. அரண்மனை மதிலுக்கு அந்தப் பக்கம்…




Read more »

New Novel : வாழ்ந்து போதீரே அத்தியாயம் 34 இரா.முருகன்

By |

New Novel :  வாழ்ந்து போதீரே           அத்தியாயம் 34  இரா.முருகன்

கால்டர்டேலில் இருந்து லீட்ஸ் ஒரு மணி நேரப் பயணம். அங்கே இருந்து லண்டன். அது இன்னொரு மூணு மணி நேரம். ரெண்டும் ரெண்டு கம்பெனி ரயில்களில். கால்டர்டேலில் ஏறி உட்காரும் ரயில் ரொம்பப் பழையது. பிரிட்டீஷ் சாம்ராஜ்யம் போன நூற்றாண்டில் இந்தியாவில் அறிமுகப்படுத்தி அறுபது வருடம் அங்கே சகலமான பிரஜைகளும் நெருங்கி அடித்து உட்கார்ந்து மரப் பலகை ஆசனங்களைத் தேய்த்து, அப்புறம் திரும்ப இங்கிலாந்துக்கு மறு ஏற்றுமதி ஆன ரயில் கம்பார்ட்மெண்ட்கள் கொண்டது. அப்படித்தான் சொல்கிறார்கள். வேடிக்கையாகவோ,…




Read more »