Archive For ஆகஸ்ட் 30, 2018

நாவலை நாடகமாக்கும் போது – தியூப்ளே வீதி நாடமாக்கம் குறித்து..

By |

ஓர் இலக்கிய அல்லது கலைப் படைப்பை ஒரு வடிவத்திலிருந்து மற்றதற்கு மாற்றும்போது எழும் சவால்கள் சுவாரசியமானவை. நாவலை நாடகமாக்குவது குறித்து இது. என் ’தியூப்ளே வீதி’ நாவலில் ஒரு அத்தியாயத்தில் வரும் முக்கியமான பத்தி : // சுவர்க்கோழிகள் கூக்குரல் எழுப்பி ஊரைக் கூட்ட முற்பட, அமேலி என்னைத் தழுவினாள். அவள் முகத்தில் எதையோ வெற்றி கொண்ட சந்தோஷம் படிந்து பரிசுத்தத்தின் நிரந்தரச் சாயலை அழிக்க முற்பட்டுக் கொண்டிருந்தது. துடிக்கும் அவள் உதட்டில், என்னைச் சிறையெடுத்த அழகான…




Read more »

நெய்மாரும் ஓர்சித்தர் தான் – இன்றைய வெண்பாக்கள்

By |

“I cannot be the referee and play at the same time but there are times I wish I could.” Neymar ஆடவும் வேண்டுமந்த ஆட்ட நடுவராய் ஓடவும் வேண்டுமே ஓர்பந்து – கூடவர அய்யா வழிகண்டால் மெய்ஞான போதமது நெய்மாரும் சித்தரே காண் Neymar Finally Speaks After Brazil’s 2018 World Cup Loss கீழ்ப்படி ஊழியர்க்குக் கிட்டுகின்ற சம்பளத்தில் ஏழரை நூறுசதம் எம்.டிக்காம் – வாழ்ந்திடுக நட்டமென்றால்…




Read more »

New : பீரங்கிப் பாடல்கள் நாவல் வெளியாகியுள்ளது : தம் பிரியாணி குறிப்புகள்

By |

New : பீரங்கிப் பாடல்கள் நாவல் வெளியாகியுள்ளது : தம் பிரியாணி குறிப்புகள்

An excerpt from ‘Beerangi PaadalkaL’ பீரங்கிப் பாடல்கள் நாவலிலிருந்து ஒரு சிறிய பகுதி எட்வின்சேட்டன் வேலை ஆரம்பித்தது அவருடைய குழுவிலுள்ள வேலையாட்கள் வெளிச் சருகை உரித்து சுத்தமாக்கி வைத்த பெரிய வெங்காயத்தோடுதான். இடது கையால் ஒவ்வொரு வெங்காயமாக எடுத்து உயர்த்திப் பிடித்து வலது கையில் வைத்திருந்த கத்தியால் நீள வாக்கில் அரிந்து தரையில் வைத்திருந்த முறத்தில் போட்டார் அவர். இடது கையில் வெங்காயம் இல்லாவிட்டாலும் வலது கையில் பிடித்திருந்த கத்தி உயர்ந்தது. ஒரு முறம் நிறையும்…




Read more »