Archive For ஜனவரி 26, 2020

புதிய சிறுகதை ‘பொடி’ – இரா.முருகன்

By |

இந்து தமிழ் திசை – பொங்கல் மலர் 2020 சிறப்பு வெளியீட்டில் வெளியாகியிருக்கும் என் சிறுகதை ‘பொடி’ – முழு வடிவம் ——————————————————————— பொடி ஆபீஸில் திடீரென்று லீவு விட்டார்கள். இங்கிலீஷ் மண்ணுக்கும் பாரதபூமிக்கும் சகல சௌபாக்கியமும், ஜெயமும், மேழிச் செல்வமும், கோழி இறைச்சியும் தட்டாமல் கிடைத்தபடி இருக்க வழி செய்த விக்டோரியா சக்ரவர்த்தினியும், அவர்தம் மணாளர் ஆல்பர்ட் அரசரும் சந்தோஷமாக இருந்த நாள் இது. விக்டோரியா சக்கரவர்த்தினி பூவுலகில் அவதரித்த ஜன்ம தினம். ரெண்டு பேரும்…




Read more »

ஸ்ரீதர் நாராயணனின் ‘கத்திக்காரன்’ சிறுகதைத் தொகுதி குறித்து

By |

ஸ்ரீதர் நாராயணனின் ‘கத்திக்காரன்’ சிறுகதைத் தொகுதி குறித்து

நண்பர் ஸ்ரீதர் நாராயணனின் கத்திக்காரன் தொகுப்புக்கு நான் அளித்த முன்னுரை எழுத எப்படியோ, படிக்க, நாவலை விடச் சிறுகதைத் தொகுப்பு சிலாக்கியமானது. முன்னும் பின்னுமாக அங்கங்கே ஒவ்வொரு கதையாகப் படித்து அவ்வப்போது நிறுத்தித் தொடரும் வசதி நாவலில் கிட்டாது. காலமும், களமும், கருப்பொருளும் நடையும் ஒவ்வொரு கதைக்கும் ஒவ்வொரு மாதிரியாக அமைந்திருந்தால், வாசிப்பனுபவம் எந்தக் குறையுமின்றிப் பிரவகிக்கும். ஸ்ரீதர் நாராயணனுக்குக் கைவந்த கலையாகச் சிறுகதை ஊற்றெடுத்துப் பொங்கிப் பிரவகிக்கிறது. இந்தச் சிறுகதைத் தொகுப்பு பற்றி அவர் சொல்வது…




Read more »