Archive For அக்டோபர் 28, 2014

அருண் கொலட்கர் கவிதை – மொழியாக்கம் இரா.முருகன் (ஜெஜூரி கவிதைத் தொகுப்பில் இருந்து)

By |

அருண் கொலட்கர் கவிதை – மொழியாக்கம் இரா.முருகன் (ஜெஜூரி கவிதைத் தொகுப்பில் இருந்து) கதவு சிலுவையிலிருந்து பாதி இறக்கப் பட்ட தீர்க்கதரிசி போல, ஆடியபடி தொங்கும் தியாகி போல, இரும்புப் பட்டை ஒன்று உடைந்துபோய் மற்றதின் பிடிமானத்தில் பழைய கதவு நிற்கும். ஒருமுனை தெருப் புழுதியைத் தொட மற்றது உயர்ந்த நிலைப்படியில் தட்டும். நாள்பட நாள்படக் கூர்மையாகும் பழைய நினைவுகள் போல் சிலும்புகள் மேலெங்கும் துருத்தி இருக்கும். உயிரியல் புத்தகத்திற்குள் திரும்பப் போக வழிதெரியாத தோல்சிதைந்த தசைமனிதப்…




Read more »

அருண் கொலட்கர் கவிதை – மொழியாக்கம் இரா.முருகன் Kala Goda Poems – கவிதைத் தொகுப்பில் இருந்து

By |

எலி மருந்துக்காரனின் பகல் சாப்பாட்டு நேரம் 1 எலிமருந்து விளம்பரம் எழுதிய ஒற்றைக்கால் பலகையை ஓட்டல் சுவரில் சார்த்திவிட்டு எலி நஞ்சு விற்பவன் நடைபாதையில் மதியச் சாப்பாட்டுக்கு உட்கார்ந்து விட்டான். விளம்பரப் பலகைக்கு முதுகைக் காட்டிக்கொண்டு, சத்தம் கூடி எழும் அரசமர நிழலில் அவன். விரக்தியடைந்த பலகை சுவரை வெறித்துக்கொண்டு தண்டிக்கப் பட்டதுபோல நிற்கிறது. மனதில் உள்ளதை மறைத்துவிட்டு வடிவமில்லாத எதையும் அறிவிக்காத வெறுமையான பின்புறத்தைப் போகிறவன் வருகிறவனுக்குக் காட்டியபடி. மரச் சட்டகத்தில் பரந்து கிடக்கும் சலனமில்லாத…




Read more »

தாவோ கோவிலுக்கு எப்படிப் போவது ?

By |

தாவோ கோவிலுக்கு எப்படிப் போவது ?

வீட்டைப் பூட்டாதே. விடியலின் பள்ளத்தாக்கில் இளங்காற்றில் இலைபோல் கனமில்லாமல் போ. வெளுத்த மேனியென்றால் சாம்பல் பூசி மறைத்துப்போ. அதிகம் அறிவுண்டென்றால் அரைத் தூக்கத்தில் போ. வேகம் மிகுந்தது வேகம் தளரும். மெல்லப் போ. நிலைத்தது போல் மெல்ல. நீர்போல் வடிவமற்று இரு. அடங்கி இரு. உச்சிக்கு உயர முயலவே வேண்டாம். பிரதட்சிணம் செய்யவேண்டாம். வெறுமைக்கு இடம்வலமில்லை முன்னும் பின்னுமில்லை. பெயர்சொல்லி அழைக்க வேண்டாம். இவன் பெயருக்குப் பெயரில்லை. வழிபாடுகள் வேண்டாம். வெறுங்குடத்தோடு போ. நிறைகுடத்தைவிட சுமக்க எளிது….




Read more »

அமுதசுரபி தீபாவளி மலர் 2014

By |

அமுதசுரபி தீபாவளி மலர் 2014 வெள்ளிக்கிழமைகளின் கதை சிறுகதை இரா.முருகன் ——————————————– எங்கள் தலைக்கு மேல் ஒரு வாடிக்கையாளர் உண்டு.. கம்ப்யூட்டர் சாஃப்ட்வேர் கம்பெனிக்கு வாய்க்கும் எல்லா வாடிக்கையாளர்களும் தலைக்கு மேல் ஏறி உட்கார்ந்து அதிகாரம் செய்யறவங்க தானேன்னு கேட்கறீங்களா? உண்மைதான். ஆனாலும் இந்த வாடிக்கையாளர கொஞ்சம் விசேஷம். கோடிக் கணக்கில் பிசினஸ் நடத்தும் இண்டர்நெட் மளிகைக்கடையான இஞ்சி டாட் காம். கைப்பிடியில் கஸ்டமர் வாய்க்க, நாங்களே கூப்பிட்டுத் தலையில் ஏற்றிக் கொண்ட தலையாய குடைச்சல். எங்கள்…




Read more »

நான் ராஜம் கிருஷ்ணனோடு 2008-ல் இலக்கிய இதழ் ‘வார்த்தை’க்காக நடாத்திய நேர்காணலின் சொற்பதிவு இது

By |

நான் ராஜம் கிருஷ்ணனோடு 2008-ல் இலக்கிய இதழ் ‘வார்த்தை’க்காக நடாத்திய நேர்காணலின் சொற்பதிவு இது

முதுபெரும் எழுத்தாளர் ராஜம் கிருஷ்ணன் நேற்று மறைந்தார். அவர் ஆன்மா சாந்தியடைய என் பிரார்த்தனைகள். நான் ராஜம் கிருஷ்ணனோடு 2008-ல் இலக்கிய இதழ் ‘வார்த்தை’க்காக நடாத்திய நேர்காணலின் சொற்பதிவு இது – ராஜம் கிருஷ்ணன் சந்திப்பு December 5, 2008, 12:27 pm ‘வார்த்தை’ பத்தி – குட்டப்பன் கார்னர் ஷோப் – ஒன்பது இன்றைக்கு துலா மாசத்து சஷ்டி. அப்பா திதி. விஷ்ராந்தி போயிருந்தேன். பாலவாக்கம் மாதாகோவிலோடு திரும்பிக் கடற்கரையை நோக்கிப் போகும்போது உள்ளொடுங்கி இருக்கிற…




Read more »

பங்குக்கு முந்தலாமா?

By |

பங்குக்கு முந்தலாமா?

இன்றைய தமிழ் இந்து நாளிதழில் என் கட்டுரை பங்குச் சந்தை என்னும் மாய உலகம் எப்படியெல்லாம் இயங்குகிறது! பங்குச் சந்தை சுவாரசியமான இடம். அங்கே ஜெயித்தவர்கள் மேலும் ஜெயித்துக்கொண்டிருக்கிறார்கள். மற்றவர்கள், ‘ஷேர் மார்க்கெட்டில் வெற்றி பெறுவது எப்படி?’ என்று புத்தகம் எழுதிக்கொண்டிருக்கிறார்கள். மூலதனத்தைப் பொதுமக்களிடம் பங்குத்தொகையாக வாங்கிச் சேர்த்து நடைபெறும் நிறுவனங்களின் லாப நிலவரம், வளர்ச்சிக்கான வாய்ப்பு, சொத்து மதிப்பு இப்படிப் பலவற்றையும் பொறுத்துப் பங்கு மதிப்பு உயரும் அல்லது தாழும். பங்கு விலை குறையும்போது வாங்கி,…




Read more »