Archive For செப்டம்பர் 30, 2022

ராத்திரி வண்டி

By |

ராத்திரி வண்டி

‘வடக்கே எல்லாம் டீத்தூளைஉம் பாலோட சேர்த்துக் கொதிக்க வச்சுத்தான் டீ தயார் பண்ணுவாங்க’.   ’நல்லா இருக்குமா என்ன அது?’   ஸ்டேஷன் மாஸ்டர் கவலையோடு கேட்டான்.   ‘நான் வாரணாசியிலே இருந்தபோது அப்படிக் குடிச்சே பழகிடுத்து’   ‘வாரணாசின்னா காசிதானே? பெரிய கோயிலெல்லாம் இருக்கு இல்லே?’   ‘நான் அங்கே மசான கட்டத்தைத் தான் வரஞ்சுக்கிட்டிருந்தேன். எரிச்சு எரிச்சு கங்கையிலே விடுவாங்க. படிக்கட்டு எல்லாம் சாவு பூசிக்கிட்டு எப்பவும் வைராக்கியத்தோட கிடக்கும்’.   ‘பார்க்க எப்படியோ…




Read more »

ராத்திரி வண்டி குறுநாவல் – ஸ்டேஷன் மாஸ்டரின் தேநீர் உபசாரம்

By |

ராத்திரி வண்டி குறுநாவல் – ஸ்டேஷன் மாஸ்டரின் தேநீர் உபசாரம்

ராத்திரி வண்டி                  இரா.முருகன்  பகுதி – 3   தேசிகர் ஒடுக்கத்தில் இருக்கிறார். வெளியே ஓதுவார்கள் சத்தம் போட்டுப் பாடிக் கொண்டிருக்கிறார்கள். இது வழக்கமான தேவாரப் பண் இல்லை. இங்கிலீஷ் மோஸ்தரில் கட்டிய பாட்டு…   ’துங்கஞ்சார் தருதுரைசை யில்வளர் சுப்பிரமணிய தயாநிதியே…’   அலையில் மிதக்கிற படகுபோல, பெங்குவின் பறவைகள் கூட்டமாக அடியெடுத்து வைக்கிறது போல், தோய்த்து உலர்த்திய காவித் துணிகள் காற்றில் பறந்து அலைக்கழிவது போல… காதிலே ஜவ்வந்திப் பூ வைத்து, கூரை வேய்ந்த…




Read more »

எம் எஃப் உசைன், பெந்த்ரெ, அர்ப்பணா கவுர், கீவ் படேல் .. ராமச்சந்திரன் இந்த வரிசையிலே இல்லே

By |

எம் எஃப் உசைன், பெந்த்ரெ, அர்ப்பணா கவுர், கீவ் படேல் .. ராமச்சந்திரன் இந்த வரிசையிலே இல்லே

ராத்திரி வண்டி   குறுநாவல்  பகுதி  2 இ   ராசுப்பய ஓடினதுக்கு அப்புறம் கோயில் சுவர்லே எவனோ வடைன்னு ஆரம்பிச்சு எழுதியிருந்தான். பக்கத்திலே பொம்பளை படம். டிராயிங் மாஸ்டர் கிட்டே படிச்ச பயதான்… பொம்பளைக்கு எப்படி புறா சாயல் வரும்?   இந்தா வரையறானே இந்தப் பொம்பளைக்கு … பொம்பளையா, மோகினியா… இடுப்பிலே ஏதாவது முண்டு மாதிரி சுத்தியிருந்தா நல்லா இருக்கும்… மறைச்சாத் தானே பார்க்கத் தோணும்..அது என்ன.. கதையிலே வருமே.. இன்ப ஊகங்களுக்கு இடமளித்தது… யட்சிக்கு…




Read more »

புறா வரையக் கற்றுக் கொடுத்தவரும் பூசணி சாகுபடியும்

By |

புறா வரையக் கற்றுக் கொடுத்தவரும் பூசணி சாகுபடியும்

குறுநாவல்    ராத்திரி வண்டி   2 ஆ   சீவகன் பெஞ்ச் ஓரத்தில் உட்கார்ந்து கொண்டான். படத்தையும் வரைகிறவனையும் மாறிமாறிப் பார்த்தான்.   ஒரு பெரிய மண்டபம். சுருள் சுருளாக இருட்டும் வெளிச்சமும் மாறி மாறி நிறம் காட்ட, வளைந்து போகும் மாடிப் படிகள். அந்த மாய லோகத்தில் ஒரு பக்கம் ஓட்டை உடசல் நாற்காலி, பழைய கடியாரம், பெடஸ்டல் ஃபேன் என்று அம்பாரமாகக் குவிந்திருக்கிறது. உடம்பில் துணி இல்லாமல், ஒரு இளம்பெண் படிக்கட்டு அருகே தரையில் கால்…




Read more »

ரயில்வே ஸ்டேஷனில் ஓவியன் – சர்ரியலிச ஓவியம்

By |

ரயில்வே ஸ்டேஷனில் ஓவியன் – சர்ரியலிச ஓவியம்

ராத்திரி வண்டி    குறுநாவல்              இரா.முருகன்  பகுதி – 2 அ   ’அசிங்கமாப் படம் போட்டிட்டிருக்கார் சார்.. இங்கே கொஞ்சம் வாங்க..’   புக்கிங் கிளார்க் ராமசாமி குரல் முன்னால் வந்தது. அப்புறம் சங்கடமாகச் சிரித்துக் கொண்டே கலாசி கணபதி.   பெஞ்சில் யாரது?   அவன் கொஞ்சம் வித்யாசமாகத் தெரிந்தான். பிடிவாதம் பிடிக்கும் குழந்தையைப் போல் நாக்கைத் துருத்திக்கொண்டு சிமெண்ட் பெஞ்சின் விளிம்பில் தொக்கினாற்போல் உட்கார்ந்திருந்தான். முன்னால் விரித்து வைத்த பலகை. ஒரு முப்பது வயது….




Read more »

ராத்திரி வண்டி – குறுநாவல்

By |

ராத்திரி வண்டி – குறுநாவல்

ராத்திரி வண்டி  –  குறுநாவல்     ’கணையாழி’யில் தி.ஜானகிராமன் நினைவுக் குறுநாவல் போட்டியில் தேர்வாகி, ஜுன் 1992-ல் பிரசுரமானது.  அட்சரா பதிப்பகம் வெளியிட்ட என் முதல் குறுநாவல் தொகுப்பான ‘தகவல்காரர்’ நூலில் இடம் பெற்றது.   இந்தக் குறுநாவலின் கதையாடல் பற்றிக் குறிப்பிட வேண்டும். நனவோடை சற்றே மாற்றமடைந்து கதைப் போக்கில் அவ்வப்போது முன்னால் வந்து வந்து போகும் இந்தக் கதையாடல், இதற்கு அப்புறம் எழுந்த என் அரசூர் நாவல்களுக்கான நடையைத் தீர்மானிப்பதில் பெரும் பங்கு…




Read more »