Archive For The “பொது” Category

ஆடத் தெரியாத தேவதைக்கு இங்கே இடம் இல்லை

By |

ஆடத் தெரியாத தேவதைக்கு இங்கே இடம் இல்லை

வாழ்ந்து போதீரே = அரசூர் நான்கு நாவல் தொகுதியில் நான்காவதிலிருந்து அடுத்த சிறு பகுதி ============================================================================= வைத்தாஸ் திருமேனி என்று யாரோ விளிக்கிற சத்தம். குடைக்கார சாமு.   ஒரு மழைக் காலத்தில் வைத்தாஸ் ஊருக்கு முதலில் வந்தது முதல் தனக்கு சிநேகிதமான சரித்திரத்தை வாய் நிறைய புட்டையும் கடலையும் அடைத்து மென்றபடி சாமு சொன்னபோது சுவரில் சார்த்தி வைத்திருந்த அவனுடைய குடையும் சுவாரசியமாகக் கேட்டது.   வைத்தாஸ் அடுத்த பெஞ்சில் உட்கார்ந்து பொதுவாகப் பார்த்துச் சிரித்தான்….




Read more »

உலகின் ஏதோ மூலையிலிருந்து நாரை போல் சன்னமாக ஒலிக்கும் குரல் – நந்தினி

By |

உலகின் ஏதோ மூலையிலிருந்து நாரை போல் சன்னமாக ஒலிக்கும் குரல் – நந்தினி

வாழ்ந்து போதீரே – அரசூர் நான்காம் நாவலில் இருந்து அடுத்த சிறு பகுதி இங்கே   நேற்றுக் காலையில் கோவிலுக்கு அடுத்த தெருவில் போய்ப் பார்த்த புராதன வீட்டிலும் அர்ஜுன நிருத்த ஆபீஸ் தான் இயங்கிக் கொண்டிருந்தது. அப்படித்தான் சொன்னார் குறூப். பம்பாயிலிருந்து வந்த அமைச்சரின் மனைவியாம் அங்கே நிர்வாகம் செய்து வரும் மதராஸ் பெண்மணி.   எம்பிராந்திரியின் வீட்டுக்காரியான முதுபெண் சோழி உருட்டிப் பார்த்துச் சொல்லித் தான் அந்த வீட்டைப் பார்க்கப் போயிருந்தான் வைத்தாஸ். அந்தப்…




Read more »

பெண்கள் இல்லாத நடனத்தை ரசிக்கும் மக்கள் கூட்டங்களும் அர்ஜுன நிருத்தமும்

By |

பெண்கள் இல்லாத நடனத்தை ரசிக்கும் மக்கள் கூட்டங்களும் அர்ஜுன நிருத்தமும்

வாழ்ந்து போதீரே – அரசூர் நான்கு நாவல் தொகுப்பில் நான்காம் நாவல்- அடுத்த சிறு பகுதி இங்கே விநோதமான ஊர் இது. நெற்றியில் சந்தனம் பூசாமல் யாரும் வெளியே இறங்குவதில்லை போலிருக்கிறது. யாரை அடுத்துப் போனாலும் சந்தன வாசம் தான் மூக்கில் குத்துகிறது. கிறிஸ்தியானிகளும் இதரரும் கூட வீட்டுக்குள் இருக்கும்போது மணக்க மணக்கப் பூசி இருந்து, வெளியே இறங்கும்போது மனசே இல்லாமல் அழித்துத் துடைத்து விட்டு, ரோமக்கால்களில் இறங்கிய மிச்ச சொச்ச வாடையோடு தான் நடமாடுகிறதாகத் தோன்றுகிறது….




Read more »

வாடிக்கையாளர் இல்லாத நாவலாசிரியரும் சிறாரில்லாத வாடிக்கையாளரும்

By |

வாடிக்கையாளர் இல்லாத நாவலாசிரியரும் சிறாரில்லாத வாடிக்கையாளரும்

வாழ்ந்து போதீரே அரசூர் நாவல் நான்கில் அடுத்த சிறு பகுதி ]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]] இந்தப் புத்தகங்களில் ஒரு புதுமை இருக்கிறதே, கவனித்தீர்களா என்று கேட்டார் பக்கத்து இருக்கை தாடிக்கார பப்ளிஷர்.   பக்கங்கள் கொஞ்சம் கூடுதல் கனத்தோடு இருக்கின்றன. படங்கள் அடர்த்தியான வர்ண மசியில் அச்சடிக்கப் பட்டு இன்னும் அக்ரலிக் வாடை பலமாக மூக்கில் முட்டிக் கொண்டிருக்கிறது. சற்று பிசுபிசுப்பும் படத்தில் உண்டு. மற்றப்படி வேறுபட்டு எதுவும் இல்லையே?   நீங்கள் கவனித்திருக்க மாட்டீர்கள், தெரியுமே.   தொலைந்து…




Read more »

நர்சரி பாடல்களின் பயன்பாடு யாது எனச் சிற்றுரை ஆற்றுக

By |

நர்சரி பாடல்களின் பயன்பாடு யாது எனச் சிற்றுரை ஆற்றுக

வாழ்ந்து போதீரே- அரசூர் நாவல் வரிசையில் நான்காம் நாவல். அதிலிருந்து அடுத்த சிறு பகுதி   நான் இங்கே உட்காரலாமா?   சந்தனமும் மற்றும் ஏதுமோ மணக்கும் குரல். அளவாக நறுக்கிச் சீராக்கிய நரைத் தாடி வைத்த மனுஷர் ஒருத்தர் வைத்தாஸின் இருக்கைக்கு அருகே எதிர்பார்ப்போடு இடுப்பு வளைத்து நின்று நைச்சியமாக அவனைக் கேட்டார்.   தாராளமாக உட்காரலாம்.   விமானப் பணிப் பெண் ஒழித்துப் போன இருக்கையில் அமர்ந்தவர் இரு கண்ணும் மூடி ஒரு நிமிடம்…




Read more »

இந்த விமான சேவையைப் பயன்படுத்திக் கொள்க அல்லது நரகத்துக்குச் செல்க

By |

இந்த விமான சேவையைப் பயன்படுத்திக் கொள்க அல்லது நரகத்துக்குச் செல்க

வாழ்ந்து போதீரே – அரசூர் நான்கு நாவல் வரிசையில் நான்காம் நாவலின் அடுத்த சிறு பகுதி [[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[              வைத்தாஸ்  எழுதும் நாவலில் இருந்து   ஆர்க்கிட் விமான நிறுவனம் உங்களை வரவேற்கிறது. உங்களைப் பயணியாகப் பெற்றுள்ளதில் இந்த ஆர்க்கிட் விமானத்தின் விமான ஓட்டியர் மற்றும் உதவி விமான ஓட்டியர், உபசரிணியர் பெருமகிழ்ச்சியடைந்துள்ளனர்.   இந்த விமானம் இன்னும் ஐந்து நிமிடத்தில் வானில் ஏறும்.   (அதற்கப்புறம் நீங்கள் to The Hell போகலாம்).  …




Read more »