Chavadi, Chillu and Sugar Streetசாவடியும் சில்லும் சர்க்கரைத் தெருவும்

சாவடி என்றொரு மேடை நாடகம். கொத்தவால் சாவடி தான் களம். காலம்? 1914 செப்டம்பர் 22 செவ்வாய்க்கிழமைக்கு இரண்டு நாள் சென்று. அந்தத் தேதியின் விசேஷம்? முதல் உலகப் போர் நேரம் அது. ஜெர்மனியக் கப்பல் எம்டன் சென்னைத் துறைமுகத்துக்கு அருகே வந்து குண்டு வீசித் தாக்கிய இரவு.

முதல் பிரதியில் சில மாற்றங்கள் செய்ய உட்கார்ந்தால் நாடகம் இன்னும் வளர்ந்து நிற்கிறது! சரி அப்படியே இருக்கக் கடவது. அதற்கு ஒரு தாற்காலிக முற்றும் போட்டு ‘சில்லு’ குறுநாவலை நாடகமாக்குவதில் நேற்றைய தினம் கடந்து போனது.

என்னமோ நாடகத்தில் இப்போது ஒரு விருப்பம்..

ராத்திரி திடீரென்று எகிப்திய் நாவலாசிரியர் நக்யுப் மெஹ்பூஸ் (Naguib Mahfouz) எழுதிய ‘கெய்ரோ மூன்று நாவல்’ வரிசையின் கடைசி நாவல் ‘சர்க்கரைத் தெரு’ (ஷுகர் ஸ்ட்ரீட்) நினைவு வந்தது. எங்கேயோ வைத்த பிரதியைத் தேடி.. கிடைக்கவில்லை.

மேஜிக்கல் ரியலிசத்தை எனக்குப் பாடம் சொன்ன கார்சியா மார்க்வேயை விட, நக்யுப் மெஹ்பூஸ் தன் கெய்ரோ மூன்று நாவல் தொகுதி மூலம் என்னைப் பாதித்தது அதிகம்.

சர்க்கரைத் தெருவின் வாசிப்பு இனிமையில் ஒரு துளியாவது அச்சுதம் கேசவம் தர, அம்பலப்புழை ஸ்ரீகிருஷ்ணன் அருளட்டும்.

(இரா.மு 29.4.2013)

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன