நீல.பத்மநாபனுடன் ஒரு நாள் – பகுதி 3

(காவ்யா இலக்கியக் காலாண்டிதழ் அக்டோபர் – டிசம்பர் 2014)

இரா.முருகன் : ‘தலைமுறைகள்’ நாவலில் வரும் உண்ணாமலை ஆச்சி, திரவி இந்த பாத்திரங்கள்..

நீல.பத்மநாபன்: கூனாங்கண்ணி பாட்டா.. திரவியம் .. இந்த மாதிரி கதாபாத்திரங்கள் எல்லாம் அசல் தமிழ் தான்.. தமிழ்லே தான் பேச்சு.. பேச்சுன்னா stream of consciousness .. நனைவோடை. சிலர் கேட்டாங்க.. சார் நீங்க வேணும்னா கதாபாத்திரங்கள் பேச்சுக்கு அந்த வட்டார வழக்கைக் கொடுக்கலாம்.. ஆனா நாவலாசிரியராக நீங்க சொல்வதாக இருக்கும் இடஙக்ளிலும் ஏன் அந்த மாதிரி தமிழை கொடுக்கறீங்க? நான் சொன்னேன் – ’அது என் மொழி இல்லை. திரவியுடைய எண்ணம்.. நனவோட உத்தியிலே சித்தரிக்கறதாலே அந்த எண்ணம் பதிவாகிறது தாறுமாறாகத்தான் இருக்கும்’ … தமிழர்கள் தூய்மையாளர்கள் (puritans). அதை அங்கீகரிக்க மாட்டாங்கன்னு தெரியும் தெரிஞ்சுதான் அதை நான் எதிர்நீச்சல் மாதிரி செய்தேன்.

கமல் ஹாசன்: தற்காப்புன்னு ஒண்ணு, உத்வேகம்னு ஒண்ணு, வியாபாரம்னு ஒண்ணு.. இருக்கு. நீங்களே பிரசுரம் செய்ய வேண்டிய நிலைமை வந்தபோது அதை நீங்க அந்த மூணுலே எதுவா வச்சு பண்ணினீங்க?

நீல: உத்வேகம்தான் இவ்வளவு தூரம் பண்றாங்களே.. நம்மாலே என்ன பண்ண முடியும்னு காட்டுவோம்னு உத்வேகம்.

கமல் விளைவுகளப் பற்றிக் கவலைப் படவில்லையா?

நீல: இல்லை. நாவலோட எல்லா பிரதிகளையும் இலவசமாக, பரிசாகத்தான் வழங்கினேன். எனக்கு புத்தகம் விற்றுப் பணம் எதுவும் கிடைக்கலே இன்னிக்கும் அப்படித்தான்.. தமிழ்நாட்டுலே புத்தகம் விலை கொடுத்து யார் வாங்கறாங்க? நான் அனுப்பி வச்சவங்க தான் டெல்லியில் அதை ’வாங்குவாங்குன்னு வாங்கினாங்க’ கொஞ்சம் பேர்.. நான் தான் அவங்களுக்கு புத்தகம் அனுப்பி வச்சேன்.. ரொம்ப பிரபலமானவங்க… கணையாழி பத்திரிகையிலே அப்போ இருந்தவங்க ..

கமல் ந்கையாடியவங்களுக்கு இந்த நகைக் கதை எல்லாம் தெரியாது

நீல: உயர் ஜாதி தஞ்சாவூர் கொச்சை திருநெல்வேலி கொச்சை ஏத்துப்பாங்க.. தலைமுறைகளில் வருவது போல இப்படி ஒரு கொச்சை.. வட்டார வழக்கு தமிழ்நாடூலே இருக்கான்னு கேட்டாங்க.

கமல்:இன்னும் ஒரு குறையும் உண்டு. தமிழர்கள தூய்மை விரும்பிகள் .. puritans-னு சொன்னீங்களே.. சிலதை தாங்கிப்பாங்க.. மற்ற சிலவற்றை ஏற்றுக்கொள்ள மாட்டாங்க.. ஒரு நாட்டார் வழக்கை ஏத்துக்கிட்டவங்க, இரணியல் பேச்சு வழக்கான இதை ஏன் ஏத்துக்கலேன்னு ஆச்சரியமாகத் தான் இருக்கு.

நீல: கடைசியிலே கநாசு தான் தலைமுறைகள் தமிழில் பத்து சிறந்த நாவல்க்ளில் ஒண்ணுன்னு சொன்னார்..Orinet Paperback ஓரியண்ட் பேப்பர் பேக் வெளியீடாக ஆங்கிலத்தில் பத்தாயிரம் காப்பி போட்டாங்க.. கநாசு தான் மொழி பெயர்த்தார். ஜெர்மன் மொழியில் வந்தது.. இன்னும் நிறைய மொழிகளில் பிரசுரமாகி வந்தது.. இப்படி ஓஹோன்னு வந்த பிறகு மூலத் தமிழ் நாவலுக்கு இங்கேயும் பாராட்டு வந்தது. எதிர்த்தவங்களும் அதைப் பாராட்டி சொன்னாங்க..

கமல்: இந்தமாதிரி கதை தான் நான் ப.சிங்காரம் பற்றியும் கேள்விப்பட்ட்து.. அவரைப் பேட்டி காணமுடியலே. இது மாதிரி அவர் நாவலை

இரா: புயலில் ஒரு தோணியா?

கமல்: ஆமா புயலில் ஒரு தோணியை சொந்தமாகவே பிரசுரம் பண்ணி விற்க முடியாமல் பீரோவிலே கட்டுக்கட்டாக வச்சிருந்தார்னு கேள்விப்பட்டிருக்கேன்

நீல: தலைமுறைகள் 400 பக்கத்துக்கு மேலே இருந்தது. பிரசுரம் செய்யவும் முதலீடு கணிசமாத் தான் வேண்டி இருந்ததது. நான் அதில் ஒரு வரி மாற்ற மாட்டேன்னு சொல்லிட்டேன்.

கமல்: ஓ மாற்றச் சொல்லி, சுருக்கச் சொல்லி வேறே கேட்டாங்களா? உங்க காசு தானே?

(சிரிப்பு)

நீல: எனக்கு வேகம்.. பைத்தியக்காரத்தனமான வேகமாகவும் இருக்கலாம்.. நான் அந்தக் காலத்தில் , இன்றைக்கு நினக்கற அளவுக்கு நெனக்கறது இல்லே.. .. நான் என்ன சொல்ல வந்தேன்னா பள்ளிகொண்டபுரம் தொடர்பாகவும் அந்த வேகம் இருந்ததுன்னு சொல்லணும்.. (ஒரு நாவல் முடித்தவுடன்) அடுத்த நாவல் பற்றி நினைச்சா, பிரசவ வைராக்கியம் மாதிரி ’போதுமடா சாமி இனியும் ஒரு நாவல் இப்படி எழுத வேணாம்.. இப்படி கஷ்டப்படவும் வேணாம்.. சக்தி ந்மக்குக் கிடையாது’ன்னு தோணும்…

கமல்: வேலை சம்பளம் இந்த மாதிரி சிந்தனைகள்..

நீல: வேலையையும் எழுத்தையும் நான் ஒண்ணாகவே நினைக்க மாட்டேன். வேலை எழுத்து ரெண்டும் ரெண்டு இணைக்கவே முடியாது ஆபீசில் ரொம்ப பேருக்கு நான் எழுத்தாளர்னு தெரியாது. எழுத்துத் துறையிலும் மின்னுலகம் மாதிரி நாவல் வர்றதுக்கு முன்னாடி நான் எஞ்ஜினியர்னு ரொம்ப பேருக்கு தெரியாது. அப்போது தான் … இனியும் கொஞ்சம் வருஷம் ஆன பிற்பாடு, எழுத வேண்டும்னு வேகம் வந்த போது இதுக்கு முன்னாடி பண்ணாதது மாதிரி இருக்கணும் தலைமுறைகளை வேணா இமிடேட் பண்ணலாம் நான் இந்த ஊரில் தான் பிறந்தேன் நான் பிறந்து வளர்ந்த நகரத்தை நடுநாயகமக்கி நாவல் எழுத முடியுமா? அதை நான் பிறந்து வளர்ந்த சமூகத்தை தலைமுறைகளில் கையாண்ட மாதிரி, இந்த நகரத்தை நாவலில் சித்தரிக்கணும்னு எழுதியதுதான் பள்ளிகொண்டபுரம்.. என்றாலும் ஒரு இடத்திலும் நகரத்தோட பெயரை சொல்லவே இல்லை சிலபேர் கேட்டாங்க.. இங்கே இருக்கற நாயர் சமுதாயத்தினுடைய (வரலாறு, வாழ்க்கை முறை) எல்லாம் சொல்லியிருந்தால் நாவல் இன்னும் கூட நல்லா இருந்திருகுமேன்னாங்க.. அவங்க முந்தைய நாவலை எதிர்த்தவங்க கூட. நான் சொன்னேன் – ‘நான் சமூகவியலில் விற்பன்னன் இல்லே.. மரபியல் வரலாற்றாளனும் (anthropologist) இல்லை.. எனக்கு அதல்ல விஷயம்..வரலாறு சொல்வது இல்லை குறிக்கோள்.. நான் முன்னாலே எழுதியதைச் சொல்லி கிடைக்கக் கூடிய எளிய வெற்றிய விட நான் இதுவரை எழுத்தில் செய்யாத சோதனை செய்து கிடைக்கக் கூடிய தோல்வியானாலும் ஏத்துக்கறேன்..’.. அப்படித்தான் அந்த நாவல் .. பள்ளிகொண்டபுரம் எழுதினேன்.. அதிர்ஷ்டவசமாக, வாசகர் வட்டம் லட்சுமி கிருஷ்ணமூர்த்தி அதை ஏத்துக்கிட்டாங்க.. அவங்களுக்கு நாவல் பிடிச்சிருந்தது. அவங்க கேரளத்தில் கோட்டயத்திலே இருந்தவங்க

இரா: வாசகர் வட்டம் முதல் பதிப்பாக வந்தது.. அப்புறம் காலச்சுவடு..

நீல ஆமா, காலச்சுவடு க்ளாசிக் எடிஷனா ..செம்பதிப்பு போட்டாங்க

கமல் : வாசகர் வட்டம் எப்போ வெளிவந்தது?

நீல: 1970. மணிவாசகர் பதிப்பகம் இரண்டாம் பதிப்பு போட்டாங்க.. காலச்சுவ்டு நாலாவது பதிப்பு. வாசகர் வட்டம் இப்போ இல்லே.. மூடியாச்சு .. மணிவாசகர் பதிப்புக்கு ரொம்ப வரவேற்பு இருந்தது. அதை ரஷய மொழியிலே ஒரு ரஷ்யப் பெண்மணி மொழிபெயர்த்தாங்க… . நேஷன்ல் புக் டிரஸ்ட்லே எல்லா மொழிகளிலும் போட்டாங்க.. யாத்ரா கா அந்த் இந்தியில் வெளிவந்த மொழிபெயர்ப்பின் தலைப்பு.. மலையாளத்திலே ஹிந்தியிலே இருந்து மொழிபெயர்ப்பு. மலையாளத்திலே ரெண்டு மூணு பதிப்பு வந்திருக்கு.

இரா: இந்தியில் இருந்து மலையாளமா?

நீல இல்லே இங்கிலீஷ்லே இருந்து மலையாளம் போனது.

இரா அதைப் படிச்சுட்டு தானே கிருஷ்ண வாரியர் சிறப்பித்துச் சொன்னது.

நீல ஆங்கிலத்தில் CLS சி எல் எஸ் போட்டாங்க CLS தலைமை நிர்வாகியாக பாக்யமுத்து இருந்தார்…அதுக்கு எழுதின முன்னுரையில் தான் வாரியர்..நீங்க சொன்னதை பிரமாதமா சொல்லியிருக்கார் மத்தவங்க எல்லாம் திருவனந்தபுரத்தை நாவல்லே கையாண்டிருக்காங்க.. தகழி, சி.வி.ராமன் பிள்ளை எல்லோரும் .. சாதாரணமா சென்னை நாவல்னா மயிலாப்பூர்லேருந்து பஸ் ஏறிப் போனார்னு பெயரைக் குறிப்பிட்டு எழுதினால் தீர்ந்தது .. பள்ளிகொண்டபுரத்தில் வருவது நான் பிறந்து வளர்ந்து இருக்கற திருவனந்தபுரம். என்னோடது.. பத்மநாப சாமி. கோவில் கொண்ட, எனக்கு தெரிந்த பலரும் வாழும் இடம். எவ்வளவு தூரம் நினைவில் ஊறி இருக்கு என்றால், சின்ன வயசில் சின்னச் சந்து பார்த்தா.. இது எங்கே போறதுன்னு தெரிஞுச்க்க அது வழியா போய்ட்டே இருப்பேன்.. திரும்ப வழி தெரியாம அவஸ்தை பட்டிருக்கேன்.. அப்படி மனசிலே படிந்த இடமாக இது நாவலில் வந்தது.

கமல்: முருகன், நீங்க தான் எனக்குக் கொடுத்தீங்களான்னு நினைவு இல்லை… ரொம்பப் பழைய புத்தகம்..அறுபத்து மூவர் உற்சவத்துக்குப் போன கதை.. நொண்டிச் சிந்து.. எழுதினவங்க சென்னையப் பற்றி சொல்லணும்னு இல்லே. அறுபத்து மூவருக்கு போன கதையை சொல்லும்போது அந்தக் காலத்து தெரு இது, இடம் இதுன்னு பெயர் சொல்லிக்கிட்டே போறார்.. அந்தக் காலத்துச் சென்னையின் பழைய உருவைப் பற்றி அந்த பதிவு தான் இருக்கு…

நீல:அசோகமித்திரன் பழைய சென்னை பற்றி ஒரு கட்டுரை எழுதியிருக்காரே..

இரா ஆமா, அப்புறம் ஹைகோர்ட் சிந்துன்னு ஒரு புத்தகம் கூட இருக்கு.

(தொடரும்)

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன