Archive For ஆகஸ்ட் 25, 2019

‘தீவு’ – உயிர்மை ஆகஸ்ட் 2019 இதழில் என் சிறுகதை

By |

தீவு ”இறங்கலாம்”, விமான உபசரிணிப்பெண் அபியைத் தோளில் தட்டி எழுப்பினாள். அவன் கண் விழித்தபோது விமானத்துக்குள் ஜன்னல்கள் மூடி, எல்லா விளக்குகளும் அணைத்து வைக்கப்பட்டிருந்ததைக் கண்டான். அவனை இறக்கிவிட அவசரம் காட்டிய உபசரிணியோடு நின்ற வெள்ளைத் தொப்பி அணிந்த மத்திய வயசுக்காரனும் ‘எழுந்திருங்கள்’ என்று அபிக்குப் புரிய வைக்கக் கையை உயர்த்திக் காட்டினான். விமானியாக இருக்கும். “இது எந்த ஏர்போர்ட்? நான் ஜகார்த்தாவுக்கு போகிற பயணி. லண்டனிலிருந்து வருகிறவன்”, அபி தூக்கக் கலக்கத்தோடு சொல்லியபடி கோட் பாக்கெட்டில்…




Read more »

சின்னதாக ஒரு ரயில் நிலையம்

By |

பத்து மணிக்கு தெற்கே போக சாயந்திரம் ஐந்தரைக்கு வடக்கே போக ரெண்டே ரயில் ஓடும் ஸ்டேஷன் எனக்குத் தெரியும் இருந்தது ஓர்காலம். தெற்கு போவது ராமேஸ்வரத்துக்கு குளித்துத் தொழுதவர் திரும்ப சென்னை செல்வர் வடக்கே போட்மெயில் என்று சிறப்புப் பெயர் ரெண்டு வண்டிக்கும் உண்டு. இலங்கை முனையைத் தொட்டு ஓடி முன்னொரு காலம் இயங்கியதாம் தனுஷ்கோடியைக் கடல்கொண்டு போக இலங்கை செல்ல ரயில்வண்டி இல்லை. ஆக் மொத்தம் இரண்டே ரயில்கள் சிலநாள் சென்னையில் இருந்தோ இன்னும் வடக்கே…




Read more »

ரசனைக் குறிப்பு – நீல.பத்மநாபனின் கவிதைகள் – சாயங்கால மேகங்கள்

By |

ரசனைக் குறிப்பு – நீல.பத்மநாபனின் கவிதைகள் – சாயங்கால மேகங்கள்

நீல பத்மநாபனின் புதிய கவிதைத் தொகுதி ‘சாயங்கால மேகங்கள்’ விருட்சம் பதிப்பு திருவனந்தபுரம் தமிழ்ச் சங்கம் – வெளியீட்டு விழா 23 ஜூலை 2019 செவ்வாய்க்கிழமை மலையாளத்தில் எழுதப்பட்டு நீல.பத்மநாபன் தமிழாக்கம் செய்த நூல் இது. இரு மொழியிலும் ஒரே தலைப்பு தான். நூல் மலையாளத்திலும் தமிழிலும் வெளியாகியுள்ளது ‘சாயங்கால மேகங்கள்’ – நீல பத்மநாபனின் கவிதைத் தொகுப்புக்கு நான் எழுதிய ‘ரசனைக் குறிப்பு’ – // முதுமை ஒரு மனநிலை. அது உருவத்தை மாற்றுகிறது. நடையைத்…




Read more »

மலையாள மகாகவி உள்ளூர் பரமேஸ்வர ஐயர் நினைவு இலக்கிய விருது 2019

By |

மலையாள மகாகவி உள்ளூர் பரமேஸ்வர ஐயர் நினைவு இலக்கிய விருது 2019

வரும் ஜூலை 23 செவ்வாய்க்கிழமை மலையாள மகாகவி உள்ளூர் பரமேஸ்வர ஐயர் நினைவு இலக்கிய விருது வழங்கும் விழா திருவனந்தபுரத்தில் நடக்கிறது. உங்கள் அன்பான வாழ்த்துகளோடு, அடியேன் விருது பெறுகிறேன். அழைப்பிதழை இணைத்துள்ளேன். அனந்தை, சுற்று வட்டாரத்தில் வசிக்கும் நண்பர்களை நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அன்புடன் அழைக்கிறேன். உள்ளூர் எஸ். பரமேஸ்வர ஐயர் மலையாளத்தின் மகாகவிகளில் ஒருவர் உள்ளூர். இவரது இயற்பெயர் பரமேஸ்வர ஐயர். இவர் 1877 ஜூன் 6 ஆம் நாள் சங்கனாச்சேரி என்ற இடத்தில்…




Read more »

துறுதுறுவென்று ஒல்லியாக உயரமாக, பல் வெள்ளையாக இருந்து, சிரிக்கத் தெரிந்தால் சும்மா சிரிக்கணும் என்றில்லையே

By |

மீசை – சிறுகதை – இரா.முருகன் நான் நாக அரவிந்தன். எனக்கு ஏழு வயசில் மூக்குக் கண்ணாடி போட்டார்கள். அப்போது அனுபவமான கதை இது. நடந்து அறுபது வருஷமாகி விட்டது. நடந்து என்றால், எல்லாம் உண்மையா? நிஜமும் உண்டு. ஒரு ஆஸ்பத்திரியில் நடந்தது இது. சும்மா மருந்து கலக்கிக் கொடுக்கிற ஆஸ்பத்திரி இல்லை. ஆபரேஷன் செய்கிற இடம். அந்த ஆஸ்பத்திரியை நான் இன்னும் வெள்ளை வெளேர் என்று பளிங்கு மாளிகையாகத்தான் நினைவில் வைத்திருக்கிறேன். அங்கே டெட்டால் வாடை…




Read more »

வந்திடும் மறுபடி ரதங்கள் பார்க்கணும் முடிந்தால், ஆயுசு சொற்பம்

By |

‘நடையானந்தா கவிதைகள்’ நூலில் இருந்து – // ராத்திரி முழுக்க ரதங்கள் ஊரும் பூக்களைக் குவித்துச் சுமந்த வண்ணம். சாமியோ மானுட சாதியோ உலாவில் வருவது இல்லை எல்லாம் மலர்களே. பிள்ளைவயல் காளி சின்ன உருவம் மேல் பூவெல்லாம் கவிந்து மணத்து இருக்க வருடம் ஒருமுறை மலர்களின் திருவிழா. பூக்களைப் பறித்து பூக்களை அடுக்கி பூக்களைத் தேரேற்றி, பல்லக்கில் பூசுமந்து பூக்களை சொரிந்து பூக்களை அகற்றி பூக்களை மேலும் சொரிந்து குவித்து இரவு நகர்ந்து புலரி வரைக்கும்…




Read more »