Archive For The “Yugamayini column” Category

New: Annotated short story of Era.Murukan – பந்து – 1

By |

New: Annotated short story of Era.Murukan – பந்து – 1

பந்து – 1 கோஷ்பாபு விருந்துக்கு வந்த ராத்திரி தான் ஏலிக்குட்டி பொரித்த மீனும், மிளகூட்டானும், புளி இஞ்சியும் உண்டாக்கியது. உலகக் கோப்பை கால்பந்தாட்ட அரையிறுதிப் போட்டியில் பிரேஸில் ஸ்வீடனை கெலித்த கோடைகால ராத்திரி அது. விளையாட்டு தொடங்கி எண்பதாவது நிமிஷத்தில், வலந்தரையிலிருந்து ஜார்ஜின்ஹோ மடக்கித் திருப்பிவிட்ட பந்தைத் தலையால் தாழ முட்டி, ரொமாரியோ கோல் போஸ்ட்டை அதிரடித்த அந்த உக்ரன் கோலை, லேசில் மறக்க முடியுமா? ஓராயிரம் தடவை மாப்பு சோதிக்கிறேன். இதுதான் என்னிடத்தில் ஒரு…




Read more »

New : மலையாள எழுத்தாளர் என்.எஸ்.மாதவன் நேர்காணல் – பகுதி 3

By |

New : மலையாள எழுத்தாளர் என்.எஸ்.மாதவன் நேர்காணல் – பகுதி 3

ஜூன் 2018 குமுதம் தீராநதி இதழில் வெளியான பகுதியில் இருந்து இரா.முருகன் : உங்களுடைய இந்த அனைத்துச் சிறுகதைகளைப் பற்றியும் ஒற்றை வாக்கியத்தில் சொன்னால், மலையாள, ஏன் இந்திய இலக்கியத்தில் சிறுகதை என்ற வடிவம் நசிந்து தேயும் காலகட்டத்தில் அதற்குப் புத்துயிர் ஊட்ட வந்தவை இவை. பத்தாண்டு எழுதாமல் இருந்து எழுத வந்தபோது கதையாடலிலும் கதைக் கருவிலும் ஏற்பட்ட மாற்றம் உங்களை மட்டும் பாதிக்கவில்லை, ஒரு மொழியின் இலக்கியத்தையே பாதித்திருக்கிறது. உங்கள் எழுத்தை விரும்பி வாசிக்கும் வாசகர்கள்…




Read more »

புதிய சிறுகதை : தேங்காய் ரம் : இரா.முருகன்

By |

10.06.2018 காமதேனு வார இதழில் பிரசுரமாகியுள்ளது தேங்காய் ரம் இரா.முருகன் முன்பனிக்கால சனிக்கிழமை சுகமான வெய்யிலோடு விடிந்தது. நடு ராத்திரிக்கு அப்புறம் தூங்கியது போதுமானதாக இல்லை என்று உடம்பு புகார் செய்தது. நேற்று தாகசாந்தி கொஞ்சம் அதிகம். அருணன் வருவதாக உறுதியளித்து, கடைசி நேரத்தில் ஃபோன் செய்து வருவதற்கில்லை என்று சொல்லிவிட்டான். அவனுக்காக வாங்கி வைத்த தேங்காய் ரம் என்ற வினோதமான திரவத்தை முழுக்க அருந்த நான் மட்டும் தான் இருந்தேன். அப்புறம் தான் கஸ்டமர் நாதமுனி…




Read more »

புதிய சிறுகதை ‘மாது என்றொரு மானுடன்’ இரா.முருகன்

By |

புதிய சிறுகதை     ‘மாது என்றொரு மானுடன்’   இரா.முருகன்

அந்திமழை ஜூன் 2018 இதழில் பிரசுரமானது மாது என்றொரு மானுடன் இரா.முருகன் நடுராத்திரி கழிந்து ராத்திரியா காலையா என்று தீர்மானிக்க முடியாத மூன்றே கால் மணிக்கு மாது வந்து சேர்ந்தான். எங்கள் அடுக்கு மாடிக் குடியிருப்பில் இருக்கும் எல்லாக் குடித்தனங்களும் மட்டுமில்லாமல், அயல் குடித்தனங்கள், எதிரே ஆவி எழுப்பும் ஜெபக் கூடத்தில் சகோதரர் புன்னோஸ் வடக்கன், எலிசபெத் டெய்லர் தையல்கடைக்குள் தூங்கும் காஜா போடுகிற பையன் சமஷ்டி, தெருக்கோடி சைக்கிள்கடை சுந்தரேசக் குருக்கள் என்று எல்லோரையும் எழுப்பும்…




Read more »

ரெட்டை நாயனம் வெண்பாக்கள் – கிரேசி மோகன், இரா.முருகன்

By |

ரெட்டை நாயனம் வெண்பாக்கள் – கிரேசி மோகன், இரா.முருகன்

நாசி குறைந்தவர் நாடி அணிந்திட்டு வாசிக்கக் கீழே நழுவுமே யோசியாது ஆப்டிக்ஸில் வாங்கியணி அல்டிமேட் கண்ணாடி சேஃப்டிபின் மூக்கில் நுழைத்து இரா.முருகன் https://t.co/cxnUMDc3xV சைனாவின் ஸ்பெக்ஸை சரிபார்க் கபோட்டயென் நைனாவின் நாசிஎகிப்து நாசர்போல்- ஒய்நாட்(WHY NOT)யென்(று) ஆயா கொடுத்த அரணா கயிறுபின்(PIN)னால் சாயாது(கண்ணாடி) வாசம் சகித்து’’….கிரேசி மோகன்….! ஏழுபெண் வீட்டிலே ஏதோ பரபரப்பு பாழும்பேன் நீள்கூந்தல் பற்றியுள் வாழுதாம் சோப்பிட் டொழிக்கலாம் வாரிச் சிடுக்கெடுக்க சீப்பெங்கே போனது சொல் இரா.முருகன் https://t.co/qPpFp7bihc அஞ்சுபெண் பெத்தவர் ஆண்டியாம் ,ஆதலால்…




Read more »

ஆனை விளையாட்டு

By |

ஆனை விளையாட்டு

ஆனை விளையாட்டுக்கு அழைத்தாள் பேத்தி. ஆனை வரணும் ஆனை வரணும் அடுத்த குடித்தனப் பாப்பா சொன்னது. துணி உலர்த்தக் கொடியில் பிணைக்கும் க்ளிப் இரண்டை முடியில் சூடித் தவழ்ந்து வந்து தலை உயர்த்தி ஆடலாம் என்றது ஆனை. ஆனை தின்னப் பொரி கொடுத்தாள், ”ஆனை, எனக்கு பிஸ்கட் தா” அம்மா கவனம் தவிர்த்து பிஸ்கட் ஆனை கொடுக்கப் பேத்தி மென்றாள். ”அவளுக்கும் ஆனை பிஸ்கட் தரணும்” அடுத்த வீட்டுப் பாப்பாவைக் காட்டினாள். ஆனை எழுந்து பிஸ்கட் கொடுக்க…




Read more »