A 12 year old boyநம் குழந்தை போல் இன்னொரு சிறுவன்


தி ஹிந்து பத்திரிகையின் இணையத் தளத்தில் சற்று நேரம் முன்னால் புகுந்தபோது இந்தச் செய்தி கண்ணில் பட்டது. பிரமை பிடித்தது போல் உட்கார்ந்திருக்கிறேன்.

ஒரு 12 வயதுச் சிறுவனை.. அவன் குழந்தைத்தனமான முகம் மறக்க முடியாதபடி மனதைச் சுற்றிச் சுற்றி வருகிறது. முதல் இரண்டு புகைப்படத்தில் பங்கரில் உட்கார்ந்திருக்கிறான். சட்டையைக் கழற்றச் சொல்லிக் கட்டளை இட்டிருப்பார்கள் போலிருக்கிறது. ஒரு கைத்தறித் துண்டைத் தோளில் போட்டபடி ஒரு 12 வயதுப் பையன் உட்கார்ந்திருப்பது போல் இந்த 12 வயதுப் பையன் அமர்ந்திருக்கிறான்.வாயை வலிப்பது போல் ஏனோ கோணலாக வைத்திருக்கிறான். என்ன கேட்டார்களோ, என்ன பொய்யான நல்வாக்கு, போலியான அன்புப் பேச்செல்லாம் பேசியிருப்பார்களோ.. கடைசிப் படத்தில் இந்த இளந்தளிர் குண்டடி பட்டு இறந்து கிடக்கிறான்.

திருப்பதி என்ன, கைலாயத்துக்கே போய்த் தவமிருந்தாலும் கரையாத பாவம் இது. படிச்சவன் சூதும் பாதகமும் பண்ணினால் ஐயோன்னு போவான் …

போவான்.

(இந்தப் படம் எல்லாம் சேனல் நாலின் கைவேலை, போலி, அவர்கள் எத்தனை பேரைக் கொன்று குவித்தார்கள் என்று கீபோர்டில் முழங்க சில நண்பர்கள் காத்திருக்கலாம். தயை கூர்ந்து இன்று வேண்டாம். இங்கே வேண்டாம். குழந்தையைக் கொல்லும் கொடியோர் தம் செயலை நியாயப்படுத்த வேணாமே, ப்ளீஸ்.. தயவு செய்து..).

ஹிந்து பத்திரிகை செய்திக்கு இணைப்பு கொடுக்கக் கூட மனம் விரும்பவில்லை. அங்கேயே படித்துக் கொள்ளுங்கள்.

3 comments on “A 12 year old boyநம் குழந்தை போல் இன்னொரு சிறுவன்
  1. subbu சொல்கிறார்:

    A CHILD’s MURDERER VISITS
    SANCHI AND TIRUPATHI
    AS AN INDIAN GUEST. IT IS
    REALLY SHAME FOR INDIA.

  2. பொன்.முத்துக்குமார் சொல்கிறார்:

    இலங்கை விவகாரத்தைப் பொறுத்தவரை தொடர்ந்து நாங்கள் தொடர்பில் உள்ளோம். இலங்கை நமது நட்பு நாடு.

  3. பொன்.முத்துக்குமார் சொல்கிறார்:

    இலங்கை நமது நட்பு நாடு, அண்டை நாடு,முக்கிய நாடு, நல்ல நண்பர்கள் …..

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன