போகிற போக்கில்

 

Feb 22, 2009 ஞாயிறு காலை 5 மணி

‘ஞானக்கூத்தன் கவிதைகள்’ (ஆழி பதிப்பகம் வெளியீடு) படித்துக் கொண்டிருக்கிறேன்.

கிட்டத்தட்ட ஐம்பது வருடமாகத் தமிழ்க் கவிதையில் தடம் பதித்த கவிஞரின் மொத்தப் படைப்புகளையும் ஒரு சேரப் படிக்கும் போது அவருடைய கவிமொழி, பாடுபொருள், கட்டமைப்பு, பார்வை, என்று எல்லாமே மலைக்க வைக்கிறது. மரபுத் தொடர்ச்சி இழை அற்றுப் போகாமல் புதுக் கவிதைக்குத் தடம் மாறுகிற வித்தையை ஞானக்கூத்தனிடம் தான் கற்றுக் கொள்ள வேண்டும்.

கோயில் வடைகளே சுவையில் சிறந்தவை.
சூடில்லை உப்பில்லை என்று பிறர் குறைகூறக்
கக்கத்தில் வியர்த்துக் கொண்டு ஒருத்தன்
மொண்ணைக் கத்தியால் ஒதுக்கிய வெங்காயத்
துண்டுகள் எதுவும் தென்படாது.
கோயில் வடைகள் ஆயுதம் போன்றவை.
ஏனென்றால் கடவுளிடம் வரங்கள் பெற்றவை.
துளைகறுத்த கோயில் வடைகளை நிறையவே
சளைக்காமல் தின்னலாம். அவற்றில் கொஞ்சம்
மிளகின் குறும்பு நீண்டதாய் இருக்கும்.
கடவுள்கள் அத்தனை பேரும் தங்கள் தங்கள்
முடிகளின் வைரத்தை நினைப்பதைக் காட்டிலும்
வடைகளின் வரவையே காத்திருப்பார்கள்.

(திணை உலகம்)

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன