சுரபி – சுஜாதா ரசனைப் பிணைப்பு : புது இலக்கிய அமைப்பு

சுரபி

சுஜாதா ரசனைப் பிணைப்பு.

சுஜாதா சார் எழுத்துகளை நேசிக்கும் அவருடைய நண்பர்களும் அன்பர்களும் உருவாக்கும் அமைப்பு இது.

சுஜாதா எழுத்தைக் கொண்டாடவும், அவர் நினைவில், தமிழ் இலக்கியத்தை முன்னெடுத்துப் போகும் முயற்சிகளை ஊக்குவிக்கவும், அடுத்த தலைமுறைக்கு ’சுஜாதாவைக் கடத்தவும்’ ஏற்படுத்தப்படும், எந்த விதமான நுண்ணரசியலும் கலக்காத, ரசனையையும் அன்பையும், நம்பிக்கையையும் அடிப்படையாகக் கொண்ட இலக்கிய அமைப்பு இது என்று சுரபி குழுவினர் சொல்கிறார்கள்.

சிறுகதை, நாவல், சயன்ஸ் ஃபிக்‌ஷன், அ-புனைகதை துறைகளில் குறிப்பிடத் தகுந்த ஆக்கங்களை உருவாக்கும் இளைய தலைமுறை எழுத்தாளர்களுக்கு வருடாவருடம் விருது வழங்கிக் கௌரவிக்கவும் எண்ணியிருக்கிறார்கள் என்று அறிகிறேன்.

அவர்கள் முயற்சிகளுக்கு என் வாழ்த்துகள்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன