Archive For ஜூலை 6, 2019

பெருமையோடு கொண்டாடுகிறோம். கண்ணீர் அஞ்சலி செய்வோமில்லை.

By |

பெருமையோடு கொண்டாடுகிறோம். கண்ணீர் அஞ்சலி செய்வோமில்லை.

கிரேசி கொண்டாட்டம் பத்து வருடம் முன்னர் சுஜாதா நினைவேந்தல் கூட்டத்தில் பங்குபெறப் போனபோது கிரேசி மோகன் என் நண்பரானார் என்று எழுத நினைத்தால் கை வரமாட்டேன் என்கிறது. அந்த நிகழ்ச்சியில் சந்தித்தபோது காலம் காலமாக நெருங்கிய நண்பராக இருக்கும் ஒருவரை எத்தனையாவது முறையாகவோ வழியில் பார்த்துப் பேசும் நினைப்பு தான். 1984-இல் தில்லியில் இருந்து சென்னைக்குப் பணியிட மாற்றத்தில் வந்தபோது எனக்குப் பொழுதுபோக்கு என்றால் திரையில் மைக் மோகன், நாடக மேடையில் கிரேசி மோகன். விரைவிலேயே முதல்…




Read more »

எல்லா வீட்டிலும் ஏதாவது பத்திரிகை வந்து விழுந்த பொற்காலம்

By |

எல்லா வீட்டிலும்  ஏதாவது பத்திரிகை வந்து விழுந்த பொற்காலம்

விடிகாலையில் வாசல் திண்ணையில் விட்டெறிந்த இந்து பேப்பரால் என்னை எழுப்பிய நல்லையாவுக்கு இந்தக் கவிதை சமர்ப்பணம். எதிரே கிரிவீட்டில் காலையில் தினமும் இந்து பேப்பரும் தினமணியும் வரும் விகடன், கல்கி, குமுதம் என்று வாராவாரம் இதழ்கள் தவிர சுவராஜ்யா என்னும் ஆங்கில இதழும் மாதக் கடைசியில் பவன்ஸ் ஜேர்னலும் மாதா மாதம் கலைமகள், அமுத சுரபியும் மாதம் இருமுறை பேசும் படமும் விசையொடு நல்லையா வீசிப்போக வருவது கண்டு மலைத்திருப்பேன் நான். தெருமுனை வீடு டைப்பிங் இன்ஸ்டிட்யூட்…




Read more »

நிலவில்லா முன்னிரவில் தெரு இருட்டில் பனி பொழியத் துவங்கியது கவிதை போல

By |

நிலவில்லா  முன்னிரவில் தெரு இருட்டில் பனி பொழியத் துவங்கியது கவிதை போல

தில்லிக் குளிர்காலம் வாடைகளின் காலம் மூக்குச் செத்தால் சொர்க்கம் புலப்படாது முன்பே சொன்னேன் பின்னே வையாதீர். நவம்பர் தொடக்கம் முன்னிரவதனில் காற்று அடர்ந்து காதுகள் குறுகுறுக்க வரலாமா என்று குளிரொன்று கேட்கும். இந்த வருடம் பனிவிழும் என்பார் பண்டு எப்போதோ பார்க்கக் கிடைத்தவர் நினைவும் கனவும் இட்டுக் கலக்கிய பழைய காலம் பங்கு வைத்து தேநீர் பருகிக் கம்பளி தேடுவர். மூடுபனியாய் மெல்லப் பரவி ஆளில்லாத தெருக்களில் கவிந்து பார்வை மறைத்து காலை புலரும். பச்சுப் பச்சென்று…




Read more »

புதிய சிறுகதை – இசை (இரா.முருகன்)

By |

புதிய சிறுகதை –    இசை   (இரா.முருகன்)

இசை இரா.முருகன் மதி ரைஸ் குக்கரை ஆன் செய்தபடி மெல்லிய குரலில் பாட ஆரம்பித்தாள் – ”அழகின் நிலா கலை அழகின் நிலா அன்பின் கடலாட வந்ததுவே உலா..” நின்று பெய்யும் மழை போல மனதில் பொழிந்து விட்டுப் போய்த் திரும்பி வரும் பாட்டு அது. ராஜு மாமா போன தடவை மாமியை செக் அப்புக்குக் கூட்டி வந்தபோது, சாப்பாடு முடிந்து கரெண்ட் இல்லாமல் போன ராத்திரியில் பால்கனியில் உட்கார்ந்து இந்தப் பாட்டைப் பாடினார். நிலவு வெளிச்சத்தில்…




Read more »

இருட்டு என்பதே பார்வை மறைக்க இரவு என்பது இருட்டாய் இருக்க

By |

இருட்டு என்பதே பார்வை மறைக்க இரவு என்பது இருட்டாய் இருக்க

சின்னஞ் சிறுவராய் இருந்த காலம் திருவிழாக் கடைகளில் வருடா வருடம் வாங்கி அணிந்தோம் நீலமும் பச்சையும் நிறங்களாய் வந்த ப்ளாஸ்டிக் கண்ணாடி திருவிழா முடிந்த ராத்திரி தூக்கத்தில் தனித்தனியாய் உதிர்ந்தது ஓர்முறை கோவில் வாசலில் உறங்கிக் கிடந்த வணிகனைக் காலையில் எழுப்பிக் கேட்டால் அடுத்த வருடம் வருவேன் தருவேன் என்றான் பீடிபுகைத்து அரையில் சொறிந்து ஐம்பது காசு தண்டம் உன்னால் கருத்தாய் எதையும் வச்சுக்கத் தெரியலே தோசை வார்த்தபடி திட்டிய பாட்டி தோசியென்றாள் அன்றைக்கு என்னை யோசிக்கின்றேன்…




Read more »

சீமாட்டி கார் நிற்கட்டும் காமாட்சி தம்பிவண்டி காண்

By |

சீமாட்டி கார் நிற்கட்டும் காமாட்சி தம்பிவண்டி காண்

பண்டொரு காலம் கற்கண்டாக ஊருணி தளும்பும் ஆரஞ்சு நீருண்டு அவ்வளவாகப் பழையதல்லாத அனுமர் கோவில் கரையிலுண்டு சில்லென்ற காற்றில் மேகங்கள் ஏறி சின்னக் குயில்கள் பாடுவது கேட்கும். கோவில் பின்னால் நந்தவனத்தில் துளசி மணக்கும்; மடைப்பள்ளிக்குள் வடைக்கு எண்ணெய் காயும் வாசனை. எந்தக் காலமோ யாரோ எங்கோ சொல்லின் செல்வன் நைஷ்டிக பிரம்மன் அனுமரை ஆக்கினர் பட்சணக் கடவுள் அதிலிருந்து ஆராதனைக்கு எடுப்பது வடைகள் மாலையில் தொடுத்து; லட்டு உருண்டையும் சிலநாள் படைப்பர். புளிக்காத தயிர்சோறு திராட்சையிட்டு…




Read more »