Archive For அக்டோபர் 27, 2008

நெம்பர் 40, ரெட்டைத் தெரு – க்ரேஸி மோகன்

By |

  க்ரேஸியின் முன்னுரையிலிருந்து சில பகுதிகள் இந்த 2008-ம் ஆண்டு பல விதத்தில் எனக்கு முக்கியமானது. மூன்று வருட இடைவெளிக்கு அப்புறம் மறுபடி ஒரு இசை விழா, சென்னை சங்கமம் என்று மகிழ்ச்சியாகத் தொடங்கி, பிப்ரவரி மாதம் சட்டென்று ஒரு மாபெரும் துயரத்தோடு முடிவுக்கு வந்தது – சுஜாதாசார் நம்மிடையே இல்லை என்பதை இன்னும் மனது நம்ப மறுக்கிறது. தனிப்பட்ட முறையிலும், தமிழ் இலக்கிய வாசகனாகவும் எனக்கு ஏற்பட்ட மாபெரும் சோகம் அது. பேரிழப்பில் உருவாகும் பிறப்பாக,…




Read more »

கோவிந்த் நிஹலானி @ சென்னை

By |

  ‘வார்த்தை’ பத்தி – குட்டப்பன் கார்னர் ஷோப் எல்லாப் பக்கத்திலிருந்துன் விஸ்தாரமாகத் தோண்டித் துளைத்து அங்கங்கே தேசலான பழைய தார்த் தடம் தெரிய பரிதாபமாகக் கிடக்கிற திருமலைப் பிள்ளை சாலை. பெருந்தலைவர் காமராஜ் அவர் வீட்டு வாசலில் கருப்புப் பளிங்குச் சிலையாக நின்று ‘இதெல்லாம் என்னங்கறேன்’ என்கிற போஸில் இடுப்பில் கைவைத்து எல்லா அமர்க்களத்தையும் பார்த்துக் கொண்டிருக்கிறார். கொஞ்சம் தள்ளி நான். காரை எப்படியோ ஓரம் கட்டி நிறுத்திவிட்டு மொபைல் ஃபோனைக் காதில் ஒட்டி வைத்தபடி…




Read more »

வீடியோ விளையாட்டுப் பிள்ளை

By |

  கல்கி ‘டிஜிட்டல் கேண்டீன்’ பத்தி டியூப்லைட் இல்லாத கல்யாண மண்டபமும், கேதோட் ரே டியூப் இல்லாத வீடும் காணக் கிடைப்பது அரிது. கேதோட் ரே டியூப்? சுருக்கமாக சி.ஆர்.டி. நம் வீட்டு டெலிவிஷன் திரையாக, உள்ளேயிருந்து மின்கதிரை திரைக்கு அனுப்பும் ‘எலக்ட்ரான் துப்பாக்கி’யாக வடிவெடுத்தது சி.ஆர்.டிதான். இதன் எளிய வடிவம், மின்னலையைத் திரையில் நகரும் புள்ளியாகக் காட்ட வசதி செய்யும் ஆசிலோஸ்கோப். இந்த சி.ஆர்.டியும் ஆசிலோஸ்கோப்பும் அறிமுகமாகி நூறு வருடமாகி விட்டது. செஞ்சுரி போட்ட இவற்றின்…




Read more »

ஒரு கவிதை – ஒரு கடிதம்

By |

     கலாப்ரியா, அருள்நம்பி கடிதங்கள் அன்புள்ள முருகன் வெந்தணலில் மெழுகெனவே வேதனையில் சிங்களரால் நொந்து படுகின்றார் நம்தமிழர் – செந்தமிழா கடலெல்லை தாண்டிக் களம்கண்ட நம்மாந்தர் இடர்ப்பட்டுப் போவதுஏன் இன்று. கொடுமைகண்டு பொங்கும் குணமெங்கே எந்தமிழா கடமை மறந்தனையோ? கற்சிலையாய் அடிமைஎனும் விலங்குடுத்து வாழ்கின்றார் விலங்கினும் கடையராய் இலங்கையில் தமிழரெலாம் இன்று.




Read more »

Updated கலாப்ரியா,வண்ணதாசன் கடிதங்கள்

By |

  நேற்று வந்த கடிதம் ஒன்று சில கடிதங்கள் எவ்வளவு personal ஆக இருந்தாலும் பகிர்ந்து கொள்ள மகிழ்ச்சியாக இருக்கும். நண்பர்கள் கலாப்ரியா, கல்யாண்ஜி வண்ணதாசன், அவருடைய தந்தையார் பெரியவர் தி.க.சி, முன்றில் மா.அரங்கநாதன் எழுதிய கடிதங்களும், ஆசான் சுஜாதாவின் மின்னஞ்சல், குறுங்கடிதங்களும் இந்த வகையில் வருபவை. கலாப்ரியாவிடமிருந்து நேற்று வந்த கடிதம் இது. அவர் சொன்னது என் மகன் விஷயத்தில் பலித்திருக்கிறது. மற்றதைக் காலம் தான் சொல்ல வேணும். இரா.மு ——————————————————————————————————– dear murukan இன்னும்…




Read more »

கடவுள் துகள்

By |

  கல்கி ‘டிஜிட்டல் கேண்டீன்’ பத்தி டிஜிட்டல் கேண்டீன்-26 பூமியும் கிரகங்களும் சூரியனும் இல்லாத காலம் அது. உறைய வைக்கும் குளிர். ஆயிரத்து முன்னூறு கோடி வருடம் முந்தைய அந்தக் காலகட்டத்தில், அண்டப் பெருவெளியில் ஒரு வெடிப்பு ஏற்பட்டது. இந்த அண்டப் பெருவெடிப்பு (Big Bang) ஏற்பட்டதும் எங்கும் பெரும் வெப்பம் சூழ்ந்து கவிந்தது. அணுத் துகள்களான நியூட்ரான்களும் புரோட்டான்களும் ஒளியின் வேகத்தில் பாய்ந்து ஒரு சேரக் கலந்தன. இக்கலப்பில் அணு மையப்பொருள் தோன்றியது. வெப்பம் சற்றே…




Read more »