நண்பன்
கண்ணை எட்டாது வாய் வரை சிரிப்பு
கருவிழிக்குள்ளே ஆழ்ந்த சோகம்
ஜாதிக் குறிபோல் நெற்றியில் கவலை அவன்
சகித்த வலிகளின் வடுவாய் முகம்
நிதமும் காலை பல் துலக்கியபின்
நனைந்த முகத்துடன் எனையே பார்ப்பான்
சவரம் முடித்து முழுமுகம் தடவி
சிராய்ப்புக்குப் படிகாரம் தேய்ப்பான்
முகஞ்சுளித்து ஒரு பாட்டும் முனகி
மீசை நுனியை மெலிதாய்சீவி
தேமல் போல் ரஸம்கெட்ட பிரதி
தனதா என்று புருவஞ் சுளிப்பான்
வெகுநாள் பரிச்சயம் பேசா நட்பு
வேறாருடனும் இதுபோல் வருமோ.
(கமல் ஹாசன்)