Archive For டிசம்பர் 8, 2022

எம்.டி.வாசுதேவன் நாயர் நேர்காணல் – என் ‘ஏதோ ஒரு பக்கம்’ மின்நூலில் இருந்து – தொடர்ச்சி

By |

எம்.டி.வாசுதேவன் நாயர் நேர்காணல் – என்  ‘ஏதோ ஒரு பக்கம்’ மின்நூலில் இருந்து – தொடர்ச்சி

நான்: நீங்கள் மலையாள மகாகவி துஞ்சன் நம்பியாரின் மரபு இலக்கியத்தோடு தொடர்பு உள்ள நவீன இலக்கியவாதி. துஞ்சன் பற்றி சொல்லுங்களேன். அவர் தான் மலையாளத்தில் முதல்முதலாக 51 எழுத்து மலையாள எழுத்துமுறையைக் கொண்டு வந்தாராமே? அதற்கு முன் 30 அட்சர வட்டெழுத்து லிபிதான் எழுதப் பயன்படுத்தப்பட்டது என்கிறார்களே? எம்.டி: துஞ்சன் ஸ்மாரகம் (நினைவு இயக்கம்) தலைமைப் பொறுப்பில் நான் இருக்கிறேன். மலையாள இலக்கியத்தை மக்கள் இலக்கியம் ஆக்கிய முதல் படைப்பாளி துஞ்சன். அதுதான்  முக்கியமே தவிர அவர்…




Read more »

நேர்காணல் – எம்.டி : மலையாள எழுத்தாளர்களும் விருதுகளும்

By |

நேர்காணல் – எம்.டி : மலையாள எழுத்தாளர்களும் விருதுகளும்

எம்.டி.வாசுதேவன் நாயரோடு ஒரு நேர்காணல் எம்.டி.வாசுதேவன் நாயர். மலையாளிகளின் மனம் கவர்ந்த கதைக்காரர். நீட்டி முழக்கி அவர் பெயரை முழுமையாகச் சொல்லாமல் சும்மா, ‘எம்.டி’ என்று சுருக்கி அவர்கள் விளிப்பதில் அபிமானமும், ‘எங்க ஆளாக்கும்’ என்ற பெருமையும் புரியும்.  ஐம்பது வருடமாக நாவல், நாடகம், சிறுகதை என எழுதி மலையாள இலக்கியத்தில் முக்கிய ஆளுமையாகத் திகழ்கிறவர். திரைக்கதை என்ற கலை – இலக்கிய வடிவத்தில் இவர் அளவு தொடர்ந்து சாதனை நிகழ்த்தி வருகிறவர்கள் இல்லை. மத்திய, மாநில…




Read more »

முன்கூட்டியே எழுதப்பட்ட ஆபிசுவரி

By |

முன்கூட்டியே எழுதப்பட்ட ஆபிசுவரி

இது ஆபீசுவரி இல்லை. நாளது தேதிவரை மொத்தமே ரெண்டு ஆபிசுவரி தான் எழுதியிருக்கிறேன். முதலாவது, தோழர் ஈ.கே.நாயனாருக்கு. கண்ணூர் பய்யாம்பலம் மாயானத்திலிருந்து பெங்களூர் வந்து இறங்கியதும் மிச்சக் கண்ணீர் பார்வையை மறைக்க மாத்ருபூமி ஸ்டைல் இரங்கல் நடையில் எழுதியது. திண்ணைக்கு அனுப்பும் முன்பு ஒரு தடவை படித்தேன். ‘நல்லா வந்திருக்கு’ என்று மனம் நிறைய ஆனந்தம். ஆபிசுவரிக்கு இதைவிட அவமானம் கிடையாது. டெலிட் செய்துவிட்டு பய்யாம்பலம் பயணக் கட்டுரையாக்கி அனுப்பி வைத்தேன்.   ஆர்தர் சி கிளார்க்…




Read more »

பாதல் சர்க்கார் – இதுவும் அதுவும் உதுவும் என் மின்நூலில் இருந்து

By |

பாதல் சர்க்கார் – இதுவும் அதுவும் உதுவும் என் மின்நூலில் இருந்து

பாதல் சர்க்கார் இறந்து போய்விட்டார். ஆறு வருடம் முன் லண்டன் வால்த்தம்ஸ்டோவில் நண்பர் அம்ஷன்குமார் பாதல் சர்க்கார் பற்றி எழுதி இயக்கிய ஆவணப் படம் பார்த்த கதையை ஆர்வமுள்ளவர்கள் பழைய ‘திண்ணை’யில் பொறுமையாகத் தேடிப் படித்துக் கொள்ளவும்.   பாதலுக்காக நினைவுக் கூட்டம் நடத்தி அந்தப் படத்தைத் திரையிடலாமே என்றேன் அம்ஷனிடம். பிரளயன் ஏற்பாடு செய்திருப்பதாகச் சொன்னதோடு கரிசனமாக அழைப்பும் அனுப்பி வைத்திருந்தார்.   சர்க்கார் எனக்கு முதலில் கோ.ராஜாராம் மொழிபெயர்த்து என் ஆசிரியர் கவிஞர் மீராவின்…




Read more »

எழுத்து பிரசுரம் வெளியீடுகளாக என் அனைத்து நூல்களும்

By |

எழுத்து பிரசுரம் வெளியீடுகளாக என் அனைத்து நூல்களும்

என் அரசூர் நாவல்கள் மறுபதிப்பு கொண்டுள்ளன. அரசூர் வம்சம், விஸ்வரூபம், அச்சுதம் கேசவம், வாழ்ந்து போதீரே என்ற நான்கு நாவல்கள் அவை. எழுத்து பிரசுரம் (an imprint of Zero Degree Publishing) நூல்களாக இன்று வெளியாகும் இவற்றைத் தொடர்ந்து என் மற்ற நூல்கள் எழுத்து பிரசுர வெளியீடுகளாக வர இருக்கின்றன. அவை நாவல்கள் 1) 40, ரெட்டைத் தெரு 2) தியூப்ளே வீதி 3) மூன்று விரல் 4) 1975 5) ராமோஜியம் மற்றும் 6)மிளகு…




Read more »

பதினெட்டாம் அட்சக்கோடும் ’கோல் தோ’வும்

By |

பதினெட்டாம் அட்சக்கோடும் ’கோல் தோ’வும்

எழுத்தும் பாதிப்பும் சில கதைக் கருக்கள் மனதின் ஆழத்தில், கிட்டத்தட்ட பாரம்பரிய நினைவிலிருந்து வருகிற மாதிரி புறப்பட்டும் வரும். அதே கரு பல ஆயிரம் கிலோமீட்டருக்கு அப்பால் ஐரோப்பாவிலோ, ஆப்ரிக்காவிலோ, அல்லது இங்கே சென்னை நுங்கம்பாக்கத்திலேயோ இன்னொரு எழுத்தாளருக்கு, வேறொரு காலத்தில் தோன்ற வாய்ப்பு இருக்கிறது. ஒ.வி.விஜயன் எழுதிய பிரபலமான மலையாளச் சிறுகதை ‘பலி காக்கைகள்’. கட்டுச் சோறு கட்டிக் கொண்டு வெள்ளாயி அப்பன் நகரத்துக்குப் புறப்படுகிறான். அவனுடைய மகனைத் தீவிரவாதி என்று பிடித்துப் போய் தூக்கு…




Read more »