நாவல் ‘தினை அல்லது சஞ்சீவனி’ வெளியாகி விட்டது

ஸீரோ டிக்ரி பப்ளிஷிங் உரிமையாளர்களும் இந்நாவல் பதிப்பாளர்களுமான நண்பர்கள் காயத்ரி, ராம்ஜி நரசிம்மன் எழுதுகிறார்கள்-

மிளகு நாவலின் வெற்றியைத் தொடர்ந்து EraMurukan Ramasami எழுதிய தினை அல்லது சஞ்சீவனி நாவல் அச்சாகி கைக்கு கிடைத்து விட்டது.

முதல் முறையாக அவர் நாவலை கெட்டி அட்டையில் அச்சிடுவதில் ஸீரோ டிகிரி பப்ளிஷிங் பெருமை கொள்கிறது.

200 பிரதிகள் மட்டுமே கெட்டி அட்டையில் அச்சிடப்படும். முதல் 100 பிரதிகளுக்கு மட்டும் நாற்பது சதவீதம் தள்ளுபடி அறிவித்திருக்கிறோம். இதை வாங்கிப் படித்து பயனடையும் நண்பர்கள் உங்கள் வாசிப்பனுபவத்தை வலைத்தளங்களிலும் உங்கள் நண்பர்களிடமும் பகிர்ந்து கொண்டால் பெருமகிழ்ச்சி அடைவோம்.

——————————————

நான், இரா.முருகன் எழுதுகிறேன்

’தினை அல்லது சஞ்சீவனி’ நாவலை மகிழ்ச்சியோடு வாசக நண்பர்களுக்கு சமர்ப்பிக்கிறேன்.

கெட்டி அட்டை பதிப்பாக, என் பதிப்பாளர்களான ஸீரோ டிகிரி பப்ளிஷிங் வெளியீடாக நாவல் வெளிவந்திருக்கிறது.

பதிப்பக நண்பர்கள் ஆர்.காயத்ரி, ராம்ஜி நரசிம்மன் ஆகியோர் இந்த ச்ந்தோஷ சமாசாரம் பகிர்ந்து கொள்கிறார்கள்.

அதோடு, நாற்பது விழுக்காடு தள்ளுபடி விலைக்கு நாவல் கிடைக்கிறது என்றும் தகவல் பகிர்கிறார்கள். நன்றி நண்பர்களே.

வாங்கி வாசித்து வாசிப்பனுபவம் பகர நண்பர்களை வரவேற்கிறேன்

நாவல் ‘தினை அல்லது சஞ்சீவனி’ சலுகை விலைக்கு வாங்க

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன