வரும் சென்னை புத்தகக் கண்காட்சியில் என் நூல்கள்

அடுத்து வரும் சென்னை புத்தகக் கண்காட்சியில் என் பதிப்பாளர்களான ஸீரோ டிகிரி பப்ளிஷிங் – எழுத்து வெளியீடாகக் கீழ்க்கண்ட என் நூல்கள் வெளியாகும் –
1)நாவல் ‘தினை’ – அசுர வேகத்தில் இறுதி இருபது அத்தியாயங்கள் எழுதப்பட்டுக் கொண்டிருக்கின்றன. முடித்து விடலாம் என்று நம்புகிறோம்

பிறக்க இருக்கும் ஆண்டு 2023 உலகச் சிறுதானிய ஆண்டாக அறிவிக்கப்பட்டுள்ளதை ஒட்டி நாவல் வெளியீடு இருக்கும்

2)சென்ற புத்தகக் கண்காட்சியின் சி’றப்பு வெளியீடுகளில் ஒன்றான ‘பெருநாவல் மிளகு’

3) புதுப் பதிப்பாக அரசூர் நான்கு நாவல்கள்
அரசூர் வம்சம்’
விஸ்வரூபம்
அச்சுதம் கேசவம்
வாழ்ந்து போதீரே

(நான்கு அரசூர் நாவல்களையும் சேர்த்து வாங்கும் வாசகர்களுக்கு சிறப்பு விலை அறிவிக்க என்பதிப்பாளர்களைக் கோரியுள்ளேன்)

4)புதுப் படைப்புகள் சேர்க்கப்பட்ட இரா.முருகன் குறுநாவல்கள்
மேலும் வர வாய்ப்பு இருக்கிறது, அன்பு நண்பர்கள் வாங்கி வாசித்து வாசக அனுபவம் பகிர வேண்டுகிறேன்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன