1000 கவிஞர்களும் நவீன விருட்சமும்

நேற்று முன்னறிவிப்பு இன்றி நவீன விருட்சம் கவிஞர் சந்திப்பில் கலந்து கொண்டு கவிதை வாசித்தேன். மொத்தம் ஆறு கவிஞர்கள். கூடவே ஆத்மாநாம் கவிதைகளை அழகிய சிங்கர் படித்தார். round robin சுற்றுகளாக ஒவ்வொரு கவிக்கும் ஆறு தடவை கவிதை சொல்ல வாய்ப்பு கிடைத்தது. கவிதை எப்படியோ, இந்த அமைப்பு தரக்கேடில்லாத ஒன்று.

இது எட்டாவது வார நிகழ்வு. இதுவரை கிட்டத்தட்ட 50 கவிஞர்கள் பங்கு பெற்றிருக்கிறார்கள் என்று நினைக்கிறேன். இன்னும் இரண்டு மாதத்தில் (எட்டு வாரம்) இந்த எண்ணிக்கை நூறாகும். நூறு ஆயிரமாவது கொரோனா ஓய்ந்த 2021இல்.

1000 கவிஞர்கள். மரபுக்கவிதை, புதுக்கவிதை அகவியம், புதுக்கவிதை புறவியம், படிமக் கவிதைகள், அகவிதைகள் .. நவீன விருட்சம் பாகுபாடே காட்டுவதில்லை. வாழ்க.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன