Archive For டிசம்பர் 18, 2023

நடக்கத் தொடங்கிய, முழுக்கச் சுவரொட்டி பதித்த சுவர்

By |

நடக்கத் தொடங்கிய, முழுக்கச் சுவரொட்டி பதித்த சுவர்

தினை அல்லது சஞ்சீவனி நாவலின் இறுதி அத்தியாயத்திலிருந்து. திண்ணை இணைய இதழில் பிரசுரமாகிறது. புத்தகமாக இந்த நாவல் ஸீரோ டிகிரி பப்ளிஷிங் பதிப்பாக வெளியாகியுள்ளது விடிந்தபிறகு தான் கரப்புகள் எவ்வளவு அழிக்கப்பட்டிருக்கிறார்கள் என்று தெரியவந்தது. கிட்டத்தட்ட முழு இனப் படுகொலை. அரசாங்கத்தில் வெவ்வேறு நல்ல பதவிகளில் இருக்கும் மூத்த, நிறம் மங்கிய கருப்புகள் அரண்மனை வாசலில் பழைய மோட்டார் வாகனங்களின் சக்கரங்கள் முன்னும் பின்னும் நகர நசுக்கப்பட்டு ரத்தவாடையோடும் தசை நாற்றத்தோடும் தெரு முழுக்க அங்கங்கே சாணகம்…




Read more »

பொது யுகம் 300 தேடிச் சென்றடைந்த பொது யுகம் 5000 மக்கள்

By |

பொது யுகம் 300 தேடிச் சென்றடைந்த பொது யுகம் 5000 மக்கள்

தினை அல்லது சஞ்சீவனி நாவல் அத்தியாயம் 43 தற்போது திண்ணை இலக்கிய இணைய இதழில் பதிப்பிக்கப் பட்டுல்ள்ளது. அதிலிருந்து ஒரு சிற் பகுதி. தினை அல்லது சஞ்சீவனி நாவல் அச்சுப் பதிப்பாக ஸீரோ டிகிரி பப்ளிஷிங் நிறுவனத்தால் ஜனவரி 2023 பிரசுரமானது வானம்பாடியின் பயோ தொலைபேசி உள்ளங்கையில் அழைத்தது. காலை நான்கு மணிக்கு குழலனின் அழைப்பு அது. அவனோடு பேசாமல் இரண்டு நாட்கள் அவளுக்கும் குயிலிக்கும் கடந்திருக்கின்றன. எல்லாம் குயிலியும் வானம்பாடியும் ஒரு வாரமாகக் கட்டில் பகிர்ந்து…




Read more »

கர்ப்பூரனின் அதிரடி நடவடிக்கைகளும் பெருந்தேளன் பதவித் துறப்பும்

By |

கர்ப்பூரனின் அதிரடி நடவடிக்கைகளும் பெருந்தேளன் பதவித் துறப்பும்

தினை அல்லது சஞ்சீவனி நாவலின் அத்தியாயம் 42 திண்ணை இணைய வார இதழில் டிசம்பர் 3 2023 தேதி பிரசுரமாகியுள்ளது. அதிலிருந்து ஒரு பகுதி தினை அல்லது சஞ்சீவனி நாவல் அச்சுப் பதிப்பாக ஸீரோ டிகிரி பப்ளிஷிங் நிறுவனத்தால் வெளியிடப்பட்டுள்ளது மறுபடி கதவு தட்டும் சத்தம். போய்த் திறந்தால் அரண்மனை சேவகத்தில் இருக்கும் மனுஷர்கள் எல்லோரும் திமிராகப் பார்த்துக்கிட்டு கையை இடுப்பில் வைத்தபடி நிற்க, வாசல் பெருக்குகிறவன் எனக்கு முன்னால் விழுகிறது போல் காரித் துப்புகிறான். வாயைத்…




Read more »

சகல இன சஞ்சீவனி கடை விரித்தோம் கொள்வார் அநேகம் கட்டற்க

By |

சகல இன சஞ்சீவனி கடை விரித்தோம் கொள்வார் அநேகம் கட்டற்க

தினை அல்லது சஞ்சீவனி நாவலின் 42-ஆவது அத்தியாயம் திண்ணை இணைய வார இதழில் பிரசுரமாகி உள்ளது (டிசம்பர் 2023 தேதி 3). அதிலிருந்து சில பகுதிகள். நாவல் அச்சுவடிவில் ஸீரோ டிகிரி பப்ளிஷிங் வெளியீடு சகல இன சஞ்சீவனி ஏற்றுமதிக்காக உருவாக்கி வாங்குவார் இல்லாமல் போன கண்கவரும் தகரக் குடுவைகள் கோகோ பானக் குடுவைகள் போல் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. மாட்டு ஈக்களின் இறகுகளும், கால்களுமாக மிதந்து கொண்டிருக்கும் திரவம் கறுப்பு வண்டல் கீழே தேங்கியிருக்க மேலே அழுக்கு…




Read more »

பெருந்தேட்பெண்டைப் பேழையிலிட கர்ப்பூரன் நடந்தபோது

By |

பெருந்தேட்பெண்டைப் பேழையிலிட கர்ப்பூரன் நடந்தபோது

தினை அல்லது சஞ்சீவனி நாவலில் இருந்து – முழு அத்தியாயம் 41 திண்ணை டாட் காம் இணைய வார இதழில் காண்க கசாப்புக்கடை பிரதி நீலன் அவரைக் கேட்டபடி நிற்க, உட்காருமய்யா என்று கைகாட்டி எதிர் வரிசையில் கால் ஆடிக் கொண்டிருந்த பழைய மர நாற்காலி ஒன்றைச் சுட்டிக்காட்டி. ரொட்டி எடுத்துக் கொள்ளும் என்றபடி தான் சவைத்துக் கொண்டிருந்த ரொட்டித் துண்டில் பாதியைக் கிழித்து நீலனிடம் நீட்டினார். இதேது பேய்க்கு வாழ்க்கைப்பட்டு புளியமரம் ஏறியது போல் இந்தத்…




Read more »

துயிலரங்கம் ஆக்ரமித்த தெள்ளுப்பூச்சி உயிர் கொல்லிப்படை

By |

துயிலரங்கம் ஆக்ரமித்த தெள்ளுப்பூச்சி உயிர் கொல்லிப்படை

நாவல் தினை அல்லது சஞ்சீவனி அத்தியாயம் 41-லிருந்து – முழு அத்தியாயம் திண்ணை டாட் காம் இணைய இதழில் பக்கத்தில் கர்ப்பூரம் வேறே லொடலொடவென்று ஈச்சம்பாயில் ஒண்ணுக்கு போனமாதிரி பேசிக்கொண்டே இருக்கிறான். அவன் குரல் சத்தமாக இருந்தாலும் மெலிந்திருந்தாலும் நிறுத்தாமல் கேட்டுக் காதை செவிப்பூரன் புகுந்த மாதிரி துளைக்கிறது. பேசாமல் இதே காஸ்மாஸ் பிரபஞ்சத்திலேயே பொது யுகம் 230-க்குப் போய் விடலாமா? அசல் நீலன் அங்கே இருந்தால் நான் யாராவது? இருத்தலியல் சிக்கல் என்பது இதுதானா? இன்றைக்கு…




Read more »