Archive For ஜூன் 20, 2021

எழுதி வரும் புதிய நாவல் ‘மிளகு’ – ஒரு சிறு பகுதி – கிளஸ்டர் ரோடு, லண்டன்

By |

எழுதி வரும் புதிய நாவல் ‘மிளகு’ – ஒரு சிறு பகுதி – கிளஸ்டர் ரோடு, லண்டன்

எழுதி வரும் நாவல் ‘மிளகு’வில் இருந்து ஒரு பக்கம் ”லண்டன்லே உடுப்பி காப்பி ஓட்டல் இருக்குமா? சீரியஸாத்தான் கேக்கறேன்” கல்பா ஆர்வத்தோடு கேட்டாள். “ஈஸ்ட் ஹாமில் ஒண்ணு இருக்கு. ஆனால் இத்தனை காலையிலே திறந்திருக்குமான்னு தெரியலே” ப்ரபசர் சொன்னார். “ஏன் அப்படி? ஞாயிற்றுக்கிழமை கூட்டம் அங்கேயும் இருக்குமே” கல்பா கேட்டபோது இருக்கலாம் என்று தோன்றியது. “இதுக்காக ஈஸ்ட் ஹாம் போகணுமா?” பிஷாரடி நைட்ஸ்பிரிட்ஜிலிருந்து திரும்பி காரை மெதுவாக ஓட்டியபடி கிளஸ்டர் வீதியின் இரண்டு பக்கமும் பார்த்தபடி வந்தார்….




Read more »

புது நாவல் ‘மிளகு’ – எழுதப்படும்போதே … அம்பலப்புழையில் ஒரு பகல் -பரமேஸ்வரன் வந்திருக்கார்

By |

புது நாவல் ‘மிளகு’ – எழுதப்படும்போதே … அம்பலப்புழையில் ஒரு பகல் -பரமேஸ்வரன் வந்திருக்கார்

திலீப் திலீப் ராவ்ஜி ஆனது மலையாள பூமியில் வர்த்தகம் விருத்தியாகி பெரிய ஹோட்டல் உரிமையாளராக ஆன இந்த முப்பது வருடங்களின் மத்தியில் தான். கொஞ்ச நாள் அவரை திலீபன் பரமேஸ்வர ஐயர் என்று அழைத்தார்கள். இத்தனை நீளமான பெயர் எதற்கு என்று நடுவில் சுருக்கி திலீப் பி ஐயர் என்று அழைத்துப் பார்த்தார்கள். அது ஏனோ ஒட்டவில்லை. ஓட்டல் முதலாளிகள் அதுவும் பெரும் தோதில் சைவ உணவகம் நடத்துகிற வெற்றி பெற்ற ஹோட்டல்காரர்கள் எல்லாம் உடுப்பி பின்னணியிலிருந்து…




Read more »

புதிய நாவல் ‘மிளகு’ ஒரு சிறு பகுதி – திலீப் ராவ்ஜி அவர்களின் காலைப் பொழுது

By |

புதிய நாவல் ‘மிளகு’  ஒரு சிறு பகுதி – திலீப் ராவ்ஜி அவர்களின் காலைப் பொழுது

திலீப ராவ்ஜி தன் காலை நடைப் பயிற்சியிலிருந்து திரும்பி வந்தபோது வீட்டு முன்பில் போட்டிருந்த தோட்டத்தில் ஒரு பசுமாடு மேய்ந்து கொண்டிருப்பதைப் பார்த்தார். தோட்டத்தை கிட்டத்தட்ட தின்று தீர்த்திருந்தது அந்த மாடு. பசு மட்டுமில்லை. கூடவே ஒரு கிழட்டுக் காளையும் மேய்ந்து கொண்டிருந்தது. மாஞ்செடி பதியம் போட்டது, மூலிகை வளர்த்த புதர்வெளிகள், மல்லிகைக் கொடி என்று எல்லாவற்றையும் இந்தக் கால்நடைகள் வேட்டையாடிக் கொண்டிருந்தன. சாப்பிட்டு முடித்து இரண்டு மாடுகளும் வயிற்றுப் பசி தீர்ந்து உடல் பசி முன்…




Read more »

புதிய நாவல் ’மிளகு’ – கடைவீதிக் கதைகள்

By |

புதிய நாவல் ’மிளகு’ – கடைவீதிக் கதைகள்

கோழி மாமிசத்தில் பிரட்ட மிளகு விழுதை எடுத்தாள் கஸாண்ட்ரா. நல்ல வாடை இல்லையா? குசினிக்குள் எட்டிப் பார்த்த பெத்ரோ துரை விசாரித்தார். நல்ல வாடைதான். ஆனால் கோழிக்கு இந்தக் காரம் போதாது. வெங்காயமும், வற்றல் மிளகாயும் சேர்த்து அரைத்த விழுது பூசி எண்ணெயில் பொறிக்க வேண்டிய மரியாதைக்குத் தகுந்தது கோழி மாமிசம். கஸாண்ட்ரா மாமிசத்தில் மசாலா சேர்த்துப் பிரட்டியபடியே சொன்னாள். எதிராளியைக் கீழே வீழ்த்தி தோளை இறுக்கிப் பிடித்துப் பிசையும் மல்லன் போல் கோழி மாமிசத்தைக் கால்களுக்கு…




Read more »

எழுதி வரும் ‘மிளகு’ நாவலில் இருந்து – ஹொன்னாவர் நகரில் ஒரு பகல்பொழுது

By |

எழுதி வரும் ‘மிளகு’ நாவலில் இருந்து – ஹொன்னாவர் நகரில் ஒரு பகல்பொழுது

ஹொன்னாவர் நகரின் பகல் நேரம் பொறுக்க முடியாத சூட்டோடு மெல்லக் கடந்து போய்க்கொண்டிருந்தது. ஆயிற்று வெளியே போகிறபோது இந்தியர்கள் போல் மேல் குப்பாயத்தை, உள்சட்டையைத் துறந்து மாரில் சந்தனம் பூசிக்கொண்டு தெருவோடு போக முடிந்தால் எவ்வளவு நன்றாக, சுகமாக இருக்கும் என்று பெத்ரோ நினைத்துப் பார்த்தார். கள்ளிக்கோட்டை கிராமப் பகுதியில் பெண்களும் அப்படிப் போவார்களாம். மழைக் காலத்தில் கூடவா அப்படி நடந்து போவார்கள்? இன்னும் இரண்டு வாரம் போனால் மழைக்காலம் வந்து விடும். மழை வந்தாலும் அடித்து…




Read more »

எழுதி வரும் புது நாவல் ‘மிளகு’வில் இருந்து- சபோலாவும் பச்சைக் கற்பூரமும் வாசனையடிக்கும் அரண்மனைக் காலையுணவு

By |

எழுதி வரும் புது நாவல் ‘மிளகு’வில் இருந்து-   சபோலாவும் பச்சைக் கற்பூரமும் வாசனையடிக்கும் அரண்மனைக்  காலையுணவு

எழுதி வரும் ‘மிளகு’ நாவலில் இருந்து ஒரு சிறு பகுதி (சீராக்கப்பட வேண்டிய பிரதி) குறிப்பு – இங்கே தரப்படும் சிறு நாவல் பகுதிகள் எந்த வரிசையிலும் வருகின்றவை அல்ல. ——————————————————- “மகாராணி அவர்களின் அறுபதாம் பிறந்த நாள் கொண்டாட்டம் மிக சிறப்பாக இருந்தது. அந்த விருந்து என்ன சுவை இன்னும் நாவில் உண்டு.” பெத்ரோ நிஜமாகவே லயித்துச் சொன்னார். சென்னா தேவியின் முகம் மலர்ந்தது. கை இரண்டையும் கூப்பி எல்லாம் இறைவன் செயல் என்றாள். பிரதானி…




Read more »