Archive For பிப்ரவரி 14, 2021

என் ‘ஒரு கிராமத்துப் பெண்ணின் தலைப் பிரசவம்’ கவிதைத் தொகுப்பில் இருந்து

By |

பெண் கனவிலும் வரிசை தப்பாது வரும் வீடுகள் கடந்து கோபுர நிழல் நீளும் சின்ன வீதியில் நடக்க மாட்டேன். ஆற்றங் கரையில் ஊற்றுத்தோண்டிக் கதைகள் பேசி அலுத்த பின்னே குடம் நிறைத்து ஈரமண் உதிரும் சிற்றாடை அசையக் கூடநடந்து வந்த தோழிகளைத் தேட மாட்டேன். அப்பா வந்ததும் குதித்தோட அண்ணாவோடு காத்திருந்த கல் யானைப் படிகள் ஏறி, ஞாயிற்றுக் கிழமை நாடகங்களில் அம்மாவின் பழம்புடவை தரை புரளும் ராணியாய் வலம் வந்த திண்ணை கடந்து இருண்ட நடையுள்…




Read more »

அசோகமித்திரன் நினைவுகள் -2 (அல்லது அசோகமித்திரனை முன்வைத்துக் கொஞ்சம் நினைவலைகள்)

By |

அசோகமித்திரன் நினைவுகள் -2 (அல்லது அசோகமித்திரனை முன்வைத்துக் கொஞ்சம் நினைவலைகள்)

என் கட்டுரைத் தொகுப்பு ‘வேம்பநாட்டுக் காயல்’ கிண்டில் மின்நூலில் இருந்து – அசோகமித்திரன் என் அப்பாவின் சிநேகிதர். இரண்டு பேரும் தி.நகர் வாசிகள் ஆனதால், அது நடேசன் பூங்கா நட்பாக இருக்கும் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். அதற்கும் முற்பட்டதாம். ராணுவத்தில் இருந்த, அசோகமித்திரனின் உறவினரான, அவர்களுக்கு ஒரு தலைமுறை முந்திய யாரோடோ தொடங்கியதாக இருக்கும் என்று தெரிகிறது. அது தெரியாமலேயே, அசோகமித்திரனை கணையாழிக்காரராகவே நான் முதலில் அறிந்திருந்தேன். எண்பதுகளில் தில்லியில் நான் வேலை பார்த்தபோது கணையாழிக்கும் தீபத்துக்கும்…




Read more »

மலையாளமான தமிழ்

By |

என் கட்டுரைத் தொகுப்பு ‘ராயர் காப்பி கிளப்’ (அச்சுப் புத்தகம், மின்நூல்) கட்டுரை ஒன்று – வழியெனக்கு பிழயாத வண்ணம்முற்றருள் செய்யென் மனகுருந்திலிளகொண்டு புனல் கொண்டு வடிவாண்டு எழுந்த கொண்டல் பதரும் நெறி தழுத்த குழலி இளமதிக்கு துயர் பொங்கி விளையின்ற நுதலி சுழலின்றகிலலோகர் வணங்கின்ற குழலி துகில் புலித் தொலி கொள்ளின்றரநுதல் கண்ணிட பெட்டு அழிவு பெட்ட மலர்வில்லியெயனங்கனெ அவ்வளவு தோற்றின செருப்பமுள்ள வெப்பின் மகளே இது என்ன? பனிரெண்டாம் நூற்றாண்டில் எழுதப்பட்ட கேரள இலக்கியமான…




Read more »

அந்த நேரிசை வெண்பா வரிசைகளுக்குக் குறுக்கே மெல்ல நடந்து போனது

By |

என் ‘தியூப்ளே வீதி’ நாவலில் இருந்து – ஞாயிற்றுக்கிழமை. தியூப்ளே வீதி கொஞ்சம் போல் ஓய்வெடுத்துக் கொள்ளும் தினம் அது. ஆனாலும் இயக்கம் நிற்பதில்லை. தெருவின் கிழக்கு முனையில் பரிசுத்தமே செங்கலும் சுண்ணாம்புமாகி கம்பீரமாக உயர்ந்து நிற்கும் போன நூற்றாண்டுக் கட்டிடங்கள். அவை, நெருங்கி வந்து வந்து கரையைத் தொட்டு இரையும் கடலோடு சதா வேதாந்தம் பேசிக் கொண்டிருக்கும். அந்தக் கட்டிடங்களில் ஏதாவது ஒன்றின் உள்ளறையில் இருந்து எப்போதும் பியானோ இசையின் சில நறுக்குகள் கசிந்து தெருவில்…




Read more »

ஹாலிபேக்ஸ்

By |

என் ‘ராயர் காப்பி கிளப்’ கிண்டில் மின்நூலில் இருந்து – நான் இங்கிலாந்தில் யார்க்ஷயரில் கிரிக்கெட்டால் பிரசித்தமான லீட்ஸ் பக்கம் ஹாலிபாக்ஸ் என்ற மலைப்பிரதேச நகரத்தில் இருக்கிறேன். பாரதியாரின் சின்னச் சங்கரன் கதையில் வரும் கவுண்டனூர் மாதிரி, பத்து பதினைந்து நிமிஷம் காலாற நடந்தால் ஊர் முழுக்க வலம் வந்து விடலாம். மலைச்சரிவில் ஏற்றமும் தாழ்ச்சியுமாக இருக்கும் இந்த இடத்தில் எதற்கு இத்தனை காரும் வேனும் என்று தெரியவில்லை. ஊரில் இன்னொரு விசேஷம் எங்கே திரும்பினாலும் பாக்கிஸ்தானியர்கள்….




Read more »

ஓர்ம்மகளுடெ விருந்நு

By |

ஓர்ம்மகளுடெ விருந்நு காலம் என்ற பரிமாணம் சுருங்கிக் கொண்டே வருவதாகத் தோன்றுகிறது. அது வெறும் தோற்றம் இல்லை, முழுக்க உண்மை என்று அறிவியலைத் துணைக்கழைத்து வாதிக்க முற்படுகிறவர்களுக்கு என் வந்தனம். அவர்களுடைய வம்சாவளியும் அடுத்தடுத்து வரப்போகும் தலைமுறைகளும் எல்லாத் தேவதைகளாலும் வாழ்த்தப்படட்டும். இந்தக் கட்டுரை அவர்களைப் பற்றியதில்லை. கடந்துபோன காலத்தைப் பரிவோடும் நேசத்தோடும் நினைத்துப் பார்க்கும் என் போன்ற சாமானியர்களைக் குறித்து. ஒற்றைச் சாட்டமாகக் காலம் தலைதெறிக்க ஓடிக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில் – இது வெறும்…




Read more »