Archive For மே 25, 2020

ராமோஜி ஆங்கரே 1698 – வண்ண மயில் என்ற கப்பலில்

By |

பிற்பகல் நான்கு மணி – புவனலோசனி எழுந்திரு. அவர் தான். தமிழில் சொன்னார். என் காதுகளையே நம்பாமல் நான் அவர் நெஞ்சில் கை ஊன்றி அந்தக் காந்தக் கண்களுக்குள் ஊடுருவிப் பார்த்தேன். தமிழ் தெரியுமா? ”தெரியாமல் என்ன, தஞ்சாவூர்காரனுக்கு மூச்சுக் காற்றுக்கு அடுத்தது பேசுகிற பாஷை தானே”. நான் எழ முற்பட்டேன். அவருடைய இடது கரம் திரும்ப அழுத்தமாக என்னை அவர் நெஞ்சில் பரவிக் கிடக்க வைத்தது. இன்னொரு கரம் காயப்படாமல் இருந்தால் என்ன செய்திருக்குமோ. அவர்…




Read more »

ராமோஜியம் – வளர்ந்து வரும் புதினத்தில் ‘1698 – ராமோஜி ஆங்கரே, காரைக்கால் புவனி’ அத்தியாயத்திலிருந்து

By |

நான் நேற்று இந்தக் குறிப்பை எழுதத் தொடங்கியபோது கடலில் இரண்டு கலங்களைக் கண்டேன். இரண்டும் மங்கிய வெளிச்சத்தில் சரியாகத் தெரியாவிட்டாலும் இங்கிலாந்து கொடி போட்டவை என்பதை அறிந்து நிம்மதி கைவந்தது. என் மாலுமியிடம் அந்த இங்க்லீஷ் கப்பல்களை இங்கே நம் கப்பல் பக்கம் வரவழைக்கச் சொன்னேன். முக்கியமாக மாலுமி தேர்ச்சியடைந்தவனாக இங்கே இல்லை. சாப்பாட்டுக்கு எடுத்து வந்ததும் பாதி கெட்டுப்போய் இன்னும் மூன்று அல்லது நான்கு நாளைக்கு வருவதாக மட்டும் இருந்தது. அந்தக் கப்பலில் நிச்சயம் கப்பலோட்டத்…




Read more »

புதினம் ராமோஜியம் – கடல் கொள்ளைக்காரர்கள் 1698 அத்தியாயத்தில் இருந்து

By |

கப்பல் மேல்தளத்தில் ஓடிக் கொண்டிருக்கிற சத்தம். பார்த்து விட்டு வந்து எழுதுவதைத் தொடரலாம் என்று நினைத்தது பூர்த்தியாக ஒரு வாரம் ஆனது ஆச்சரியத்திலும் ஆச்சரியமாகப் போனது. வந்தவர்கள் கடற்கொள்ளைக் காரர்கள். கப்பலில் புகுந்த அந்த சண்டாளர்கள் இந்தப் பகுதி கடலில் சுற்றி வந்து கொள்ளையடிப்பவர்கள். பெரும்பாலும் இவர்கள் நீளமாக தாடி விட்ட, அழுக்கும் குமட்டும் துர் நாற்றமும் வீசும் வெள்ளைக்காரர்களாக இருப்பார்கள். கருப்புக் கடல் கொள்ளைக்காரர்கள் உக்கிரமானவர்கள். இவர்கள் பிடித்தெடுத்த வியாபாரக் கப்பல்களில் இருக்கும் பொருளை மட்டும்…




Read more »

சுவர்ணதுர்க்கம் போகும் வழியில் – ராமோஜியம் நாவலில் இருந்து

By |

அரபிக் கிழவனைத் தவிர எல்லோருக்கும் ஏதோ சந்தர்ப்பத்தில் கொப்புளங்களைப் பரிசளித்தேன். அரபு வீட்டு மாமன் உறவில் ஒரு கேணன் என்மீது இத்தனைக்கும் மேல் காமம் கொண்டு ஆலிங்கனமும் உபசாரமும் வேண்டுமென்று கோரிக்கை வெளியிட அவன் மேல் கொப்புளங்கள் உருவாகச் செய்து அந்த எரிச்சலில் உடை எல்லாம் களைந்து ஓட வைத்து அரபுக் கிழவனுக்கும் மற்ற ஆண்களுக்கும் சங்கடத்தை உருவாக்கினேன். பெண்கள் வெகுவாக ரசித்த காட்சி அது. அரபுக் கிழவனுக்கு நான் பெரிய இடைஞ்சலாகப் போனது அப்படித்தான். என்…




Read more »

நாவல் ராமோஜியம் – வருடம் 1698 காரை புவனி – அத்தியாயத்திலிருந்து

By |

”புவிசி உன் புதுப் பெயர் பெண்ணே.. உன்னை ஆகமட்டும் மாற்றி பெயர், ஊர், அடையாளம் எல்லாம் வேறே இப்போ.. ”. — — — — அந்த அயோக்கிய கிழவன் சொன்னதாக மரதகம் இன்னமும் நிறையக் கூறினாள். அசங்கியம் என்பதால் அவற்றை இங்கே குறிப்பிடாமல் தவிர்த்தேன். நானதைக் கேட்ட அடுத்த வினாடி என் சாபம் புறப்பட, அவன் அழுகிப் புழுத்த பெருச்சாளியை எலிப்பொறியோடு அணைத்து முகர்ந்தபடி சொர்க்கம் கண்டதாக ஆர்பரித்தான். அவனைச் சுற்றி எழுந்த துர்க்கந்தத்தை மேலும்…




Read more »

வருடம் 1698 – காரைக்கால் புவனி அத்தியாயத்தில் இருந்து – நாவல் ராமோஜியம்

By |

முக்கியமாக உப்பையும் சர்க்கரையையும் இடம் மாற்றி ருசிக்கத் தருவதும், அவள் உண்ட கோழி மாமிசத்தை அவளே வாயில் இருந்து தன்னிச்சையாக எடுத்தலும், கதவில் மிகப் பெரிய தேளும் ஜன்னலில் கருஞ்சிலந்தியுமாக அவளை நோக்கி ஊர வைத்தலும், அவளை ஓவியக்காரன் வரைந்த ஓவியத்தில் அவள் தலைக்குப் பதிலாகக் காண்டாமிருகத் தலையை வைத்தலுமாக நான் நடப்பித்து, அவளுடைய அழுகையையும் பயத்தையும் ரசித்துப் பார்க்க ஆரம்பித்தேன். அவளுடைய வாடிக்கையாளரான நாசூர்ஜமீன் நாலாம் பாத்தியக்காரனோ, பண்ணையாரின் வைப்பாட்டி மகனோ வரும்போது சாக்கடையை மேலே…




Read more »