Novel – Viswaroopam launchவிஸ்வரூபம் நாவல் வெளியீட்டு விழா

விஸ்வரூபம் நாவல் வெளியீட்டு விழா அழைப்பிதழ்

திண்ணையில் பிரசுரமான ‘விஸ்வரூபம்’ நாவல் நூல் வடிவம் கண்டு வெளியீட்டு விழா மார்ச்2 சனிக்கிழமை சென்னையில் நடக்கிறது. வாசக நண்பர்கள் அவசியம்  கலந்து கொள்ள அன்போடு அழைக்கிறேன்.

அரசூர் வம்சம் மற்றும் அதனைத் தொடர்ந்து விஸ்வரூபம் என்ற என் இரு நாவல்களைப் பிரசுரம் செய்த திண்ணைக்கு பிரத்யோகமாக நன்றி சொல்ல வேண்டும். அவ்வப்போது பல காரணங்களால் இடைவெளி விட்டு நாவலை வளர்த்துப் போய், எழுதி அனுப்பிய அத்தியாயத்தில் திருத்தம் போடச் சொல்லி நச்சரித்து எல்லாத் தொல்லையும் நான் கொடுத்தாலும் திண்ணை ஆசிரியர் பொறுமையின் சிகரமாக அவற்றை எடுத்துக் கொண்டு நாவல் பிரசுரமாக உறுதுணையாக நின்றார். திண்ணைக்கு எப்படி நன்றி சொல்ல? அடுத்த அரசூர் நாவல் ‘அச்சுதம் கேசவம்’ திண்ணையில் விரைவில் தொடங்கி, மேலும் தொல்லை கொடுத்துத்தான்.

விஸ்வரூபம் – நாவல் வெளியீட்டு விழாவுக்கு நண்பர்களை அன்புடன் அழைக்கிறேன்.
நாள் மார்ச் 2 2013 சனிக்கிழமை

அழைப்பு இணைப்பில் உள்ளது.

கேளிர் வருக.

அன்போடு

இரா.முருகன்

———————————————————————

ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு வார்த்தை அவ்வப்போது நினைவில் திரும்பத் திரும்ப வரும்.

’வெற்றிலைத் துணுக்கு பல்லுக்கு இடையே சிக்கியது போல’ என்று அசோகமித்திரன் சார் எழுதிய ஞாபகம். அது நகுலனின் நாவல்களில் – ஒவ்வொரு நாவலுக்கும் ஒரு சொல் – ‘ஓ ஜானேவாலா’, ‘ஆசிப் பெண்ணே’ என்று அங்கங்கே உரைநடுக்கு இடையே வந்து போகிற ’அசைச் சொல்’ மாதிரி.

காலையில் யாரோ தெருவில் யாரிடமோ ‘அய்யே’ (சென்னை தொனியில் பரிகாசம்) என்று சொன்னதைக் கேட்டபடி நடந்தேன்…

அய்யே இல்லை அய்யோ.. ஐயோ அந்தக் கணத்தில் பலமாக ஆட்கொண்டது. இது அவலம் இல்லை, வியப்பு.

வேறு யார், கம்பநாட்டாழ்வான் தான்.

வெய்யோன் ஒளி தன் மேனியின்
விரி சோதியின் மறைய,
பொய்யே எனும் இடையாளொடும்,
இளையானொடும் போனான் –
‘மையோ, மரகதமோ, மறி
கடலோ, மழை முகிலோ,
ஐயோ, இவன் வடிவு!’ என்பது ஓர்
அழியா அழகு உடையான்.

கஙகைப் படலத்தில் வரும் இந்த அழகிய கவிதையில் ஐயோ தவிர மோனையில் வரும் வேறு சொல்லைப் பொதிந்து பாருங்கள்.. கவிதை ரொம்ப சுமார் ரகமாகி விடும்..

கவிதைன்னா சும்மாவா..கவிஞன் தான் எழுதமுடியும்!

——————————————–

அருண் கொலட்கரின் மராட்டி கவிதைத் தொகுப்பு ‘சிரிமிரி’யில் இருந்து (மொழியாக்கம் – இரா.முருகன்)

படம்

(மும்பை சிவப்பு விளக்குப் பகுதியில், வயிற்றுப் பிழைப்புக்காக உடல் விற்கும் ஒரு பெண், பண்டரிபுரம் திருவிழா பார்க்கப் போகிறாள். கண்ணனும் ருக்மணியும் அங்கே வழிபடப் படும் தெய்வங்கள். திருவிழாக் கடைகளில் ஒன்று – தலைவர்கள், சினிமா நடிகர்கள் போல யார் கூட வேண்டுமானாலும் சேர்ந்து நின்று புகைப்படம் (trick photography) எடுக்கும் இடம். அங்கே நுழைகிறாள் இவள்…)

ஏனாயா நீதான் படம் பிடிக்கிற ஆளா ?
என் படம் ஒண்ணு எடுத்துக் கொடு.
கண்ணணோடும் ருக்குமணியோடும்
நான் சேர்ந்து நிற்கற மாதிரி.

ருக்குப்பொண்ணு என் பீச்சாங்கைப் பக்கம்,
கண்ணன் வலப்புறம். நடுவிலே நான்.
அப்படித்தான் வேணும் எனக்கு.

அடா ருக்கு.. நகரு..கண்ணன் பக்கத்திலே
நான் நிற்கப் போறேன்.

கண்ணா..நீ ரொம்ப மோசம்ாயா.
இப்படித்தானா விறைப்பா நிக்கறது ?
எல்லாரும் அட்டைக் கடவுள்னு
கிண்டல் செய்யப் போறாங்க.

என் பக்கத்திலே வாடா கண்ணா..
என் தோளில் கை போட்டு அணைச்சுப் பிடி.
அப்படித்தான். இது நல்லா இருக்கு.

ருக்கு..உனக்கு ஆனாலும் பொறாமை நிறைய.
கவலைப் படாதே. மும்பை திரும்பும் முன்னால்
உன் கண்ணனை உன்னிடமே விட்டுடறேன்.

படக்காரரே..படத்தில் நல்லதா
வர்ணம் வரணும்.. தெரியுதா?
என் சேலை நீல நிறத்தில் இருக்கணும்.
கண்ணனின் உடுப்பும் அதே நிறந்தான் வேணும்.

நான் போய் திருவிழாக் கடையெல்லாம்
பார்த்து விட்டு, ராட்சச ராட்டினத்தில்
ஏறிச் சுற்றிவிட்டு வரேன்.
ஒரு கம்பளிப் போர்வை கூட வாங்கணும்.
நேரம் இருந்தால் மரணக் கூண்டையும்
எட்டிப் பார்த்து விட்டு வருவேன்.

ஒரு அரைமணியில் திரும்பி வந்து
படத்தை வாங்கிக்கலாம் இல்லையா ?

———————————————–

நாயுடு மெஸ் – 22 (அல்லது வேறே எண்)

நாயுடு மெஸ்ஸில் ராச்சாப்பாடு சாப்பிட்டு ஓல்ட் மகாபலிபுரம் ரோடு கம்ப்யூட்டர் கம்பெனியில் பொட்டி தட்டிக்கிட்டிருந்த பிள்ளை இங்கிலாந்துக்கு ப்ராஜெக்ட் ஒர்க்ன்னு போயிருக்கான். அங்கே இருந்து நாயுடுவுக்கு போன் செஞ்சு ஒரு பாட்டம் சாப்பாடு சரியில்லேன்னு புலம்பியிருக்கான் போல.. போதாக் குறைக்கு அங்கே குதிரை மாமிசத்தையில்லே போடறானுகளாம்.. நாயுடு வரவன்போறவன் கிட்டே எல்லாம் சொல்லிட்டு இருக்கார் –

லச்சுமணன் பேசினான்பா லண்டனுக்குப் போனபிள்ளை
நச்சுனு சாப்பிட்டு நாளாச்சாம் மிச்சம்
சதுராடி ஊர்திரும்ப சாலவுந்தி காலம்
குதிரைதான் திங்கறானாம் போ.

—————————————————

writing a book on Banking entirely in tweets. Hv begun with Forex & Money Market operations. To cover collateralization, securitization,CASA

——————————————–

Frm WshntonPost Oscar 13 live photos,I find H’wood actresses make a sweeping fashion statement with 10 ft long dress covering d road as well

——————————————————-

Professor P.V.Indiresan passes away. He never minced words when expressing his thoughts though you/I may not be with him at times.. RIP sir

————————————–

‎’Infosys turning the corner’ – JPMorgan. Trust they don’t mean Infy is going in circles

————————————

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன