தேளம்மை வந்த முதல் அத்தியாயம் – என் புது நாவல் – தினை

திண்ணை இணைய இதழில் தொடங்கியிருக்கிறது என் அடுத்த நாவல் ‘தினை’ அத்தியாயம் ஒன்று
//
அழகான மனுஷித் தலையும் உடல் இறுதிப் பகுதியில் இன உறுப்பு படர்ந்திருக்க, பெருந் தொடைகள் உடையின்றி மின்ன, அங்கே கீழே தொடங்கிய வளைந்து நிமிர்ந்த கொடுக்கு உள்ளே கருநீல நிறத்தில் மின்னும் விஷத்தோடு ததும்ப பாதி தேளான தேளம்மை ஏமப் பெருந்துயில்-முன் அரங்கில் Pre-Cryostasis Bay கண்ணாடிப் பேழைக்குள் கிடத்தப்பட்டாள். ஏமப் பெருந்துயிலில் அமிழ இங்கே சிலர் காத்திருப்பில் – தொந்தரவு செய்யாதீர் என அறிவிப்பு சொன்னது.

மயக்க மருந்து செலுத்துகிற மனுஷ மருத்துவரின் கையிடுக்கு நறுமணம் நாசியில் பட தேளம்மைக்குத் தன் தேள் வடிவம் பற்றிய பிரக்ஞை நிலைக்கத் தொடங்கியது.

பெரிய நகரத்தின் பாதாளச் சாக்கடை பற்றியதான நினைவு அது. கருத்து அடையாகச் சுவர்போல் கசடு நாறி நீள நெடுக துர்கந்தத்தோடு கழிவும், மனிதக் கருவும் அடித்து வர வேகமின்றி ஓடிவரும் பாதாளச் சாக்கடைக் கரையில் அந்த வாடை, இருளில் தேள்களின் காலனியில் திமிர்த்துச் சுற்றி அலைந்திருந்தாள் தேளம்மை.

அவள் கழிவு மலையேறி கழிவுநீர் ஓடையில் குதித்து அவ்வப்போது கழிவு ஓடைப் பெருக்கில் வேறேதாவது பிராணிகளை அடித்து வரும்போது முதல் தாக்குதலாக கொடுக்கைச் சுழற்றி எதிரியின் உடலில் மிருதுவானதாகத் தோன்றும் இடத்தில் கொட்டிவிட்டு நிற்பாள்.
//

நாவல் ‘தினை’ பூர்வாங்கம்

ஒலி வடிவம் -திருமதி சரஸ்வதி தியாகராஜன், பாஸ்ட்டன்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன