பாரதி போற்றுதும், வவேசு போற்றுதும்

பாரதி போற்றுதும், வவேசு போற்றுதும்

—————————————

அன்புக்குரிய நண்பர் டாக்டர் வ வே சுப்பிரமணியன் அவர்கள் Valiyur Subramanian தொடர்ந்து ஐம்பது புதன்கிழை மாலை (இந்திய நேரம்) 6:30 முதல் இரவு 7:30 வரை ஒரு வாரம் தவறாமல் பாரதி புதையலில் அமிழ்ந்து கண்ணன் பாட்டு மற்றும் புதிய ஆத்திசூடி என்று ஒவ்வொன்றாக பாரதி படைப்பு்களை நுண்ணிய ரசானுபவத்தோடு பகிர்ந்து கொண்டிருக்கிறார்.

 

 

குவியம் இணையப்பத்திரிகை மற்றும் இலக்கிய அமைப்பு ஒருங்கமைத்த இலக்கிய அமர்வுகள் இவை.

 

 

ஓசைப்படாமல் வ.வே.சு செய்த சாதனை இது.

 

’ஓசை பெற்று உயர் பாற்கடல் உற்று, ஒரு

பூ(ச்)சை முற்றவும் நக்குபு புக்கென’ வாரம் நூறு நண்பர்களாவது ஸூம், யுட்யூப் மூலம் பாரதி பாற்கடலைச் சுவைத்து வருகிறோம்.

 

நேற்று (19 ஏப்ரல் 2022 புதன்) புதிய ஆத்திசூடி உரை முற்றுப்பெற்றது.

 

அடுத்து தோத்திரப் பாடல்கள் தொடங்கும். கவிதைகளை அடுத்து பாரதி கதைகள் தொடரும்.

 

நண்பர் வ.வே.சுவுக்கு நன்றி. வாழ்த்துகள்

 

சேர வாரீர் சகத்தீரே!

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன