Archive For ஜூலை 12, 2023

எலிசபெத் விண்ட்ஸர் என்றொரு முதுபெண்

By |

எலிசபெத் விண்ட்ஸர் என்றொரு முதுபெண்

துளுவ அரசி சென்னபைராதேவியின் வரலாற்றை அடிப்படையாக வைத்து ’மிளகு’ பெருநாவல் எழுதிய போது அடிக்கடி நினைவில் வந்தவர், சென்னா போல் நீண்ட காலம் இங்கிலாந்து மகாராணியாக இருந்த, அண்மையில் காலம் சென்ற இரண்டாம் எலிசபெத் மகாராணி. சென்னாவுக்கோ பொன்னியின் செல்வனுக்கோ கிடைக்காத, நிகழ்ந்ததுமே திரையில் நிகழ்த்தப்படும் நுட்பமும் விரிவும் கொண்ட, புனைவு கலந்த வாழ்க்கைச் சித்தரிப்பு எலிசபெத்துக்குக் கிடைத்தது. நெட்ஃப்ளிக்ஸில் எலிசபெத் மகாராணியின் வரலாறு இதுவரை ஐந்து பருவங்களாக, அவை ஒவ்வொன்றும் பத்து ஒருமணிநேர எபிசோட்கள் ஆக…




Read more »

மகாராணியின் செலவுக் கணக்கு

By |

மகாராணியின் செலவுக் கணக்கு

பெருநாவல் மிளகு அத்தியாயம் பகுதி – சொல்வனம் இலக்கிய இதழ் வழியே ”சதுர்முக பசதி. நான்கு வாயில் கோவில். பன்முக மெய்யின் உருவகம். உண்மை என்பது ஆன்ம லயிப்பாக இருக்கலாம். உண்மை என்பது மனதில் நான் யார் என்று சதா கேட்டுத் தேடியடைவதாக இருக்கலாம். உண்மை என்பது உறவுகளின் நதிமூலம் தெளிவதாக இருக்கலாம். உண்மை என்பது, நட்பும் காதலும் காமமும் பாசமும் சென்றடையும் இறுதி நிலையாக இருக்கலாம். தேடிப்போய்த் திரும்ப வந்தடைந்த தொடக்கமாக இருக்கலாம். உண்மை என்பது…




Read more »

தேள் மொழியில் புகுந்த cerebral venom, induction oven, parley

By |

தேள் மொழியில் புகுந்த cerebral venom, induction oven, parley

தினை அல்லது சஞ்சீவனி நாவலில் இருந்து, சொல்வனம் வழி ஒரு சிறு பகுதி காலப்படகு காலத்தில் முன்னும் பின்னும் பத்து நாள் போகுமளவு பழுது திருத்தியிருந்தது. முழுக்க முன்னே, பின்னே நூற்றாண்டுகள் போய்வர இன்னும் நிறையச் செய்ய வேண்டியது உண்டு. வேறு கால ஓடத்தை அனுப்பி வைத்து நம்மை இந்த இருபதாம் நூற்றாண்டுத் தொடக்கத்திலிருந்து மீட்டுப் போனால் என்ன? வானம்பாடி குயிலியைக் கேட்டாள். செய்யலாம் தான். ஆனால் வருஷம் – மாதம் – வாரம் –நாள் –மணி-நிமிடம்…




Read more »

ஒரு மடக்கு பால் பாயசம்

By |

ஒரு மடக்கு பால் பாயசம்

பெருநாவல் மிளகு-வில் இருந்து சொல்வனம் வழியாக ஒரு மடக்கு அம்பலப்புழை பால் பாயசம் அம்பலப்புழை ஸ்ரீகிருஷ்ணன் அதிகாலை ஐந்து மணிக்குச் சுறுசுறுப்பாக தரிசனம் அளித்துக் கொண்டிருந்தான். ஐந்து மணி காலை எல்லாம் ஒன்றுமே இல்லை இவனுக்கு. உறங்கினால் தானே புதுசாக விழிக்க. விடிகாலை அல்லது நடுராத்திரி கழிந்த மூன்று மணிக்கு மேல்சாந்தியையும், தந்த்ரியையும் எழுப்பி விடுவான் இவன். இந்த பூஜாரிமார் கோவில் தெப்பக்குளத்தில் ஒரு சம்பிரதாயத்துக்காக நீராடி, கோவில் பரப்பில் அருவி போல் மிதமான சூட்டோடு வெந்நீர்…




Read more »

எழுதிச் சொல்லித் தந்த என் ஆசான் -எழுதச் சொல்லித் தந்த என் ஆசான்

By |

எழுதிச் சொல்லித் தந்த என் ஆசான் -எழுதச் சொல்லித் தந்த என் ஆசான்

என் ஆசிரியர் திரு ருத்ர துளசிதாஸ் அவர்கள் அகவை 90-இல் அடியெடுத்து வைக்கிறார். அவருக்கு என் வணக்கம். மலையாளத்திலிருந்து தமிழுக்கு அவர் மொழிபெயர்த்த எத்தனையோ நூல்களுக்காக அவரை வாழ்த்துகிறேன். தெலுங்கில் இருந்து மொழிபெயர்த்த நூல்களுக்காகவும் தான். நான் முதல் முறையாக அவர் எழுதிப் படித்தது 1969-ல். அவர் என் வேதியியல் பேராசிரியர் -புகுமுக வகுப்பில். அவர் கரும்பலகையில் எழுத நான் வாசித்தேன் – Cu + H2SO4 → CuSO4




Read more »

கடலரசனைக் காண வந்த பரங்கி – மிளகு பெருநாவலில் இருந்து

By |

கடலரசனைக் காண வந்த பரங்கி – மிளகு பெருநாவலில் இருந்து

பெருநாவல் மிளகு – ஸாமுரினை போர்த்துகீஸ் தூதர் சந்திப்பது இருட்டுவதற்குள் கொட்டாரத்துக்கு, என்றால் அரண்மனைக்குப் போய்ச் சேர்ந்து ஸாமுரின் அரசரோடு சந்திப்பு நிகழ்த்த பெத்ரோவுக்கு வாய்த்தது. ஸாமுரின் என்று கேட்டுக் கேட்டு அவருக்கு ஒரு முகம் மற்றும் ஆளுமை அடையாளத்தைக் கற்பனை செய்திருந்தார் பெத்ரோ. முன்பல் விழுந்த, வயதான சிரியன் கத்தோலிக்க பிஷப்பாக, சதை பிடித்து, முழு அங்கி தரித்து, தலை முக்கால் பகுதி வழுக்கை விழுந்து, குரல் தழதழத்துக் கழுத்தறுக்கக் கத்தி தீட்ட வைக்கிறதான நைச்சியமாகப்…




Read more »