Archive For நவம்பர் 2, 2019

அப்பா நினைவில் – ‘அம்பி’ சிறுகதை

By |

இன்று ஐப்பசி மாதம் சஷ்டி. என் தந்தையார் திரு.என்.எஸ்.ராமசாமி ஐயர் 1997-ல் காலமான தினம். என் வாசிப்பையும், எழுத்தையும் ஊக்குவித்த அப்பா நினைவில் கண் கலங்குகிறேன். இந்தக் கதை ‘அம்பி’யில் வரும் அம்பி அவர்தான். 1920-களில் நிகழ்வது இது ’இரா.முருகன் கதைகள்’ பெருந்தொகுப்பில் இருந்து – ————————————————————————————- இரா.முருகன் சிறுகதை : அம்பி அம்பியைக் கடைசியாகத்தான் சேர்த்துக் கொண்டார்கள். மூன்று பேராகப் போக வேண்டாம் என்று சேஷப்பா சொன்னதாலேயே அவனுக்கு வரமுடிந்தது. ‘இதுக்கென்ன மூணும் நாலும் …..




Read more »

சிறுகதை – மூடல் மஞ்சு

By |

வாதினி தீபாவளி மலரில் வந்திருக்கும் சிறுகதை – ‘மூடல் மஞ்சு’ தியூப்ளே வீதி நாவலில் ஓர் அத்தியாயமாக வைத்திருந்து, மையக் கதையோட்டத்தோடு இசைந்து வரச் சற்று கடினமாக இருந்ததால், இங்கே சிறுகதை ஆனது. மூடல் மஞ்சு இரா.முருகன் மஞ்சுபாஷிணி. அது அவளுடைய சொந்தப் பெயர். மஞ்சுளா. இது வீட்டில் கூப்பிடும் பெயர். நாங்கள் வைத்தது. மஞ்சப் பாப்பா. அலுத்துப்போய் வேறே என்ன மாதிரி வைக்கலாம் என்று யோசித்துக் கொண்டிருந்தபோது அஜந்தா தியேட்டருக்கு ஒரு புது மலையாள சினிமா…




Read more »

தீபாவளி 1975

By |

1975 நாவலில் இருந்து – 1975 – தில்லி தீபாவளி தீபாவளிக்கு ரெண்டு நாள் முந்தி கரண்ட் அக்கவுண்ட் வாடிக்கையாளர்கள் மும்முரமாகி விடுவார்களாம். அவர்கள் என்றல்ல மொத்த தில்லியுமே பிசியாகி விடும். ஆப்பிள், ஆரஞ்ச் என்று பழக்கடையில் விலைபோகாமல் அடுக்கி இருந்த சரக்கெல்லாம் அரைவிலை, கால்விலையில் கிலோ கணக்காக வாங்கப்பட்டு, பாலீஷ் போட்டுக் கண்ணாடி போல மினுமினுக்க வைக்கப்படும். அடுத்து சோனியான முந்திரிப்பருப்புகள் குவியல் குவியலாக சற்றே வறுபட்டு வைக்கப்படும். கொஞ்சம் பழசானாலும் பழைய மது போல…




Read more »

சக்திக் களஞ்சியம்

By |

இந்த மாதம் எழுதியது, மொழிபெயர்த்தது ஆகக் குறைவுதான். நிறையப் படித்தேன், படித்துக் கொண்டிருக்கிறேன். போன வாரம் கிருஷ்ணகான சபாவில் ‘தமிழ் வளர்த்த சான்றோர்’ நிகழ்ச்சியில் அன்புக்குரிய பேராசிரியர் வவேசு அவர்களுடன் சக்தி வை.கோவிந்தன் பற்றி, அவை நிறைந்த கலந்துரையாடல். நிகழ்ச்சியில் பேச, சக்தி கோவிந்தன் நடத்திய பத்திரிகைப் படைப்புகளின் தொகுப்பான ‘சக்தி களஞ்சியம்’ இரண்டு தொகுதிகளை – கிட்டத்தட்ட 1500 பக்கம் – படிக்க வேண்டியிருந்தது. கூடவே திரு பழ.அதியமான் எழுதிய ‘சக்தி வை.கோவிந்தன் – தமிழின்…




Read more »

a short story – The Bottle

By |

A short story from my collection, The Polymorph The Bottle The ferry was on the other bank of the river. At least twenty, all men, were there at the boat jetty along with Kesavan, waiting for the ferry to arrive. Except Kesavan and a shabby-looking elderly person with crutches held under his arms, others had…




Read more »

‘நன்றி வாடை’ – புதிய சிறுகதை

By |

நன்றி வாடை (இரா.முருகன் – தீராநதி செப்டெம்பர் 2019) சங்கரன் மார்ச் 13, 2001 நடுராத்திரிக்கு புது கருநீல சூட்டும், வெள்ளைச் சட்டையோடு கருப்பு நிற டையும் அணிந்து, மினுமினுக்கும் ஷூக்களோடு மீனம்பாக்கம் விமானநிலையம் வந்து சேர்ந்தான். முப்பது வயதுக்காரன். அதியதிகாலை ஒன்றரை மணிக்கு சிங்கப்பூர் வழியாக எங்கேயோ போகும் சர்வதேச விமானத்தில் ஜன்னல் இருக்கை அவனுக்கு. அடுத்த இருக்கை சாரு என்ற சாருமதிக்கானது. சாரு முப்பத்தைந்து வயது அசிஸ்டெண்ட் வைஸ் பிரசிடெண்ட். சங்கரனுக்கு இரண்டு லெவல்…




Read more »