அந்தக் காலத்தில் அர்ஜூன நிருத்தம் இல்லை, மயில்பீலி தூக்கம் தான் பழைய பெயர்

வாழ்ந்து போதீரே நாவலில் இருந்து (வரிசை தப்பாமல்)

எல்லோரையும் ஒன்பது மணிக்கு வரச் சொல்லி இருக்கேன். இன்னும் அஞ்சு நிமிஷத்துலே இங்கே இருப்பாங்க.

நான் கூட அதுக்குத் தான் வந்தேன்.

துடைப்பத்தை உயர்த்திப் பிடித்தபடி முன்னால் வந்த சாமுவைப் பார்த்த பெரியம்மா கொஞ்சம் பின்வாங்கினாள். இவனுக்கும் அர்ஜுன் நிருத்தத்துக்க்கும் என்ன தொடர்பு?

அர்ஜுனன், சகாதேவன் எல்லாம் அப்புறமா வந்தது. இங்கே இதை மயில்பீலி தூக்கம்னு தான் சொல்றது. பகவதி கோவில் உற்சவத்திலே நான் ஆடுவேன்.

குடைக்கார சாமு சொன்னான். எங்கே ஆடு பார்க்கலாம் என்றார் சாஸ்திரி ஏப்பம் விட்டுக் கொண்டு.

பன்னி மாதிரி கண்டதையும் மேஞ்சுட்டு வந்த திமிர். திலீப் நினைத்தான்.

திலீப், நீ போய்ப் பசியாறிட்டு வா.

பெரியம்மா அனுப்பி வைத்தாள்.

‘இந்தா நூறு ரூபாயாத் தான் இருக்கு. சாப்பிட்டுட்டு பத்திரமா மீதி கொண்டு வந்துடு’

பாக்கெட்டில் இருந்து நிஜாம் பாக்கு வாசனையோடு பணம் எடுத்து நீட்டிய பிஸ்கட் சாஸ்திரியை ஒரு நாள் திலீப் சொறிநாய் பாதி தின்னத் தரையில் விழுந்த பிஸ்கட் எடுத்துத் தின்ன வைப்பான்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன