தினை பெருநாவலும் Recherche PostModernism-ம்

அடுத்த நாவல் ‘தினை’ ஏழு அத்தியாயங்கள் நிறைவடைந்து எட்டாவது அத்தியாயம் எழுதப்பட்டுக் கொண்டிருக்கிறது.

என்ன ழானர்?

 

No Magical Realism, surrealism, historical fantasy … Not plain vanilla post modernistic by any stretch of imagination..

 

Let us categorize it as Hysterical Realism -recherché postmodernism.

 

This is how the novel begins –

நாவல் தினை பூர்வாங்கம்

 

மலைப் பிரதேசம் பறவைக் கூச்சலில் விழித்தெழுந்த பொழுதில் மிருகங்கள் பறக்கத் தொடங்கின. இது வழக்கம்தான். முக்கியமாகக் காட்டுப் போத்துகளும் எறும்பு தின்னிகளும் முதலில் பறக்கும். அடுத்து நரிகள் ஊளையிட்டபடி தெற்கு வடக்காகப் பறந்து போகும். முயல்கள்? கிழக்கிலிருந்து மேற்காகப் பறக்கும். எலிகள்? அவை பறந்தால் என்ன பறக்காவிட்டால் என்ன? யானைகள்? அவை பறந்து நிறைய சேதம் விளைவித்ததால் அவற்றுக்கு அந்தத் திறன் இல்லாதபடி செய்யப்பட்டு விட்டது. என்றாலும் மதம் பிடித்து மதநீர் வாயில் கசியும்போது அவை தரைக்கு சற்றே உயரமாக, அதாவது ஒரு ஐந்து வயதுச் சிறுவன் உயரத்தில் பறப்பதாகச் சொல்லப்படுகிறது.

//

எது எழுதினாலும் புரியும்படியாக இருக்கும். இதுவும்.

 

சர்வம் கிருஷ்ணார்ப்பணம்.

 

 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன